திருச்செந்தூரிலிருந்து பக்தர்கள் தங்களது ஊர்களுக்கு திரும்பி வருவதற்கும் சிறப்பு பஸ்களும் இயக்கப்படுகின்றன.
தமிழ்நாடு அரசு விரைவு போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குனர் ஆர்.மோகன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
திருச்செந்தூர் முருகன் கோவிலில் வருகிற 7-ந்தேதி கும்பாபிஷேகம் நடைபெறுவதை முன்னிட்டு பக்தர்களின் வசதிக்காக அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் மூலம் 4-ந்தேதி (நாளை) முதல் 6-ந்தேதி வரை சென்னை, திருச்சி, புதுச்சேரி, கும்பகோணம், சேலம், பெங்களூரு, தஞ்சாவூர், கோயம்புத்தூர், ஈரோடு, நாகப்பட்டினம் ஆகிய இடங்களிலிருந்து திருச்செந்தூருக்கு 400 சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன.
