எழுத்தாளர் பேனாமுனை
“கிளைகள் இசைக்கும் கீதங்கள்” – 9 (நாவல்) | முகில் தினகரன்
அத்தியாயம் – 9 அன்று முழுவதும் தனக்குள்ளேயே பொருமிக் கொண்டிருந்த பங்கஜம், இறுதியில் அந்த முடிவெடுத்தாள். “சாட்சிக்காரன் கால்ல விழறதை விட, சண்டைக்காரன் காலில் விழுவதே மேல்”… இந்த சுந்தரியைப் பழி வாங்க அந்த வள்ளியம்மாவையே பயன் படுத்தினா என்ன?” உள் மனதில் அந்தக் கேள்வி எழுந்ததும், “அவளொண்ணும் இந்த சுந்தரி மாதிரி விவரமில்லாதவள் இல்லை… நீ சொல்றதையெல்லாம் முழுசா நம்பி… உன் வலைல விழறதுக்கு!.. சரியான விவரக்காரி… உன்னையே உனக்கெதிரா திருப்பி விட்டடிப்பா…” உள் மனதே […]
கேப்ஸ்யூல் (நாவல்) பகுதி- 9 | பாலகணேஷ்
என்னது..? குடும்பக் கதைகளில் உணர்ச்சிகளைப் பொழிந்து தள்ளகிற எழுத்தாளர் லக்ஷ்மி சரித்திரக் கதைகூட எழுதியிருக்கிறாரா என்ன? என்று புருவங்களை உயர்த்துவீர்கள் தலைப்பைக் கேட்டதுமே. இந்த நாவல் அவரின் எழுத்துக்களில் மாறுபட்டதாக சரித்திர, சமூகக் கதையாகப் பரிமளித்திருக்கிறது. சுமார் நூறு வருடங்களுக்கு முன்பு நடந்த கதை என்கிற குறிப்புடன் 1956ல் இதை எழுதியிருக்கிறார் லக்ஷ்மி அவர்கள். இப்போதும் படிப்பதற்கு போரடிக்காத இந்தக் கதை இங்கே உங்களுக்கு கேப்ஸ்யூலாக! வீரத்தேவன் கோட்டை – லக்ஷ்மி – அந்த திரைப்படக் குழு […]
“கிளைகள் இசைக்கும் கீதங்கள்” – 8 (நாவல்) | முகில் தினகரன்
அத்தியாயம் – 8 காலை ஒன்பது மணிக்கே வந்து சுந்தரியின் கடையில் அமர்ந்த பங்கஜத்தின் முகம் வழக்கத்திற்கு மாறாய் சற்று வித்தியாசமாயிருந்தது. “என்ன பங்கஜக்கா இன்னிக்கு மூஞ்சி என்னவோ போலிருக்கு… என்ன ஏதாச்சும் பிரச்சினையா?” “எனக்கு வாழ்க்கைல ஒரே பிரச்சினை என் மருமகள்தான்” என்றாள். “என்னக்கா நீங்க யாரு?… உங்களைக் கண்டு இந்த மொத்த மார்க்கெட்டுமே நடுங்குது… நீங்க போயி அந்தச் சின்னப் பொண்ணுக்கு பயந்திட்டிருக்கீங்க!… “ சுந்தரி சொல்ல, “என் மகன் எனக்கு சப்போர்ட்டா இல்லையே?.. […]
கேப்ஸ்யூல் (நாவல்) பகுதி- 8 | பாலகணேஷ்
நகைச்சுவை நாவல் என்கிற வார்த்தையை யாராவது சொன்னால் உடனே மனதில் பளிச்சிடும் பெயர் ‘வாஷிங்டனில் திருமணம்’ என்பதுதான். எழுதப்பட்டு ஆண்டுகள் நிறையக் கடந்துசென்று விட்டாலும் இன்றளவும் புதிதாகப் படிப்பவர்களை வாய்விட்டுச் சிரிக்க வைக்கும், மீண்டும் மீண்டும் படிப்பவர்களைப் புன்னகையில் ஆழ்த்தும் இந்த நகைச்சுவைப் புதினத்திற்கு இணை சொல்ல மற்றொன்று இல்லை. வாஷிங்டனில் திருமணம் – சாவி அமெரிக்க கோடீஸ்வரி ராக்பெல்லரின் நாத்தனார் பெண் லோரிட்டாவும், யுனெஸ்கோவில் பணிபுரியும் மூர்த்தியின் மகள் வசந்தாவும் கல்லூரித் தோழிகள். மிஸஸ் ராக்பெல்லரின் […]
மறந்துபோன மரபு விளையாட்டுகள்- 8 | லதா சரவணன்
எட்டாவது விளையாட்டுகள் மறுநாள் மறந்து போன மரபு விளையாட்டுகள் சொல்லியடிப்பேனடி அடிச்சினேன்னா நெத்தியடிதானடி…படிக்காதவன் படப்பாடலில் ரஜினி அம்பிகாவின் நடனத்தை ரசித்துக் கொண்டு இருந்த மாலியின் முன் ரெளத்திரமாய் வந்து நின்றான் வாசு. தடிமாடு மாதிரியிருக்கே உனக்கே இன்னமும் கல்யாணம் ஆகலை அதுக்குள்ளே ஆம்பிளைப் பையன் எனக்கு கல்யாணம் பண்ணி வைக்கச் சொல்லி அம்மாகிட்டே போட்டு கொடுத்திருக்கே கொழுப்பா உனக்கு வழக்கம்போல சண்டை துவங்கிவிட்டதற்கு ஆதாரமாய் வாசு மாலினியின் முன்பு சிலிர்த்துப் போய் நின்றான். இப்ப என்னடா ஊரிலே […]
