வரலாற்றில் இன்று (31.01.2024 )

வரலாறு என்பது இறந்த காலத்தில் நிகழ்ந்த விஷயத்தை பற்றி நாம் தெரிந்து கொள்ளும் ஒன்றாகும். குறிப்பாக வரலாற்றில் ஒருவர் செய்த சாதனைகள், தியாகங்கள், சிறப்புகள் இதுபோன்ற பலவகையான முக்கிய விஷயங்கள் பற்றி அனைவருக்கும் தெரியப்படுத்தும் விஷயமாகும். தெளிவாக சொல்ல வேண்டும் என்றால் தங்கள் வாழும் காலத்தின் பின்னணியில் கடந்த காலத்தின் நிகழ்வுகளை விளக்கி வரலாறாக எழுதுகின்றனர். சரி இந்த பதிவில் நாம் நமது வாழ்வில் கடந்து செல்லும் ஒவ்வொரு நாட்களிலும் ஏதாவது ஒரு விஷயம் நிகழ்ந்திருக்கலாம் அந்த  வகையில் வரலாற்றில் இன்று என்ன நாள்? என்பதை பற்றி நாம் நமது மின்கைத்தடியின் இந்த தொகுப்பில் படித்து தெரிந்து கொள்வோம் வாங்க..

வரலாற்றில் இன்று | Today History in Tamil

ஜனவரி 31  கிரிகோரியன் ஆண்டின் 31 ஆம் நாளாகும். ஆண்டு முடிவிற்கு மேலும் 334 (நெட்டாண்டுகளில் 335) நாட்கள் உள்ளன.

