CBSC 10, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு தொடக்கம்

சென்னை: சிபிஎஸ்இ பாடத்​திட்​டத்​தில் 10, 12-ம் வகுப்​புகளுக்​கான பொதுத் ​தேர்வு நேற்று தொடங்​கியது. மத்​திய இடைநிலைக் கல்வி வாரி​யத்​தின் (சிபிஎஸ்இ) கீழ் நாடு முழு​வதும் 29 ஆயிரத்​துக்​கும் மேற்​பட்ட பள்​ளி​கள் இயங்கி வரு​கின்​றன.

சிபிஎஸ்இ பாடத்​திட்​டத்​தில் 10, 12-ம் வகுப்​புகளுக்கு ஆண்​டு​தோறும் பொதுத் தேர்​வு​கள் நடத்​தப்​படு​கின்​றன. அதன்​படி நடப்​பாண்டு 10, 12-ம் வகுப்பு பொதுத்​தேர்வு நேற்று தொடங்​கியது.

முதல் நாளில் 12-ம் வகுப்​புக்கு உயிர்​தொழில்​நுட்பம், தொழில்​முனை​வோர், சுருக்​கெழுத்து தேர்​வுகளும், 10-ம் வகுப்​புக்கு கணிதம் தேர்வும் நடந்​தது. இதை மாணவ, மாணவி​கள் ஆர்​வ​முடன் எழு​தினர்.

இந்​தாண்டு 10-ம் வகுப்பு பொதுத்​தேர்வு மார்ச் 11-ம் தேதி வரை​யும், 12-ம் வகுப்பு பொதுத்​தேர்வு ஏப்​ரல் 10-ம் தேதி வரை​யும் நடத்​தப்பட உள்​ளன. இந்த தேர்வை 43 லட்​சத்து 67,870 மாணவர்​கள் எழுதுகின்​றனர். தமிழகத்​திலிருந்து மட்​டும் சுமார் 1.3 லட்​சம் மாணவர்​கள் சிபிஎஸ்இ தேர்வை எழுது​வ​தாகக் கூறப்​படு​கிறது.

இதற்​காக நாடு முழு​வதும் 8,074 தேர்வு மையங்​கள் அமைக்​கப்​பட்​டுள்​ளன. மேலும் விடைத்​தாள்​கள் திருத்​தப்​பட்டு தேர்வு முடிவு​கள் ஏப்​ரல் இறு​தி​யில் வெளி​யிடப்​படும் என்று தேர்​வுத் துறை அதி​காரி​கள் தெரி​வித்​தனர்.

நடப்​பாண்டு முதல் 10-ம் வகுப்பு பொதுத்​தேர்வு 2 முறை நடத்​தப்பட உள்​ளது. அதன்​படி முதல் தேர்வு தற்​போது நடை​பெற்று வரு​கிறது. 2-வது தேர்வுமே 15 முதல் ஜூன் 1-ம் தேதி வரை நடத்​தப்பட உள்​ளது.

முதல் தேர்வு மதிப்​பெண்ணை உயர்த்​திக் கொள்ள விரும்​பி​னாலோ அந்த தேர்​வில் தோல்வி அடைந்​து​விடு​வோம் என்று கரு​தி​னாலோ இந்த தேர்வை எழுதி மதிப்​ பெண்ணை அதி​கரிக்க முடி​யும். இவ்விரு தேர்​வு​களில் அதி​கமான மதிப்​பெண் கணக்கில் கொள்​ளப்​படும் என்​பது குறிப்​பிடத்​தக்​கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!