கோலாகலமாக தொடங்கியது கந்த சஷ்டி திருவிழா..!

உலகப்புகழ் பெற்ற திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கந்த சஷ்டி திருவிழா யாகசாலை பூஜைகளுடன் கோலாகலமாகத் துவங்கியது.

முருகப்பெருமானின் ஆறுபடை வீடுகளில் 2-ம் படை வீடான திருச்செந்தூர் முருகன் கோயில் மிகவும் பிரசித்தி பெற்றது. இந்தக் கோயிலில் நடைபெறும் முக்கிய விழாக்களில் ஒன்றான புகழ்பெற்ற கந்த சஷ்டி திருவிழா இன்று (நவ.2) காலை யாகசாலை பூஜையுடன் கோலகலமாக தொடங்கியது. இதனை முன்னிட்டு இன்று நள்ளிரவு 1 மணியளவில் கோயில் நடைதிறக்கப்பட்டு, 1.30 மணியளவில் விஸ்வரூப தரிசனமும், 2 மணியளவில் உதயமார்த்தாண்ட அபிஷேகமும் நடைபெற்றது.

தொடர்ந்து அதிகாலை 5.30 மணிக்கு மேல் சுவாமி ஜெயந்திநாதர் யாகசாலை மண்டபத்தில் எழுந்தருளினார். காலை 7 மணியளவில் யாகசாலை பூஜைகளுடன் கந்த சஷ்டி திருவிழா வெகு விமர்சையாக தொடங்கியது . தமிழ்நாடு மட்டுமல்லாமல் வெளிமாநிலம் மற்றும் வெளிநாடுகளில் இருந்து வந்த ஏராளமான பக்தர்கள் கடலில் புனித நீராடி பச்சை நிற உடை அணிந்து விரதம் இருக்க துவங்கினர்.

மேலும், பக்தர்கள் அங்கப்பிரதட்சிணம், அடிப்பிரதட்சிணம் செயதும் கந்தசஷ்டி பாடல்களை பாடியும் தங்கள் வேண்டுதல்களை நிறைவேற்றினர். விரதம் இருக்ககூடிய பக்தர்கள் தங்குவதற்கு வசதியாக கோயில் நிர்வாகம் சார்பில் 18 இடங்களில் முப்பதாயிரத்திற்கும் மேற்பட்டோர் தங்கும் வகையில் கொட்டகைகள் அமைக்கப்பட்டுள்ளன. அவர்களுக்கு தேவையான குடிநீர், கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் அனைத்தும் செய்யப்பட்டுள்ளன. திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான சூரசம்காரம் வருகிற 7ம் தேதி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!