கருங்கால் குறிச்சிகள் அகத்திணை நேரம் – புத்தக வெளியீடு

பிரபல எழுத்தாளரும், கைத்தடி பதிப்பகத்தின் பதிப்பாளரும், மின்கைத்தடி மின்னிதழின் பொறுப்பாளருமான திரு. மு.ஞா.செ. இன்பா அவர்கள் எழுதிய சிறுகதைகளின் தொகுப்பு,‘கருங்கால் குறிச்சிகள் அகத்திணை நேரம்’ என்ற தலைப்பில் தொகுக்கப்பட்டு புத்தகமாக இன்று வெளியிடப்பட்டது.

பசுபதி மே.பா. ராசக்காபாளையம், ஆரோகணம், நடுவுல கொஞ்சம் பக்கத்தை காணோம், பரதேசி, தங்க மீன்கள், இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா, ரம்மி, மேகா, குற்றம் கடிதல் ஆகிய பல பிரபலமான படங்களை தயாரித்த தயாரிப்பாளரும், JSK பிலிம் புரோடக்சன் நிறுவனத்தின் உரிமையாளருமான திரு. J சதீஷ்குமார் அவர்களின் திருக்கரங்களால் வெளியிட, வடிவமைப்பாளர் திரு. சேவியர் அவர்கள் முதல் பிரதியை பெற்றுக் கொண்டார்கள்.

இந்த புத்தகத்தை விமர்சனப் பகுதியில் விரைவில் பார்க்கலாம். வாழ்த்துக்களும் பாராட்டுக்களும்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!