மீண்டும் நீலகிரி, கோவை மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை..!

நீலகிரி, கோவை மாவட்டங்களுக்கு இன்றும், நாளையும் அதிகனமழைக்கான சிவப்பு எச்சரிக்கையை வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ளது. வடமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி, இன்றுக்குள் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறக் கூடும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.…

கமலுக்கு கர்நாடக முதல்-மந்திரி கண்டனம்.!

தமிழில் இருந்து பிறந்ததுதான் கன்னடம் என கமல்ஹாசன் பேசியிருந்ததற்கு கர்நாடகாவில் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிலம்பரசன், திரிஷா நடித்துள்ள ‘தக் லைப்’ படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் அண்மையில் நடைபெற்றது. இதில் பேசிய கமல்ஹாசன் கன்னட…

எந்தெந்த மாவட்டங்களுக்கு ” ரெட் அலர்ட்”..?

மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள மாவட்டங்களில் கனமழை பெய்து வருகின்றது. வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகி உள்ளது. இந்நிலையில் வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுப்பகுதி, தற்போது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதியாக வலுவடைந்துள்ளது. இதனைத்தொடர்ந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி மேலும் வலுவடைந்து…

தி.மு.க. அரசை வீட்டுக்கு அனுப்பி வைப்பது உறுதி: விஜய்..!

அண்ணா பல்கலை.மாணவியைப் பாலியல் வன்கொடுமை செய்த வழக்கி ஞானசேகரன் குற்றவாளி என்று தீர்ப்பு வழங்கப்பட்டிருப்பதைத் தவெக வரவேற்கிறது என விஜய் தெரிவித்துள்ளார். தவெக தலைவர் விஜய் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், அண்ணா பல்கலைக்கழக மாணவியைப் பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில்…

மாநிலங்களவை எம்.பி. ஆகிறார் ம.நீ.ம. தலைவர் கமல்ஹாசன்..!

வைகோ, அன்புமணி உள்ளிட்ட 6 தமிழக எம்.பி.க்களின் பதவிக்காலம் முடிகிறது. புதிய எம்.பி.க்களை தேர்ந்தெடுப்பதற்கான மாநிலங்களவை தேர்தல் ஜூன் 19-ந் தேதி நடக்கிறது. இந்தநிலையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிவிப்பில், 2025 ஜூன் 19 அன்று நடைபெறவிருக்கும் மாநிலங்களவை உறுப்பினர்…

இந்தியாவுடன் பேச்சுவார்த்தைக்கு தயார் – பாகிஸ்தான் அறிவிப்பு..!

இந்தியாவுடன் அமைதிப் பேச்சுவார்த்தைக்கு தயாராக இருப்பதாக பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் தெரிவித்துள்ளார். காஷ்மீரின் பஹல்காம் சுற்றுலாத் தலத்தில் பயங்கரவாதிகள் சுற்றுலாப் பயணிகள் மீது வெறித்தனமாக துப்பாக்கிசூடு நடத்தினர். இதில் 26 பேர் கொல்லப்பட்டனர். இந்த பயங்கரவாத சம்பவம் நாட்டையே அதிர்ச்சிக்கு…

உருவாகிறது காற்றழுத்த தாழ்வுப்பகுதி..!

கோவை, நீலகிரி மாவட்டங்களில் இன்றும், நாளையும் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக கனமழை முதல் மிக கனமழை கொட்டித் தீர்க்கிறது. நேற்றும், தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் அதி கனமழை பெய்தது. குறிப்பாக, நீலகிரி…

புதிய அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள்: முதல்-அமைச்சர் தொடங்கி வைத்தார்..!

திருவிடைமருதூர், கொளக்காநத்தம் உள்ளிட்ட இடங்களில் 11 புதிய அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் தொடங்கப்பட்டுள்ளன. ஏழை, எளிய கிராமப்புற மாணவர்களின் உயர்கல்வித் தேவையை நிறைவு செய்யும் பொருட்டு, குறிப்பாக மாணவிகளுக்கு உயர்கல்வியில் சிறந்த வாய்ப்புகளை உருவாக்கித் தருவதற்காக உயர்கல்வித்துறை சார்பில்…

ஜூன் 2 வது வாரத்தில் ராயபுரத்தில் தற்காலிக பஸ் நிலையம் திறக்க நடவடிக்கை..!

ராயபுரத்தில் தற்காலிக பஸ் நிலையம் கட்டும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. சென்னை மாநகரின் பிராட்வே பஸ் நிலையம் பழமையானது. தினந்தோறும் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் இப்பேருந்து நிலையத்தை பயன்படுத்தி வருகின்றனர். இதை ரூ.823 கோடியில் ஒருங்கிணைந்த போக்குவரத்து முனையமாக மாற்றும்…

சென்னைக்கு தனி பேரிடர் மேலாண்மை : தமிழ்நாடு அரசு உத்தரவு

சென்னை மாநகருக்கு தனி பேரிடர் மேலாண்மை ஆணையத்தை உருவாக்கி தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. பேரிடர் காலங்களில் அனைத்து துறைகளையும் ஒருங்கிணைந்து, பேரிடர்களை எதிர்கொள்ளும் வகையில் புதிய முயற்சியாக தனி பேரிடர் மேலாண்மை ஆணையத்தை தமிழ்நாடு அரசு உருவாக்கி உள்ளது. அதாவது, சென்னை…

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!