மதுரை மீனாட்சி அம்மன் சில சுவாரசியமான விஷயங்கள்

1812 முதல் 1828 வரை மதுரை கலெக்டராக ரூஸ் பீட்டர் நியமிக்கப்பட்டார். மதத்தால் ஒரு கிறிஸ்துவர் என்றாலும், அவர் அனைத்து மதங்களையும் மதிக்கக் கூடிய ஒருவர். மேலும் உள்ளூர் நடைமுறைகளையும் மதித்தார்.

கலெக்டர் பீட்டர், மீனாட்சி அம்மன் கோவிலில் கோயில் நிர்வாகியாக இருந்தார். மேலும் தனது கடமைகள் அனைத்தையும் நேர்மையுடனும் நடத்தி அனைத்து மக்களின் மத உணர்வுகளையும் மதித்தார். எல்லா மக்களையும் சமமாக மதித்து வந்தார். இந்த உன்னதப் பண்பு மக்கள் இடையே பிரபலமான புனைபெயரைப் அவருக்கு தந்தது.

மீனாட்சி அம்மன் கோவில் பீட்டரின் இல்லத்திற்கும் அவரது அலுவலகத்திற்கும் இடை யில் அமைந்துள்ளது. ஆகையால் தினமும் அவர் தனது குதிரையால் அலுவலகத்திற்கு அந்த வழியில் செல்வதுதான் வழக்கம்.

பீட்டர் கோவிலைக் கடக்கும்போது, ​​அவர் தனது குதிரையிலிருந்து இறங்கி, தொப்பியையும் காலணிகளையும் அகற்றிவிட்டு, வெறும் காலில் நடந்து செல்வார். இந்தச் சிறிய விஷயம் மூலம் அவர் அம்மனுக்குத் தனது பயபக்தியை வெளிப்படுத்தினார்.

ஒருநாள் மதுரை நகரில் பலத்த மழை பெய்தது. வைகை நதி வெள்ளக்காடாக மாறியது. கலெக்டர் தனது இல்லத்தில் உறங்கிக் கொண்டிருந்தார். திடீரென்று பாதி தூக்கத்தில் கலக்கமடைந்தார். கணுக்கால் சத்தத்தால் எழுந்த அவர் ஒலி எங்கிருந்து வந்தது என்பதைக் கண்டுபிடிக்க, படுக்கையைவிட்டு வெளியேறினார்.

அங்கு ஒரு சிறிய பெண் தாவணியில் விலைமதிப்பற்ற ஆபரணங்களை அணிந்து கொண்டு, ‘பீட்டர், இந்த வழியில் வா’ என்று அழைப்பதைக் கேட்டார்.

பீட்டரும் அந்தச் சிறுமியைப் பின்தொடர வெளியே வந்தார். அச்சிறுமி யாராக இருக்கும் என்று கண்டுபிடிக்க சிறுமியின் பின்னால் ஓடிக்கொண்டிருந்தார்!

பீட்டர் வீட்டை விட்டு வெளியே வந்தபோது பின்னால் திரும்பிப் பார்த்தார். பார்த்தவுடன் பேரதிர்ச்சியடைந்தார். வைகை நதி வெள்ள நீரால் முழு நகரையும் துவம்சம் செய்து முடித்து விட்டது. அவரது முழு பங்களாவும் வெள்ள நீரால் தத்தளித்துக்கொண்டிருந்தது. பணியாளர்கள் எவரும் இல்லை. ஒரு சிலர் தப்பிக்க முடியாமல் இறந்தும் போய்விட்டன. ஆனால் இவர் மட்டும் தப்பிவிட்டார்.

அவர் அந்தச் சிறுமியை எல்லா இடத்திலும் தேடினார். ஆனால் அவள் மெல்லிய காற்றில் மறைந்தாள். அதை பீட்டர் நேரில் கண்டார். இந்த விஷயம் பீட்டர் மனதில் ஆழமாகப் பதிந்துவிட்டது. அதை மீண்டும் மீண்டும் யோசித்துப் பார்க்கும்போது அவருக்கு ஒரு விஷயம் தோன்றியது.

அந்தச் சிறுமியின் காலில் எந்தக் காலணியும் இல்லாததை அவர் உணர்ந்தார். ஆகையால் மீனாட்சி அம்மன் மீதான அவரது பக்தி மற்றும் விசுவாசத்தைத் தெரிவிக்க அம்மானுக்கு ஒரு பரிசை வழங்க விரும்பினார்.

கோவில் அர்ச்சகரைக் கலந்தாலோசித்தார். மீனாட்சி அம்மனுக்கு ஒரு ஜோடி தங்கக் காலணிகள் வாங்க கட்டளையிட்டார்.

அந்த பாதுகங்களில் 412 மாணிக்கங்கள்,  72 மரகதங்கள், 80 வைரங்கள் பதிக்கப்பட்டிருந்தன. மதுரை மீனாட்டிச அம்மனுக்கு  நன்கொடை இவ்வகை யில் அளித்தார் பீட்டர் பாண்டியன். கோவில் நிர்வாகம் அவரது பெயரை காலணிகளின் அடியில் ‘பீட்டர் பாடுகம்’ என்று செதுக்கி அவருக்கு மரியாதை செலுத்தினார்கள். இன்றுவரை பாடுகங்கள் ‘பீட்டர் பாடுகம்’ என்றே அழைக் கப்படுகிறது.

ஒவ்வொரு ஆண்டும் ‘சித்திரைத் திருவிழா’ நேரத்தில், மீனாட்சி அம்மன் சிலையில் பீட்டர் அளித்த படுகங்களால் அலங்கரிக்கப்பட்டு வருகிறது . இன்று வரையிலும் பீட்டர் வம்சா வழியில் இருக்கும் நபர்கள் சித்திரைத் திருவிழா நாளன்று மதுரைக்கு வருகை தந்து அம்மனை கும்பிட்டு செல்வார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!