நிகழ்வுகள்

314 – மில்த்தியாதேசுக்குப் பின்னர் முதலாம் சில்வெஸ்தர் திருத்தந்தையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
1208 – லேனா என்ற இடத்தில் சுவீடன் மன்னர் இரண்டாம் சிவெர்க்கருக்கும் இளவரசர் எரிக்குக்கும் இடையே இடம்பெற்ற போரில், எரிக் வென்றதை அடுத்து, அவன் இரண்டாம் எரிக் என்ற பெயரில் மன்னராக முடிசூடினான்.
1606 – வெடிமருந்து சதித்திட்டம்: இங்கிலாந்து மன்னர் முதலாம் யேம்சிற்கு எதிராகவும் நாடாளுமன்றத்திற்கெதிராகவும் சதி முயற்சியில் இறங்கியமைக்காக கை பாக்சு என்பவன் தூக்கிலிடப்பட்டான்.
1747 – பால்வினை நோய்களுக்கான முதலாவது மருத்துவ நிலையம் லண்டனில் லொக் மருத்துவமனையில் நிறுவப்பட்டது.
1803 – கண்டிப் போர்கள்: கண்டி மன்னர் விக்கிரம ராஜசிங்கனுக்கு எதிரான போரை பிரித்தானியர் ஆரம்பித்தனர்.[1]
1862 – ஆல்வன் கிரகாம் கிளார்க் சிரியசு பி என்ற வெண் குறுமீன் விண்மீனை 18.5 செமீ தொலைநோக்கி ஊடாகக் கண்டுபிடித்தார்.
1865 – அமெரிக்க உள்நாட்டுப் போர்: அமெரிக்க சட்டமன்றம் அடிமை முறையை ஒழிக்கும் 13-வது திருத்தச்சட்டத்தை நிறைவேற்றியது.
1876 – அனைத்து இந்தியப் பழங்குடிகளும் அவர்களுக்கென அமைக்கப்பட்ட சிறப்பு இடங்களுக்கு செல்லுமாறு ஐக்கிய அமெரிக்க அரசு உத்தரவிட்டது.
1915 – முதலாம் உலகப் போர்; செருமனி உருசியாவுக்கு எதிராக முதற்தடவையாக நச்சு வாயுவை பொலிமோவ் சமரில் பயன்படுத்தியது.
1918 – இரண்டு பிரித்தானிய அரச கடற்படை நீர்மூழ்கிக் கப்பல்கள் ஒன்றுடன் ஒன்று மோதியதில் நூற்றுக்கும் அதிகமானோர் உயிரிழந்தனர். மேலும் ஐந்து போர்க்கப்பல்கள் சேதமடைந்தன.
1928 – லியோன் திரொட்ஸ்கியை சோவியத் ஒன்றியம் நாடு கடத்தியது.
1937 – சோவியத் ஒன்றியத்தில் த்ரொட்ஸ்கி ஆதரவளர்கள் 31 பேர் தூக்கிலிடப்பட்டனர்.
1942 – இரண்டாம் உலகப் போர்: மலேயா சமரில் கூட்டுப் படையினர் சப்பானியரிடம் தோற்றதை அடுத்து சிங்கப்பூருக்குப் பின்வாங்கினர்.
1944 – இரண்டாம் உலகப் போர்: அமெரிக்கப் படைகள் சப்பான் வசமிருந்த மார்சல் தீவுகளில் தரையிறங்கின.
1945 – அமெரிக்க இராணுவ வீரன் எடி சிலோவிக் என்பவன் இராணுவத்தில் இருந்து வெளியேறியமைக்காகத் தூக்கிலிடப்பட்டான்.
1945 – இரண்டாம் உலகப் போர்: போலந்தில் இசுடூதொஃப் வதை முகாமிலிருந்த 3,000 கைதிகள் நாட்சிகளினால் பால்ட்டிக் கடலினூடாக கட்டாயமாக நடத்திக் கொண்டு செல்லப்பட்டு சுட்டுக் கொல்லப்பட்டனர்.
1946 – பனிப்போர்: யுகோசுலாவியாவில் சோவியத் முறையிலான அரசியலமைப்பு கொண்டுவரப்பட்டு நாட்டில் பொசுனியா எர்செகோவினா, குரோவாசியா, மாக்கடோனியா, மொண்டெனேகுரோ, செர்பியா, சுலோவீனியா என ஆறு குடியரசுகள் நிறுவப்பட்டன.
1950 – பனிப்போர்: அமெரிக்க அரசுத்தலைவர் ஹாரி எஸ். ட்ரூமன் ஐதரசன் குண்டு தயாரிப்பதற்கான திட்டத்தை அறிவித்தார்.
1953 – வடகடல் பெருக்கெடுத்தன் விளைவாக நெதர்லாந்தில் 1,800 பேரும், ஐக்கிய இராச்சியத்தில் 300 பேரும் உயிரிழந்தனர்.
1957 – லாஸ் ஏஞ்சலசில் இரண்டு வானூர்திகள் மோதியதில் 8 பேர் வானிலும், இருவர் தரையிலும் உயிரிழந்தனர்.
1958 – விண்வெளிப் போட்டி: அமெரிக்காவின் முதலாவது வெற்றிகரமான செயற்கைக் கோள் எக்ஸ்புளோரர் 1 வான் ஆலன் கதிர்வீச்சுப்பட்டையைக் கண்டறிந்தது.
1961 – நாசாவின் மேர்க்குரி-ரெட்ஸ்டோன் 2 விண்கலம் ஹாம் என்ற சிம்பன்சி ஒன்றை விண்ணுக்குக் கொண்டு சென்றது.
1966 – சோவியத் ஒன்றியம் தனது லூனா திட்டத்தின் கீழ் லூனா 9 என்ற விண்கலத்தை ஏவியது.
1968 – வியட்நாம் போர்: வியட் கொங் படைகள் ஓசிமின் நகரில் அமெரிக்க தூதரகத்தைத் தாக்கினர்.
1968 – நவூரு ஆத்திரேலியாவிடம் இருந்து விடுதலை பெற்றது.
1971 – அப்பல்லோ 14: விண்வெளி வீரர்கள் அலன் ஷெப்பர்ட், இசுடுவர்ட் ரூசா, எட்கார் மிட்செல், ஆகியோர் சாடர்ன் V ஏவுகலத்தில் நிலாவை நோக்கி சென்றனர்.
1980 – குவாத்தமாலாவில் எசுப்பானிய தூதரக முற்றுகையில் 39 பேர் உயிருடன் தீயிட்டுக் கொல்லப்பட்டனர்.
1990 – சோவியத் ஒன்றியத்தில் முதலாவது மெக்டொனால்ட்சு உணவகம் மாஸ்கோவில் திறக்கப்பட்டது.
1996 – கொழும்பில் உள்ள இலங்கை மத்திய வங்கியின் மீது நடத்தப்பட்ட குண்டுத் தாக்குதலில் 86 பேர் கொல்லப்பட்டு 1,400 பேர் வரை படுகாயமடைந்தனர்.[2]
2000 – கலிபோர்னியாவில் எம்டி-83 விமானம் ஒன்று பசிபிக் பெருங்கடலில் வீழ்ந்ததில் அதில் பயனம் செய்த அனைத்து 88 பேரும் உயிரிழந்தனர்.
2003 – ஆஸ்திரேலியா, நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தில் வோட்டர்ஃபோல் என்ற இடத்தில் தொடருந்து ஒன்று தடம்புரண்டதில் சாரதி உட்பட 7 பேர் உயிரிழந்தனர்.
2009 – கென்யாவில் எண்ணெய்க் கசிவை அடுத்து தீப்பற்றியதில் 113 பேர் கொல்லப்பட்டனர்.
2018 – நீல நிலவு மற்றும் முழு நிலவு மறைப்பு இடம்பெற்றன.

