மாவீரன் படத்தின் புதிய அப்டேட்..,

 மாவீரன் படத்தின் புதிய அப்டேட்..,

சிவகார்த்திகேயன் தற்போது ‘மண்டேலா’ படத்தின் இயக்குனர் மடோன் அஸ்வின் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘மாவீரன்’ படத்தில் நடித்துள்ளார். இப்படம் தமிழ், தெலுங்கு ஆகிய 2 மொழிகளில் தயாராகி உள்ளது. இப்படத்திற்கு தெலுங்கில் ‘மாவீருடு’ என்று பெயர் வைத்துள்ளனர். இந்த திரைப்படம் ஜூலை 14ஆம் தேதி வெளியாகவுள்ளது. இதற்கான இறுதி கட்டப் பணிகள் தற்போது நடைபெற்ற வருகின்றன.

குறிப்பாக, படத்தொகுப்பு வேலைகளை முடித்த இயக்குனர் மடோன் அஸ்வின் தற்போது டப்பிங் பணிகளை தொடங்கியுள்ளார்.  அதில் நடிகர் சிவகார்த்திகேயன் கலந்து கொண்டு தன்னுடைய காட்சிகளுக்கான வசனத்தை பேசியுள்ளார்.சிவகார்த்திகேயன் மாவீரன் திரைப்படத்தை முடித்துவிட்டு ராஜ்குமார் பெரியசாமி இயக்கும் திரைப்படத்தின் பணிகளில் சிவகார்த்திகேயன் ஈடுபட்டுவருகிறார்.

இந்த நிலையில் மாவீரன் படத்தின் டப்பிங் பணிகளை முடித்துக் கொடுக்க தற்போது அவர் மும்மரம் காட்டி வருகிறார். சிவகார்த்திகேயன் நடிப்பில் இறுதியாக வெளியான பிரின்ஸ் திரைப்படம் எதிர்பார்த்த அளவுக்கு வெற்றியடையவில்லை. இதன் காரணமாக மாவீரன் திரைப்படத்தை அதிகம் எதிர்பார்த்திருக்கிறார். இந்த திரைப்படம் மண்டேலா போல ஒரு அரசியல் பின்னணியில் உருவாகி இருப்பதாக கூறப்படுகிறது. இந்த திரைப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக அதிதி ஷங்கர் நடிக்க, இயக்குநர் மிஷ்கின், தெலுங்கு நடிகர் சுனில் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

மாவீரன் படம் ஜூலை 14ஆம் தேதி திரைக்கு வரும் நிலையில், இந்த படத்தை பிரபல தயாரிப்பு நிறுவனமான ரெட் ஜெயண்ட் நிறுவனம் தமிழ்நாட்டில் வெளியிடுகிறது.இந்நிலையில் இந்நிலையில் மாவீரன் படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சி குறித்த அறிவிப்பை வீடியோ வெளியிட்டு படக்குழு அறிவித்துள்ளது. அதன்படி இந்த ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சி வருகிற ஜூலை 2ம் தேதி சாய் ராம் பொறியியல் கல்லூரியில் நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சதீஸ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...