நடிகர் தனுஷ் நடிப்பில் தமிழில் வெளியாகும் படங்கள் தெலுங்கில் மொழிமாற்றம் செய்யப்பட்டு வெளியாகும்போது அங்கேயும் மிகப்பெரிய அளவில் வரவேற்பையும் வசூலையும் பெற்று வருகிறது. அவருக்கென அங்கே தனியாக ரசிகர் வட்டமே உருவாகியுள்ளது. இந்த நிலையில் முதன்முறையாக ‘சார்’ என்கிற படம் மூலம் நேரடியாக தெலுங்கில் அடியெடுத்து வைத்துள்ளார் தனுஷ். தமிழில் ‘வாத்தி’ என்ற பெயரில் ஒரே நேரத்தில் தமிழ், தெலுங்கில் கடந்த பிப்ரவரி 17ஆம் தேதி வெளியானது. இயக்குனர் வெங்கி அட்லூரி இயக்கியுள்ள இந்தப் படத்தில் சம்யுக்தா கதாநாயகியாக நடிக்க, சமுத்திரக்கனி, பாரதிராஜா, சாய்குமார், தணிகலபரணி, ஆடுகளம் நரேன் உள்ளிட்ட முக்கிய நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். ஜி.வி பிரகாஷ்குமார் இசையமைத்துள்ளார். தற்போது தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளிலுமே மிகப்பெரிய வெற்றியைப் பெற்று பல இடங்களில் தற்போதும் அரங்கு நிறைந்த காட்சிகளாக ஓடிக்கொண்டிருக்கிறது வாத்தி. இந்த நிலையில் இந்த படத்தின் வெற்றிக்குப் பக்கபலமாக இருந்த பத்திரிகையாளர்களுக்கும் பொதுமக்களுக்கும் நன்றி தெரிவிக்கும் விதமாக இயக்குனர் உள்ளிட்ட வாத்தி படக்குழுவினர் சென்னை சாலிகிராமம் பிரசாத் லேபில் பத்திரிகையாளர்களை சந்தித்து நன்றியைத் தெரிவித்துக் கொண்டனர். இந்த நிகழ்வில் படத்தின் இயக்குனர் வெங்கி அட்லூரி, உதவி திரைக்கதை ஆசிரியர் சதீஷ், ஒளிப்பதிவாளர் யுவராஜ், படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்த நகைச்சுவை நடிகர் சாரா மற்றும் பலர் கலந்து கொண்டனர். இந்த நிகழ்வில் நடிகர் சாரா பேசும்போது, “இயக்குனர் வெங்கி அட்லூரியுடன் இணைந்து நிறைய படங்கள் பண்ண வேண்டும். அதனால் என்னைக் கழட்டி விட்டுடாதீங்க என இயக்குனரை கேட்டுக்கொள்கிறேன். வீட்டில் என் பையனை நான் படிக்கச் சொன்னால் படிக்க மாட்டான். ஆனால் வாத்தி படத்தில் தனுஷ் மாணவர்களைப் படிக்கச் சொல்லி உற்சாகப்படுத்துவதைப் பார்த்துவிட்டு தனுஷ் அங்கிள் சொல்வதால் படிக்கிறேன் என்று கூறுகிறான். அந்த அளவிற்கு வாத்தி படம் அனைவரையும் சென்று சேர்ந்துள்ளது” என்று கூறினார். ஒளிப்பதிவாளர் யுவராஜ் பேசும்போது, வாத்தி படம் வெளியானதில் இருந்து எந்த ஊருக்குச் சென்றாலும் திருவிழா மாதிரி இருக்கிறது. இப்போதும் பல தியேட்டர்களில் அரங்கம் நிறைந்த காட்சிகளாக ஓடிக்கொண்டிருக்கின்றது. இந்த நேரத்தில் என்னுடைய குருநாதர் ஒளிப்பதிவாளர் ரத்னவேலுக்கு என்னுடைய நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று கூறினார். இயக்குனர் வெங்கி அட்லூரி பேசும்போது, “இந்தப் படத்தின் கதையை நம்பி படத்தைத் தயாரித்த தயாரிப்பாளர் வம்சி மற்றும் எனக்கு மிகப்பெரிய ஆதரவு தந்த தனுஷ் இருவருக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். இப்போது வரை 8 நாட்களில் 75 கோடி நிகர தொகையாக வாத்தி வசூலித்துள்ளது. பத்திரிகை விமர்சனங்கள் மற்றும் படம் பார்த்தவர்களின் வாய்மொழி பாராட்டுகள் என பாசிட்டிவான விளம்பரம் கிடைத்துள்ளது.…
Category: ஒலியும் ஒளியும்
‘வாத்தி’ படத்தைப் பற்றி பாரதிராஜா விமர்சனம்
நடிகர் தனுஷ் முதன்முறையாக தெலுங்கில் அடியெடுத்து வைத்து நடித்துள்ள படம், தெலுங்கில் ‘சார்’ என்றும் தமிழல் ‘வாத்தி’ என்றும் பிப்ரவரி 17ஆம் தேதி வெளியானது. இயக்குநர் வெங்கி அட்லூரி இயக்கியுள்ள இந்தப் படத்தில் சம்யுக்தா கதாநாயகியாக நடிக்க, சமுத்திரக்கனி, சாய்குமார், தணிகலபரணி,…
