பத்தினி என்ற பெயரில் பெண் தெய்வமாக புத்த துறவிகளாலும், கண்ணகி அம்மனாக தமிழர்களால் இலங்கையில் வழிபடப்படுகிறது. கேரளாவில் கொடுங்கநல்லூர் பகவதி, மங்கல தேவி, ஆற்றுக்கால் அம்மன் என்ற பெயரில் வழிபடப்படுகிறது. இந்த கோவில் தமிழ்நாடு, கேரளா எல்லையில் உள்ள வண்ணதிபாறை என்ற இடத்தில் அமைந்துள்ளது. செல்லத்தம்மன் கோவில் தமிழ் நாட்டில் மதுரையில் உள்ள ஒரே கண்ணகி கோவில் இந்த கோவில் கடல் மட்டத்திலிருந்து 4 ஆயிரத்து 380 அடி உயரத்தில் மேற்கு தொடர்ச்சி மலையின் மீது அமைந்துள்ளது. […]Read More
மகாலட்சுமி பூஜை திருமகளான லட்சுமிதேவி அவதரித்த நாளாக, தீபாவளி சொல்லப்படுகிறது. எனவே அன்றைய தினம், வீட்டு பூஜை அறையில் மகாலட்சுமி படத்தை வைத்து, அதனை மலர்களால் அலங்கரிக்க வேண்டும். பின்னர் சர்க்கரைப் பொங்கலை நைவேத்தியமாக படைத்து, தீப- தூபங்களால் ஆராதனை செய்து வழிபடுங்கள். இதனால் திருமணம் கைகூடும். வீட்டில் லட்சுமி கடாட்சமும் வந்துசேரும். குபேர பூஜை செல்வத்திற்கு அதிபதி மகாலட்சுமி என்றாலும், அவற்றைப் பிரித்து வழங்கும் நிதிகள் அனைத்தும் குபேரனின் வசம் இருப்பதாக புராணங்கள் சொல்கின்றன. அந்த […]Read More
நவராத்திரி பண்டிகை கோலாகலமாகக் கொண்டாடப்பட்டு வருகின்றது. இந்த பண்டிகையில் கடைசியில் வரக்கூடிய ஆயுத பூஜை, சரஸ்வதி பூஜை, விஜயதசமி பூஜை எப்போது என்றும், ஆயுதப் பூஜைக்கான சுப நேரங்கள் என்ன என்பதைப் பற்றியும் நமது ஓம் நமசிவாய ஆன்மீக குழுவிலிருந்து விரிவாக தெரிந்துகொள்ளலாம். நவராத்திரியின் முக்கியத்துவமே மகிஷாசுரனை முப்பெரும் தேவியர் சேர்ந்து ஒரு உருவமாகி விரதமிருந்து அழிப்பது தான். அதோடு மனித வாழ்க்கையில் ஒழுக்கத்தைக் கற்றுத் தருவதாக அமைந்துள்ளது. ஒவ்வொரு வருடமும் புரட்டாசி மாதத்தில் வரக்கூடிய மகாளய […]Read More
மூகாம்பிகை கலைகளுக்கு அதிதேவதையாக கருதப்படுகிறாள். கொல்லூர் மூகாம்பிகை பற்றிய அரிய 60 தகவல்களை பற்றி விரிவாக பார்க்கலாம். 1. மூகாம்பிகை கலைகளுக்கு அதிதேவதையாக கருதப்படுகிறாள். கவிஞர்கள், எழுத்தாளர்கள், இசைக்கலைஞர்கள், பாடகர்கள், திரைத்துறையினர், நடிகர்கள், நாட்டியமணிகள், சிற்பிகள், ஓவியர்கள் போன்ற பல்வேறு துறையைச் சார்ந்த கலைஞர்கள் தங்கள் கலைத்திறன் சிறப்படைய வேண்டும் என்று கொல்லூர் மூகாம்பிகையை தொழுது செல்கின்றனர். 2. கொல்லூர் ஆலயத்தில் உள்ள சரஸ்வதி மண்டபத்தில் கவிஞர்களும் இசைக்கலைஞர்களும், நாட்டியக்கலைஞர்களும் தங்கள் படைப்புகளை படைத்து அம்மனுக்கு கலாஞ்ஜலி […]Read More
1.திருவான்மியூர்– மருந்து லிங்கம். பிறவி நோய் உட்பட எல்லா நோயும் தீர்க்கும் பெரிய அருமருந்தாக ஈசன் விளங்குகிறார். திருவான்மியூர் சென்று அடைந்தார் மேல் சென்று அடையா மற்று இடர் நோயே என்பது தெய்வீக மழலையின் வாக்கு. 2.வைதீசுவரன் கோயில். வைதிய லிங்கம். எல்லா வைதியர்களுக்கும் மேலான ஒரே பெரிய வைதியர் மருத்துவர் வைதீசுவரர். ரிக் வேத மந்திரத்தால் வெண்மணல் சிவலிங்கமான தலம். 3.திருவதிகை (பண்ணுருட்டி அருகே) திருவதிகை வீரட்டானேசுவரர் திருநாவுக்கரசரின் தீராத சூலை நோயைத் தீர்த்து அருளினார். […]Read More
