செஞ்சி கோட்டை உலக பாரம்பரிய சின்னமாக அறிவிப்பு..!

செஞ்சி கோட்டையை உலக பாரம்பரிய சின்னமாக யுனஸ்கோ நிறுவனம் அறிவித்தது. உலக அளவில் புராதனமான இடங்களை யுனெஸ்கோ நிறுவனம் ஆய்வு செய்து உலக பாரம்பரிய சின்னமாக அறிவித்து வருகிறது. அந்தவகையில் தமிழகத்தில் கும்பகோணம் ஐராவ தீஸ்வரர் கோவில், தஞ்சை பிரகதீஸ்வரர் கோவில், ஜெயங்கொண்டம்…

இனி பள்ளிகளில் ‘ப‘ வடிவ இருக்கை அமைப்பு..!

பள்ளிகளில் இனி லாஸ்ட் பெஞ்ச் இருக்க கூடாது என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.பள்ளிகளில் இனி மாணவர்களை ‘ப‘ வடிவில் அமரவைக்க வேண்டும் என இன்று தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது. இதனால் மாணவர்களுக்கு, தான் கடைசி பெஞ்ச் என்ற எண்ணம் உருவாகாத வகையில் இத்தகைய அறிவிப்பை தெரிவித்துள்ளது. மேலும் இந்த மாற்றம், மாணவர்களிடையே சமத்துவமான கற்றல் சூழலை உருவாக்கவும்,ஆசிரியர்களுடனான தொடர்பை மேம்படுத்தவும் உதவும் என கல்வித்துறை அறிவித்துள்ளது. ‘ப‘ வடிவ இருக்கை அமைப்பு மாணவர்களின் கற்றல் திறனை மேம்படுத்துவதற்காகவும், வகுப்பறைகளில் கடைசி பெஞ்ச் என்ற கருத்தை நீக்குவதற்காகவும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதனால், மாணவர்கள் ஒருவரை ஒருவர் பார்க்க, ஆசிரியரை கவனிக்க வசதியாக இருக்கும் எனவும் விளக்கம் அளித்துள்ளது.

அஜித்குமார் கொலைக்கு நீதி கேட்டு த.வெ.க. இன்று போராட்டம..!

20 நிபந்தனைகளுடன் போலீசார் அனுமதி அளித்துள்ளனர். மீறினால் நடவடிக்கை பாயும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் கோவில் காவலாளி அஜித்குமார் போலீஸ் விசாரணையில் உயிரிழந்த சம்பவத்துக்கு நீதி கேட்டு த.வெ.க. சார்பில் சென்னை சேப்பாக்கம் சுவாமி சிவானந்தா சாலையில்…

13.89 லட்சம் பேர் தமிழகத்தில் இன்று குரூப்-4 தேர்வு எழுதுகிறார்கள்..!

தமிழகம் முழுவதும் 38 மாவட்டங்களில் 314 மையங்களில் தேர்வை எழுத இருக்கிறார்கள். தமிழ்நாடு அரசுத்துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) தேர்வுகளை நடத்தி தகுதியானவர்களை தேர்வு செய்கிறது. அந்தவகையில் கிராம நிர்வாக அலுவலர், இளநிலை உதவியாளர்,…

ஏர் இந்தியா விமான விபத்து – வெளியானது முதல்கட்ட அறிக்கை..!

விமானி ஒருவர் எரிபொருளை ஏன் நிறுத்தினீர்கள்? என்று கேட்டார். அதற்கு மற்றொரு விமானி தான் நிறுத்தவில்லை என்று பதில் அளித்தார். குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் இருந்து லண்டனுக்கு புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் கடந்த மாதம் 12 ஆம் தேதி கோர…

மத்திய அரசு எல்.ஐ.சி. பங்குகளை விற்கிறது..!

எல்.ஐ.சி.யில் மத்திய அரசுக்கு 96.5 சதவீத பங்குகள் உள்ளன. பொதுத்துறை காப்பீட்டு நிறுவனமான எல்.ஐ.சி.யின் 3.5 சதவீத பங்குகளை கடந்த 2022-ம் ஆண்டு மத்திய அரசு விற்பனை செய்தது. அதன்மூலம் மத்திய அரசுக்கு ரூ.21 ஆயிரம் கோடி வருவாய் கிடைத்தது. தற்போது,…

அடுத்த மாதம் 29-ந் தேதி புரோ கபடி லீக் போட்டி தொடக்கம்..!

போட்டி நடைபெறும் இடம், அட்டவணை உள்ளிட்ட விவரங்கள் விரைவில் அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. நடப்பு சாம்பியன் அரியானா ஸ்டீலர்ஸ், தபாங் டெல்லி, பாட்னா பைரட்ஸ், தமிழ் தலைவாஸ், பெங்களூரு புல்ஸ் உள்பட 12 அணிகள் பங்கேற்கும் 12-வது புரோ கபடி லீக்…

பிரேசிலின் உயரிய விருது வழங்கி பிரதமர் மோடிக்கு கவுரவிப்பு..!

பிரேசில் பயணத்தை முடித்தப்பின் பிரதமர் மோடி நமீபியா செல்கிறார். பிரதமர் மோடி கானா, டிரினிடாட் அண்டு டொபாகோ, அர்ஜென்டினா, பிரேசில் மற்றும் நமீபியா ஆகிய 5 நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். அந்த வகையில் பிரதமர் மோடி நேற்று பிரேசில் சென்றார். பிரேசிலில்…

தமிழ்நாட்டில் அரசு பேருந்துகள் வழக்கம்போல் இயக்கப்படும்..!

வேலை நிறுத்த போராட்டத்தில் பங்கேற்க மாட்டோம் என இந்து ஆட்டோ தொழிலாளர்கள் சங்கமும் அறிவித்து உள்ளது. அகில இந்திய அளவில், இன்று அறிவிக்கப்பட்டுள்ள பொது வேலை நிறுத்த போராட்டத்தில் தமிழகத்தில் தி.மு.க.வின் தொ.மு.ச., மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் சி.ஐ.டி.யூ, உள்பட 13…

நாடு தழுவிய வேலைநிறுத்த போராட்டம் தொடங்கியது..!

போராட்டம் அறிவிக்கப்பட்டநிலையில், பணிக்கு வராவிட்டால் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று அரசு ஊழியர்களுக்கு தமிழக அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. நாடு முழுவதும் விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த வேண்டும், குறைந்தபட்ச ஊதிய உயர்வை அதிகரிக்க வேண்டும், பொதுத் துறை நிறுவனங்களை தனியார் மயமாக்குவதை…

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!