சென்னை ஐகோர்ட்டில் நிரந்தர நீதிபதிகளாக இருவர் பதவியேற்பு..!

சென்னை ஐகோர்ட்டில் 2 பேர் நிரந்தர நீதிபதிகளாக பதவியேற்றுக்கொண்டனர். சென்னை ஐகோர்ட்டில் கூடுதல் நீதிபதிகளாக பதவி வகித்த நீதிபதிகள் ஆர்.சக்திவேல் மற்றும் பி.தனபால் ஆகியோர் நிரந்தர நீதிபதிகளாக இன்று பதவியேற்று கொண்டனர். அவர்களுக்கு தலைமை நீதிபதி கே.ஆர்.ஸ்ரீராம் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.…

12-ம் தேதி தஞ்சாவூர் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை..!

தஞ்சாவூர் மாவட்டத்திற்கு 12-ம் தேதி உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. கும்பகோணத்தில் 12 சிவன் கோவில்கள் மற்றும் 5 பெரு மாள் கோவில்களில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை மகா மக விழாவும், ஆண்டுதோறும் மாசிமக விழாவும் நடக்கும். கும்பகோணத்தில் உள்ள மகாமக குளக்கரையில்…

மூர்மார்க்கெட்-கும்மிடிப்பூண்டி மின்சார ரெயில் ரத்து..!

பராமரிப்பு பணி காரணமாக மூர்மார்க்கெட்-கும்மிடிப்பூண்டி மின்சார ரெயில் ரத்து செய்யப்பட்டுள்ளது. சென்னை சென்டிரல் – கூடூர் வழித்தடத்தில் உள்ள கும்மிடிப்பூண்டி பணிமனையில் இன்று (திங்கட்கிழமை) காலை 9.15 மணி முதல் மதியம் 1.15 மணி வரையில் (4 மணி நேரம்) பராமரிப்பு…

இளையராஜாவுக்கு தமிழக அரசு சார்பில் வரவேற்பு..!

பிரபல இசையமைப்பாளர் இளையராஜா, லண்டனில் ‘சிம்பொனி’ இசையை அரங்கேற்றினார். தமிழ் சினிமாவின் முன்னணி இசையமைப்பாளரான இளையராஜா, சினிமாவில் 1,500 படங்களுக்கு மேல் இசையமைத்து சாதனை ராஜாவாக திகழ்ந்து வருகிறார். இசைக்கு அவர் அளித்த பங்களிப்பை போற்றும் வகையில் பல்வேறு விருதுகளை அளித்த…

வரலாற்றில் இன்று (மார்ச் 10)

வரலாறு என்பது இறந்த காலத்தில் நிகழ்ந்த விஷயத்தை பற்றி நாம் தெரிந்து கொள்ளும் ஒன்றாகும். குறிப்பாக வரலாற்றில் ஒருவர் செய்த சாதனைகள், தியாகங்கள், சிறப்புகள் இதுபோன்ற பலவகையான முக்கிய விஷயங்கள் பற்றி அனைவருக்கும் தெரியப்படுத்தும் விஷயமாகும். தெளிவாக சொல்ல வேண்டும் என்றால்…

பிரமாண்டமாக அரங்கேற்றப்பட்ட ‘இசைஞானி’ இளையராஜாவின் முதல் சிம்பொனி இசை..!

இந்திய நேரப்படி நள்ளிரவு 12.30 மணிக்கு வேலியன்ட் சிம்பொனி இசை அரங்கேற்றப்பட்டது. 1976 ம் ஆண்டு தேவராஜ்-மோகன் இயக்கத்தில் வெளியான ‘அன்னக்கிளி’ படத்தின் மூலம் அறிமுகமானவர் இசைஞானி இளையராஜா. இவர் தனது வரலாற்றில் இதுவரை 1,000க்கும் மேற்பட்ட படங்களுக்கு இசையமைத்துள்ளார். தற்போது,…

கன்னியாகுமரியில் அலைமோதிய சுற்றுலா பயணிகள் கூட்டம்..!

வார விடுமுறையையொட்டி கன்னியாகுமரியில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதியுள்ளது. உலக புகழ்பெற்ற சுற்றுலாத்தலமான கன்னியாகுமரியில் தினமும் ஆயிரக்கணக்கான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வந்து செல்கிறார்கள். விடுமுறை நாட்களிலும், பண்டிகை நாட்களிலும் ஏராளமான சுற்றுலா பயணிகள் கன்னியாகுமரிக்கு வருவார்கள். அந்தவகையில்…

கடலூரில் ஆர்ப்பாட்டம் நடத்த விஜய் திட்டம்?

இலங்கை கடற்படை, மத்திய அரசை கண்டித்து மீனவர்களை திரட்டி கடலூரில் ஆர்ப்பாட்டம் நடத்த விஜய் திட்டமிட்டு இருப்பதாக கூறப்படுகிறது. இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் அடிக்கடி சிறை பிடிக்கும் சம்பவம் அரங்கேறி வருகிறது. தமிழக மீனவர்களின் படகுகளும் பறிமுதலுக்கு உள்ளாகிறது. இலங்கை…

திமுக எம்.பி.க்கள் கூட்டம் தொடங்கியது..!

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக எம்.பி.க்கள் கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது. நாடாளுமன்ற கூட்டத்தொடர் கடந்த ஜனவரி 31-ந் தேதி தொடங்கியது. பிப்ரவரி 1-ந் தேதி பொது பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. அதனை தொடர்ந்து பட்ஜெட் மீதான விவாதம் நாடாளுமன்றத்தில் நடைபெற்றது.…

இறுதிப்போட்டியில் இந்தியா-நியூசிலாந்து இன்று மோதல்..!

ஐ.சி.சி. சாம்பியன்ஸ் டிராபி இறுதிப்போட்டியில் இந்தியா- நியூசிலாந்து அணிகள் இன்று மோதுகின்றன. ஐ.சி.சி. சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் போட்டி கடந்த மாதம் 19-ந்தேதி பாகிஸ்தானில் தொடங்கியது. பாதுகாப்பு காரணங்களுக்காக இந்திய அணி, பாகிஸ்தான் செல்ல மறுத்ததால் இந்திய அணிக்குரிய ஆட்டங்கள் மட்டும்…

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!