முன்னூறு ஆண்டுகளாக ஆண்டுக்கு ஒரு முறை நீரில் மூழ்கி காணாமல் போகும் அதிசய முருகன் கோயில்…!!! தமிழகத்தில் எண்ணிலடங்கா கோயில்களில் சொல்லி தீராத பலப்பல அதிசயங்கள் நிகழ்ந்தவண்ணம்தான் இருக்கின்றன. அவற்றில் ஒரு கோயில்தான் இந்த முருகன் கோயில். இங்கு ஆண்டுக்கு ஒருமுறை ஏற்படும் வெள்ளத்தை எதிர்த்து பல நூறு ஆண்டுகளாக இந்த கோயில் எந்தவித சேதமும் இன்றி நிலைத்து நிற்பதன் அதிசயத்தை ஆராய்ச்சியாளர்களால் கண்டுபிடிக்க முடியவில்லை. நெல்லை மாவட்டம் பாபநாசம் தொடங்கி தூத்துக்குடி பகுதியில் உள்ள துணைக்காயம் […]Read More
கோகுலாஷ்டமி, கிருஷ்ணருடைய பிறந்தநாள். உலகம் முழுவதும் இருக்கக் கூடிய பக்தர்கள் கிருஷ்ணருடைய பிறந்த நாளை கொண்டாடுகிறார்கள். இதில் இரண்டு விதமான விஷயங்களை முதலில் நாம் பார்த்துவிடலாம். கீதாசாரம்: பகவான் கிருஷ்ணர் கூறுகிறார்:- பரித்ராணாய சாதூனாம் விநாசாய சதுஷ்க்ருதாம் தர்ம சம்ஸ்தாபனார்த்தாய சம்பவாமி யுகே யுகே எப்பொழுதெல்லாம் தர்மம் அழிந்து அதர்மம் தலைஎடுக்கிறதோ அப்பொழுதெல்லாம் தர்மத்தை நிலைநாட்ட நான் அவதரிப்பேன் யுகம் யுகமாக என்பது கீதாசாரம். கோகுலாஷ்டமி என்றால் என்ன? கிருஷ்ண ஜெயந்தி என்றால் என்ன? இவை இரண்டுக்கும் […]Read More
நவராத்திரி உருவான வரலாறு மற்றும் இன்றைய தேவியை வழிபடும் முறைகள் பற்றிப் பார்ப்போம். முன்னொரு காலத்தில் எருமைத் தலையுடன், மனித உடலும் கொண்ட ஓர் அரக்கன் இருந்தான். அவன் பெயரே, மகிஷாசுரன். அவன் பிரம்மதேவரை நோக்கி கடுந்தவம் இருந்தான். அவன் தவத்தால் மனம் மகிழ்ந்த பிரம்மதேவர், அவனுக்கு வரமளிக்க அவன் முன் தோன்றினார். மகிஷாசுரன் அவரை வணங்கித் தொழுதான். அவனிடம் பிரம்மதேவர், “உன் தவத்தால் யாம் பெரிதும் மகிழ்ந்தோம், வேண்டிய வரத்தைக் கேட்பாய்!” என்று கூறினார். இதைக் […]Read More
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி, கவரப்பேட்டை அருகில் உள்ள கிராமம் அரியதுறை. இங்கே ஸ்ரீமரகதவல்லி சமேத ராக ஸ்ரீவரமூர்த்தீஸ்வரர் அருள்பாலிக்கும் ஆலயத்தில், ஸ்ரீகிருஷ்ண பரமாத்மாவின் அம்சமாக வணங்கப்பட்டு வருகிறது ஓர் அரசமரம்! ரோம மகரிஷி தவம் புரிய ஏற்ற இடமாக ஸ்ரீபிரம்மதேவனால் சுட்டிக்காட்டப்பட்ட தலம் இது எனப் போற்றுகிறது தலபுராணம். இந்த ஊரைத் தழுவியபடி ஓடும் நதியும் பிரம்மனால் உருவாக்கப்பட்டது. எனவே, பிரம்மாரண்ய நதி எனும் பெயர் பெற்றது. தற்போது இந்த நதி வறண்டு காணப்பட்டாலும், நதிப்படுகையில் ஓரிடத்தில் […]Read More
ஆடி பெயர் வந்தது எப்படி தெரியுமா?. ஆடி என்பது ஒரு தேவமங்கையின் பெயர்என்கிறது புராணம் ஒரு சமயம். பார்வதிதேவி ஈசனைப் பிரிந்து தவம் செய்யும் நிலை ஏற்பட்டது. சிவபெருமான் தனிமையில் இருப்பதை அறிந்த ஆடி என்னும் தேவகுல மங்கை பாம்பு உருவம் எடுத்து, கயிலையின் உள்ளே யாரும் அறியா வண்ணம் நுழைந்தாள். பிறகு பார்வதி தேவியாக உருமாறி சிவபெருமான் அருகில் சென்றாள். அப்போது ஒரு கசப்பான சுவையை சிவபெருமான் உணர்ந்தார். தன்னை நோக்கி வந்தவள் பார்வதி அல்ல […]Read More
- புஷ்பா – 2 படத்தின் முதல் சிங்கிள் பாடல் வெளியானது..!
- திருவொற்றியூர் வடிவுடையம்மன் அம்மன் கோயில் உற்சவம் கொடியேற்றத்துடன் தொடக்கம்..!
- வரலாற்றில் இன்று ( 02.05.2024)
- இன்றைய ராசி பலன்கள் ( மே 02 வியாழக்கிழமை 2024 )
- 10-ம் வகுப்பு பாடத்தில் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் வரலாறு..!
- புதிய உச்சம் தொட்ட GST வசூல்..!
- அதிக வருவாய் ஈட்டிய ரயில் நிலையங்களின் பட்டியலை வெளியிட்டது தெற்கு ரயில்வே..!
- வணிக பயன்பாட்டு சிலிண்டர் விலை குறைவு..!
- வரலாற்றில் இன்று ( 01.05.2024)
- இன்றைய ராசி பலன்கள் ( மே 01 புதன்கிழமை 2024 )