Tags :அமுதா தமிழ்நாடன்

கவிதைகள்

நட்பு சூழ் உலகு

விடிகாலை உறக்கம்கலைகிறேன்வேப்பமரத்துக் குயிலின்சினேகமான குரலோசையில்.வீதியிலிருந்தேவிசிறி அடிக்காமல்செய்தித்தாளைக்கரங்களில் கொடுத்துவிட்டுகாலை வணக்கம்சொல்லிப் போகிறான்பகுதி நேர வேலை பார்க்கும்பள்ளிச் சிறுவன் மூன்றாவது மாடி ஏறிவந்துமூட்டு வலி எப்படிமா இருக்கு ?அக்கறையான விசாரிப்போடுபால் ஊற்றிப் போகிறார்பல்லுப் போன தாத்தாதொட்டிச் செடில மொதல்லபூத்தப் பூவும்மாபாப்பாவுக்கு வச்சுவுடுமாஆசஆசையாய்கீரையோடு ரோசாப்பூவையும்வைத்து விட்டுப்போகிறார்வெள்ளாயிப் பாட்டிநகரத்து மனிதர்களும்நட்பு பாராட்டுவார்கள்இவர்களின்நட்பு சூழ் உலகில்தான்ஒவ்வொரு நாளும் நகர்கிறதுஎனக்கு.Read More

கவிதைகள்

நட்பின் வலி

நட்பின் வலி_________ பிரியமான தோழிஅடிமனதில் இருந்துஅடுக்கடுக்காய் மலர்கிறது நம் நேற்றைகளின்கண்ணீர் பூக்கள் . நம் இருவரின் பால்யம்கரைந்த வீதிகளின்வெளிர் விரிப்பும் நம் சாயங்காலப் பொழுதுகளைக்கரைத்தகிராமத்து வீடுகளின்தாயக் கட்டைத் திண்ணைகளும் அக்கம் பக்க வானரங்களோடுக.ண் பொத்தி விளையாண்டகதவு இடுக்குகளும் சிரிக்கச் சிரிக்கக்கதை பேசி மகிழ்ந்தஆற்றங்கரை கல்த் திட்டுகளும் திருட்டுத்தனமாய்நாம் எலந்தம்பழம்உலுக்கியபட்டாளத்தார் வீட்டுக் கொல்லையும் அந்த நாமக்காரகணக்கு வாத்தியார் வீட்டுலநாம களவாண்டகுட்டிக் குட்டி கனகாம்பரச் செடிகளும் பென்சில் டப்பாவில்கலர் கலரா சேமித்தகண்ணாடி வளையல்களும் எட்டுக்குடி சித்ராப் பவுர்ணமிதிருவிழாக் கூட்டத்தில்தொலைந்து போனஉன் ஒற்றைக் […]Read More