பிறப்புகள்

1762 – லக்லான் மக்குவாரி, காலனித்துவ நிர்வாகி (இ. 1824)
1797 – பிராண்ஸ் சூபேர்ட், ஆத்திரிய இசைக்கலைஞர், இசையமைப்பாளர் (இ. 1828)
1906 – இ. மு. வி. நாகநாதன், இலங்கைத் தமிழ் அரசியல்வாதி (இ. 1971)
1912 – க. நா. சுப்ரமண்யம், தமிழக எழுத்தாளர், இலக்கிய விமர்சகர், மொழிபெயர்ப்பாளர் (இ. 1988)
1929 – ரூடால்ஃப் மாஸ்பவர், நோபல் பரிசு பெற்ற செருமானிய இயற்பியலாளர் (இ. 2011)
1932 – செ. எ. ஆனந்தராஜன், இலங்கைத் தமிழ்க் கல்வியாளர், ஆசிரியர் (இ. 1985)
1932 – மசூர் மௌலானா, இலங்கை முசுலிம் அரசியல்வாதி (இ. 2015)
1937 – திருவிழா ஜெயசங்கர், தமிழக நாதசுவரக் கலைஞர்
1938 – பீட்ரிக்ஸ் (நெதர்லாந்து), நெதர்லாந்து அரசி
1944 – நீலன் திருச்செல்வம், இலங்கைத் தமிழ் அரசியல்வாதி (இ. 1999)
1975 – பிரீத்தி சிந்தா, இந்திய நடிகை, தயாரிப்பாளர்
1981 – ஜஸ்டின் டிம்பர்லேக், அமெரிக்கப் பாடகர், நடிகர்
1992 – ஏமி ஜாக்சன், ஆங்கிலேய-தென்னிந்தியத் திரைப்பட நடிகை

இறப்புகள்

 1561 – பைராம் கான், முகலாயத் தளபதி (பி. 1501)
1606 – கை பாக்சு, ஆங்கிலேயக் குற்றவாளி, வெடிமருந்து சதித்திட்டத்தின் தலைவர் (b.     1570)
1888 – ஜான் போஸ்கோ, சலேசிய சபையை நிறுவிய இத்தாலிய மதகுரு (பி. 1815)
1933 – ஜோன் கால்ஸ்வர்தி, நோபல் பரிசு பெற்ற ஆங்கிலேய எழுத்தாளர் (பி. 1867)
1950 – டைகர் வரதாச்சாரியார், கருநாடக இசைக் கலைஞர் (பி. 1976)
1954 – எட்வின் ஹோவர்ட் ஆர்ம்ஸ்ட்ராங், எஃப்.எம். வானொலியைக் கண்டுபிடித்த அமெரிக்கர் (பி. 1890)
1969 – மெகர் பாபா, இந்திய ஆன்மிகவாதி (பி. 1894)
1988 – அகிலன், தமிழக எழுத்தாளர், நாடகாசிரியர், மொழிப்பெயர்ப்பாளர் (பி. 1922)
1995 – கா. ம. வேங்கடராமையா, தமிழகக் கல்வெட்டறிஞர், தமிழறிஞர் (பி. 1912)
 2009 – நாகேஷ், நகைச்சுவை நடிகர் (பி. 1933)

சிறப்பு நாள்

விடுதலை நாள் (நவூரு, ஆத்திரேலியாவிடம் இருந்து 1968)
தெருக் குழந்தைகள் நாள் (ஆஸ்திரியா)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!