சுஜாதா பற்றி ….ஒரு வாசகரின் மனம் திறப்பு /சவிதா
————————————————————–. சுஜாதாவின் பிறந்த நாள் இன்றுஎந்த சுஜாதா னு கேட்பீங்க இவர்எழுத்தாளர்இவரைப்பற்றிவாசகர் சவிதா அவர்களின் மனம் திறப்பு சுஜாதா பற்றிப்பேச, நினைவுப் படுத்திக்கொள்ள தனியே எந்த நாளும் தேவையேயில்லை. அன்றாடம் இலக்கிய ரீதியிலான, ஹாஸ்யங்களிலான, சிக்கலான, அறிவு சம்பந்தப்பட்ட, நவீனத்துவம் தேவைப்படுகிற அத்தனை விஷயங்களிலும் நான் தொடர்ந்து சுஜாதாவை மிஸ் பண்ணுகிறேன். எனக்குத் தெரிந்து பலர் அதை உறுதிப்படுத்தியிருக்கிறார்கள். சுஜாதா என்னும் பெயரை பதின்மங்களில் அறிந்து கொள்ளல் பெரும்பேறு. ஆனால் நான் பால்யத்திலேயே அறிந்து கொண்டிருந்தேன். குமுதம் […]
ஆங்கிலத்தில் வெளியான கபிலன் வைரமுத்து எழுதிய நாவல் “ஆகோள்”
1920 ஆம் ஆண்டு மதுரைக்கு அருகில் உள்ள பெருங்காமநல்லூரில் ஆங்கிலேயரின் குற்ற இனச் சட்டத்திற்கு எதிராகப் போராடி பதினாறு பேர் உயிர் தியாகம் செய்தனர். அந்த சம்பவத்தை மையமாகக் கொண்டு கபிலன் வைரமுத்து எழுதி 2022 ஆம் ஆண்டு வெளிவந்த ஆகோள் என்ற நாவல் தற்போது ஆங்கிலத்தில் வெளியாகியிருக்கிறது. பிரபல பதிப்பகமான ரூபா நிறுவனம் இந்த நூலைப் பதிப்பித்திருக்கிறார்கள். தற்காலத்தின் மெய்நிகர் தொழில்நுட்பம், சைபர் செக்யூரிட்டி மற்றும் பெருந்தரவு கொள்ளை ஆகியவைகளைக் களமாகக் கொண்ட நாவலில் நூறு […]
பாவேந்தர் பாரதிதாசன்
பிறந்த நாள்! புரட்சிக்கவிஞர், பாவேந்தர் பாரதிதாசன் பிறந்த நாள்! வார்த்தைகளை வாளாக வார்த்தவன். மொழியைத் தேனாக வடித்தவன். எதிரிகளைக் கவிதையால் அடித்தவன். கம்பீரத்தால் காலங்கள் கடந்தவன். பாரதியின் தாசன் எனத் தன்னைப் பிரகடனப்படுத்திக் கொண்டவன் இந்த பாரதிதாசன். · சுப்புரத்தினம்- பெற்றோர் வைத்த பெயர். அப்பா பெயர் கனகசபை என்பதால், கனக சுப்புரத்தினம் எனும் பெயரால் கவிதைகள் வரைந்தார். தனது குருநாதர் மீதான பாசத்தால், பாரதிதாசன் என்ற பெயரைக் சூட்டிக்கொண்டார். அவரது கவிதைகளுக்கு புரட்சிக் கவிஞர், பாவேந்தர் […]
“கிளைகள் இசைக்கும் கீதங்கள்” – 7 (நாவல்) | முகில் தினகரன்
அத்தியாயம் – 7 எப்படியெல்லாமோ வாழ ஆசைப்பட்டு, ஒரு கட்டத்தில் எப்படியாவது வாழ்ந்தால் போதும் என்கிற நிலைக்குத் தள்ளி விடுவதுதான் வாழ்க்கை. கடை வீதியில் பெரிய பூக்கடை வைத்து கிட்டத்தட்ட ஒரு முதலாளியாய் வாழ்ந்து கொண்டிருந்த வள்ளியம்மா யாரோ செய்த சதியால், மார்க்கெட்டிற்கு வெளியே கூடையில் வைத்து கொய்யாப்பழங்களை விற்கும் நிலைக்கு வந்தாள். ஆனாலும், மனம் சோர்ந்து விடாமல் தன்னம்பிக்கையோடு அந்த வியாபாரத்தில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டாள். அவள் மகன் பிரகாஷ்தான் அவ்வப்போது ஆக்ரோஷமாகி, “அந்த […]
கேப்ஸ்யூல் (நாவல்) பகுதி- 7 | பாலகணேஷ்
ஒரு சரித்திர நாவலைக்கூட துப்பறியும் நவீனத்தின் விறுவிறுப்புடன் எழுத முடியும் என்று நிரூபித்திருக்கிறார் ஸ்ரீவேணுகோபாலன். இவரை நினைக்கும் போதெல்லாம் ஆச்சரியம்தான் வரும் எனக்கு. தேர்ந்த நடிகன் இரட்டை வேடம் போடுவதைப் போல, புஷ்பா தங்கதுரை என்ற பெயரில் செக்ஸ்+க்ரைம் கதைகளையும், ஸ்ரீவேணு கோபாலன் என்ற பெயரில் ஆன்மீக + சரித்திரக் கதைகளையும் அந்தந்தத் தளங்களுக்கே உரிய நடையில் அமர்க்களமாக எழுதுபவர் அவர். இந்நாவலில் அவரது அழகிய தமிழ்நடையில் நெருப்பென வரும் வீர சாகசங்களும், உணர்ச்சிக் கொந்தளிப்பான தந்தை-மகன் […]