சந்தானம் படத்தில் பழம்பெரும் நடிகை சவுகார்ஜானகி

சந்தானம் கதாநாயகனாக நடிக்கும் முழு நீள நகைச்சுவைப் படம் ஒன்று தயாராகிறது. ஆர் கண்ணன் இயக்கும் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் பழம்பெரும் நடிகை சவுகார்ஜானகி அவர்களை நடிக்க அணுகியிருக்கிறார்கள். வயது அதிகமாகிவிட்டதால் நடிக்க இயலாது என்று முதலில் மறுத்தவர் கதை பிடித்துவிட்டதால் உடனே ஒப்புக்கொண்டார்.

அவருடைய 400வது படம் என்று கூறினார். தில்லுமுல்லு படத்தில் அவர் நடித்த நகைச்சுவை வேடம் பெருமளவில் பேசப்பட்டது அப்படியே இந்தப் படத்தில் பேசப்படும் என்று எதிர்பார்க்கிறார் இயக்குநர்.

மிகப்பெரிய சீனியர் நடிகை அவர்களின் ஒத்துழைப்பு எப்படி என்ற கேள்விக்கு. இந்த வயதிலும் அம்மா சுறுசுறுப்பாக படப்பிடிப்பில் கலந்து கொண்டார். வசனங்களை நினைவில் வைத்து அருமையாக பேசினார். அவரை இயக்கியது மனதிற்கு நிறைவாக உள்ளது என்று கண்ணன் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!