என்.எல்.சி. நிறுவனத்தில் தேர்வு செய்யப்பட்ட 299 தொழிலாளர்களில் ஒருவர்கூட தமிழரில்லை

 என்.எல்.சி. நிறுவனத்தில் தேர்வு செய்யப்பட்ட 299 தொழிலாளர்களில் ஒருவர்கூட தமிழரில்லை

என்.எல்.சி நிறுவனத்திற்கு தேர்வு செய்யப்பட்ட 299 தொழிலாளர்களில் ஒரு தமிழர் கூட தேர்வு செய்யப்படாதது பெரும் அதிர்ச்சி அளிக்கிறது என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவரும் பண்ருட்டி தொகுதி சட்டமன்ற உறுப்பினரு மான தி.வேல்முருகன் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

“நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனமான என்.எல்.சி. தமிழ்நாட்டின் தொழில் வளர்ச்சி மற்றும் மின்தேவைக்காக காமராசர் காலத்தில் உருவாக்கப்பட்டது என்.எல்.சி. நிறுவனம். இந்த நிறுவனம் உருவாக்குவதற்கு 30 தமிழர் கிராம மக்கள் தங்களது நிலங்களை அரசுக்குத் தாரை வார்த்துக் கொடுத்துள்ளனர்.

அப்போது அவர்களுக்கு வழங்கப்பட்ட உறுதிமொழி, என்.எல்.சி. நிறுவனத்தில் வேலைவாய்ப்பு வழங்கப்படும் என்பதுதான். ஆனால், அப்படியான உறுதி மொழியை ஒன்றிய அரசும், என்.எல்.சி. நிர்வாகமும் தொடர்ந்து மீறி வருவது கண்டனத்துக்குரியது.

அதாவது, என்.எல்.சி. நிறுவனத்தில் பொறியியல் படித்த பட்டதாரிகளுக்கான வேலை வாய்ப்பை உருவாக்கி, அதனைத் தொடர்ந்து நேர்முகத் தேர்வையும் நடத்தி முடித்திருக்கிறது. இதனையடுத்து, வரும் ஆகஸ்ட் 1 ஆம் தேதி அன்று, சான்றிதழ் சரிபார்ப்புக்குப் பின் மருத்துவப் பரிசோதனையும் நடைபெற இருப்பதாக என்.எல்.சி. நிறுவனம் அறிவித்துள்ளது.

மேற்கண்ட வேலை வாய்ப்பிற்காகத் தேர்வு செய்யப்பட்ட பட்டியலை கடந்த ஜூலை 19 ஆம் தேதி என்.எல்.சி. நிறுவனம் வெளியிட்டிருந்தது. இப்பட்டியலில் இடம் பெற்றுள்ள 299 பேரும் வட இந்தியர்கள். இதில் தமிழர் ஒருவர் கூட இடம் பெறவில்லை என்பது வேதனையானது.

தமிழ்நாட்டில் தமிழ் மக்கள் வழங்கிய நிலத்தில் இயங்கும் என்.எல்.சி. நிறுவனம் நிலம் கொடுத்தவர்கள், அந்நிறுவனத்தின் பணியிலிருந்து இறந்தவரின் வாரிசு கள், பழகுநர் பயிற்சி முடித்தவர்கள் என அனைவரையும் முற்றிலுமாகப் புறக் கணித்துவிட்டு, பணியில் வட மாநிலத்தவர்களைத் தேர்வுசெய்து, சேர்ப்பது திட்டமிட்டு தமிழர்களைப் புறக்கணிக்கும் செயல். இது கண்டனத்துக்குரியது.

தமிழர்களிடம் பிச்சை எடுத்து நிறுவப்பட்ட என்.எல்.சி நிறுவனத்தில், தொடர்ச்சி யாகத் திட்டமிட்டு தமிழர்கள் புறக்கணிக்கப்படுவதைப் பொறுத்துக்கொள்ள முடியாது.

ஒப்பந்தப்படி நிலம் வழங்கிய குடும்பங்களின் உறவுகளுக்கு இன்றளவும் பணி வழங்காமலும், பல்லாயிரக்கணக்கான ஒப்பந்தத் தொழிலாளர்களின் பணியை நிரந்தரம் செய்யாமலும், நிறுவனத்தில் தொழிற்பழகுநர் பயிற்சி முடித்தவர் களுக்குப் பணி வழங்கப்படாமலும் திட்டமிட்டு என்.எல்.சி நிர்வாகத்தால் புறக் கணிக்கப்படுகின்றனர்.

தொழில், வணிகம், வேலை வாய்ப்பு போன்ற பொருளாதார வளர்ச்சி நடவடிக்கை களில் அந்தந்த மொழித் தாயகத்தில் அந்தந்த மொழி மாநிலத்தவர்க்கு முன் னுரிமையும் முழு வாய்ப்பும் கிடைக்க வேண்டும் என்பதற்காகத்தான் மொழி வாரி மாநிலங்கள் உருவாக்கப்பட்டன. அந்த நோக்கத்திற்கு முற்றிலும் எதிராகத் தமிழ்நாட்டில் ஒன்றிய அரசுத் துறைகளில் தமிழர்களைப் புறக்கணித்து, பிற மாநில மாணவர்களை முறையற்ற வழிகளில் ஒன்றிய அரசு திணிப்பது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.

எனவே, என்.எல்.சி. நிறுவனம் பொறியாளர் வேலை வாய்ப்பிற்கு நடத்திய நேர்முகத்தேர்வை ரத்து செய்து, வரும் ஆகஸ்ட் 1ஆம் தேதி நடக்க உள்ள ஆவண சரிபார்ப்பு மற்றும் மருத்துவ பரிசோதனையை உடனடியாக ஒன்றிய அரசு ரத்து செய்ய வேண்டும். அப்படி இல்லையென்றால், தமிழ்நாட்டு இளைஞர் கள், ஒருமித்த கருத்துள்ள அரசியல் அமைப்புகளை ஒன்று திரட்டி, தமிழக வாழ்வுரிமைக் கட்சி மாபெரும் போராட்டத்தை முன்னெடுக்கும் என எச்சரிக்கை விடுக்கிறேன்.

தமிழர்களின் வாழ்வுரிமை பறிபோகும் இந்த அநீதியைத் தடுக்க  தமிழ்நாடு உரிய நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். அதோடு, என்.எல்.சி. நிறுவனத்தில் பொறி யாளர் பணியிடங்களை நிரப்ப, தமிழ்நாட்டின் இளைஞர்களுக்கும், நிலம், வீடு களை வழங்கிய வாரிசுகளுக்கும் முன்னுரிமை கொடுக்க தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் வேல்முருகன் அறிவிக்கை வெளியிட்டுள்ளார்.

மூலவன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...