லால் சலாம் படப்பிடிப்பில் ரஜினிகாந்தை அமைச்சர் எ.வா. வேலு சந்தித்தார் – ​தனுஜா​ஜெயராமன்

 லால் சலாம் படப்பிடிப்பில் ரஜினிகாந்தை அமைச்சர்  எ.வா. வேலு சந்தித்தார் –  ​தனுஜா​ஜெயராமன்

திருவண்ணாமலையில் லால் சலாம் படப்பிடிப்பில் பங்கேற்று வரும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை அம்மாவட்ட திமுக செயலாளர், அமைச்சர் எ.வா. வேலு சந்தித்து பேசினார்

நடிகர் ரஜினிகாந்தின் மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் தயாராகிக்கொண்டிருக்கும் திரைப்படம், ‘லால் சலாம்.’ இந்தப் படத்தில் நடிகர்கள் விஷ்ணு விஷால் மற்றும் விக்ராந்த் ஆகியோர் நடித்து வருகின்றனர்.

மேலும் இந்தப் படத்தில் நடிகர் ரஜினிகாந்த் சிறப்புத் தோற்றத்தில் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது. இந்தத் திரைப்படத்தின் படப்பிடிப்பு தற்போது திருவண்ணாமலையில் நடைபெற்று வருகிறது. இதற்காக நடிகர் ரஜினிகாந்த் சில நாட்களுக்கு முன்பு திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலுக்குச் சென்று சுவாமி தரிசனம் செய்து வழிபட்டார்.

இந்த நிலையில், திருவண்ணாமலை தொகுதி திமுக சட்டமன்ற உறுப்பினரும் தமிழக பொதுப்பணிகள், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சருமான எ.வ.வேலு, நடிகர் ரஜினிகாந்தை சந்தித்துப் பேசி இருக்கிறார்.

இந்த சந்திப்பின்போது அமைச்சர் எ.வ.வேலு, நடிகர் ரஜினிகாந்துக்கு திருவள்ளுவர் சிலை ஒன்றை பரிசாகக் கொடுத்து இருக்கிறார். இந்த சந்திப்பின்போது இவர்கள் இருவரும் எடுத்துக்கொண்ட புகைப்படம் தற்போது இணைய தளத்தில் வெளியிடப்பட்டு வருகிறது.

ஆனாலும், இந்த சந்திப்பின்போது திரைத்துறை சம்பந்தப்பட்ட விஷயங்கள், சமீபத்திய அரசியல் சூழல் மற்றும் பல்வேறு நாட்டு நடப்புகள் குறித்தும் பேசப்பட்டதாகக் கூறப்படுகிறது.

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...