தனுஷுடன் நடிக்க டென்ஷனாக இருந்தது
தனுஷ் நடிப்பில் தமிழ், தெலுங்கு என இரு மொழிப் படமாக உருவாகியுள்ளது ‘வாத்தி’. தெலுங்கு திரையுலகின் இளம் இயக்குநர் வெங்கி அட்லூரி இயக்கியுள்ளார். சித்தாரா என்டர்டெய்ன்மென்ட்ஸ் & பார்ச்சூன் போர் சினிமாஸ் சார்பில் நாகவம்சி S – சாய் சௌஜன்யா தயாரித்துள்ளார்.…
விருதுகளைக் குவிக்கிறது ‘மாமனிதன்’ || சீனு ராமசாமிக்குப் பாராட்டு
அமெரிக்காவின் செடோனா 29வது சர்வதேசத் திரைப்பட விழா மற்றும் ரஷ்யாவின் 45வது மாஸ்கோ சர்வதேசத் திரைப்பட விழாக்களில் திரையிடப்படுகிறது இயக்குநர் சீனு ராமசாமி எழுதி இயக்கிய ‘மாமனிதன்’. அமெரிக்காவின் அரிசோனா மாகாணத்தில் உள்ள செடோனாவில் சர்வதேச சுயாதீன திரைப்படங்களுக்கான விருது வழங்கும்…
திரைக்கதை வங்கி (Script Bank) தொடங்கினார் மதன் கார்க்கி
திரையுலக வரலாற்றில் ஒரு புதிய தொடக்கமாக ‘ஸ்கிரிப்டிக்’ (SCRIPTick) திரைக்கதை வங்கியை (Script Bank) தொடங்கியுள்ளனர் மதன் கார்க்கி மற்றும் கோ. தனஞ்ஜெயன். திறமையான எழுத்தாளர்களின் திரைக்கதைகளைப் படித்து, அவற்றுள் சிறந்த திரைக்கதைகளை மட்டும் தேர்ந்தெடுத்து, படப்பிடிப்புக்குத் தயார் நிலையில் அவற்றை…
நடிகர் துரை பகிர்ந்துகொள்ளும் காலச்சக்கரம் சுழல்கிறது-3
நாடகம், சினிமா எனப் பயணித்துக்கொண்டிருக்கும் பழம்பெரும் நடிகர் பி.ஆர்.துரை தன் நாடகம், சினிமா அனுபவத்தோடு தொடர்புடைய இலக்கிய ஆளுமைகளைப் பற்றியும் சினிமாவின் பழம்பெரும் வரலாறு பற்றியும் இங்கே பதிவு செய்கிறார். 1867ஆம் ஆண்டு பிறந்து தமிழ் நாடகத்தந்தை எனப் போற்றப்பட்டவர் சங்கரதாஸ்…
‘பத்துதல’ சிம்புவின் இன்னொரு மாஸ்
சினிமாவிலிருந்து சில காலம் ஒதுங்கியிருந்த சிம்புவுக்கு வெங்கட் பிரபு இயக்கிய ‘மாநாடு’ படம் கம்பேக் கொடுத்தது. அந்தப் படம் மாபெரும் வெற்றியடைந்ததை அடுத்து சிம்பு மீண்டும் கோலிவுட்டில் பிஸியானார். அடுத்து கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் ‘வெந்து தணிந்தது காடு’ படத்திற்குப்…
விஜய்யின் ‘தளபதி 67‘ தயாரிப்பு தொடங்கியது
மாஸ்டர் மற்றும் வாரிசு படத்தின் பிளாக்பஸ்டர் வெற்றியைத் தொடர்ந்து, மூன்றாவது முறையாக தளபதி விஜய்யுடன் இணைந்து பணியாற்றுகிறது 7 ஸ்கிரின் ஸ்டூடியோ.தற்காலிகமாக ‘தளபதி 67’ என்று பெயரிடப்பட்டுள்ள இத்திட்டத்தை ‘மாஸ்டர்’ கைவினைஞர் லோகேஷ் கனகராஜ் இயக்குகிறார், எஸ்.எஸ்.லலித்குமார் தயாரித்துள்ளார். ஜெகதீஷ் பழனிசாமி…
முதியவர்களைக் கொல்லும் முறையைத் தடுக்கிறது ‘தலைக்கூத்தல்’ திரைப்படம்
சமுத்திரக்கனி, கதிர், வசுந்தரா நடிப்பில், ஜெயப்பிரகாஷ் ராதாகிருஷ்ணன் இயக்கத்தில், YNOT ஸ்டுடியோஸ் எஸ்.சஷிகாந்த் தயாரிப்பில் உருவாகியுள்ள ‘தலைக்கூத்தல்’ திரைப்படம் விரைவில் திரைக்கு வரவுள்ளது. ‘தமிழ்ப் படம்’ தொடங்கி, ‘இறுதிச் சுற்று’, ‘விக்ரம் வேதா’ உள்ளிட்ட வித்தியாசமான முயற்சிகள் கொண்ட பல வெற்றிப்…
ஒரே ஒரு சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் தான் || ஒய் ஜி மகேந்திரா
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கிளாப் அடித்து தொடங்கி வைத்த படம் ‘சாருகேசி’. இந்தப் படத்தை ஒய்.ஜி.மகேந்திரா இயக்கி, நடிக்கிறார். நடிகர் ஒய் ஜி மகேந்திராவின் பிரபல நாடகமான சாருகேசி திரைப்படமாக உருவாக்கப்படவுள்ளது. இது குறித்த அறிவிப்பை சென்னை வாணி மஹாலில் நடைபெற்ற…
