வரலாற்றில் இன்று (செப்டம்பர் 20)

வரலாறு என்பது இறந்த காலத்தில் நிகழ்ந்த விஷயத்தை பற்றி நாம் தெரிந்து கொள்ளும் ஒன்றாகும். குறிப்பாக வரலாற்றில் ஒருவர் செய்த சாதனைகள், தியாகங்கள், சிறப்புகள் இதுபோன்ற பலவகையான முக்கிய விஷயங்கள் பற்றி அனைவருக்கும் தெரியப்படுத்தும் விஷயமாகும். தெளிவாக சொல்ல வேண்டும் என்றால் தங்கள் வாழும் காலத்தின் பின்னணியில் கடந்த காலத்தின் நிகழ்வுகளை விளக்கி வரலாறாக எழுதுகின்றனர். சரி இந்த பதிவில் நாம் நமது வாழ்வில் கடந்து செல்லும் ஒவ்வொரு நாட்களிலும் ஏதாவது ஒரு விஷயம் நிகழ்ந்திருக்கலாம் அந்த  வகையில் வரலாற்றில் இன்று என்ன நாள்? என்பதை பற்றி நாம் நமது மின்கைத்தடியின் இந்த தொகுப்பில் படித்து தெரிந்து கொள்வோம் வாங்க..

வரலாற்றில் இன்று | Today History in Tamil

செப்டம்பர் 20 (September 20) கிரிகோரியன் ஆண்டின் 263 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 264 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 102 நாட்கள் உள்ளன.

நிகழ்வுகள்

1187 – சலாதின் ஜெருசலேம் மீதான தாக்குதலை ஆரம்பித்தான்.
1519 – பேர்டினண்ட் மகலன் 270 பேருடன் ஸ்பெயின் நாட்டின் சான்லூகர் டி பரமேடா என்ற இடத்தில் இருந்து உலகைச் சுற்றிவரப் புறப்பட்டார்.
1633 – சூரியனைப் பூமியைச் சுற்றுவதாகத் தெரிவித்த கலிலியோ கலிலி கத்தோலிக்க மதகுரு மாடத்தின் முன்னால் விசாரிக்கப்பட்டார்.
1697 – ஒன்பதாண்டுப் போரை (1688-1697) முடிவுக்குக் கொண்டுவரும் பொருட்டு பிரான்ஸ், இங்கிலாந்து, ஸ்பெயின், புனித ரோமப் பேரரசு டச்சுக் குடியரசு ஆகியவற்றிற்கிடையில் அமைதி உடன்பாடு எட்டப்பட்டது.
1847 – நீலப் பென்னி அஞ்சல் தலையை பிரித்தானியா மொரீசியசில் வெளியிட்டது.
1854 – பிரித்தானியா மற்றும் பிரெஞ்சுப் படையினர் கிறிமியாவில் இடம்பெற்ற போரில் ரஷ்யர்களைத் தோற்கடித்தனர்.
1857 – கிழக்கிந்தியக் கம்பனிக்கு விசுவாசமான படைகள் டெல்லியைக் கைப்பற்றினர். சிப்பாய் எழுச்சி முடிவுக்கு வந்தது.
1878 – த ஹிண்டு இதழ் வெளியிட ஆரம்பிக்கப்பட்டது.
1932 – மகாத்மா காந்தி பூனே சிறையில் உண்ணாநோன்பை ஆரம்பித்தார்.
1942 – உக்ரேனில் நாசி ஜேர்மனியர்கள் இரண்டு நாட்களில் மொத்தம் 3,000 யூதர்களைக் கொன்றனர்.
1945 – மகாத்மா காந்தியும் ஜவகர்லால் நேருவும் பிரித்தானியப் படைகளை வெளியேறக் கோரினர்.
1966 – சேர்வெயர் 2 விண்கலம் சந்திரனை நோக்கிச் செலுத்தப்பட்டது.
1976 – துருக்கியில் விமானம் ஒன்று வீழ்ந்ததில் அதில் பயணம் செய்த அனைத்து 155 பேரும் கொல்லப்பட்டனர்.
1977 – வடக்கு வியட்நாம் ஐநாவில் இணைந்தது.
1979 – மத்திய ஆபிரிக்கக் குடியரசில் இடம்பெற்ற இராணுவப் புரட்சியை அடுத்து பேரரசன் முதலாம் பொக்காசா பதவியில் இருந்து அகற்றப்பட்டார்.
1984 – லெபனானில் பெய்ரூட் நகரில் அமெரிக்க தூதரகத்தின் மீது நடத்தப்பட்ட தானுந்துத் தற்கொலைத் தாக்குதலில் 22 பேர் கொல்லப்பட்டனர்.
1990 – தெற்கு ஒசேத்தியா ஜோர்ஜியாவிடம் இருந்து விடுதலையை அறிவித்தது. எந்த நாடும் அங்கீகரிக்கவில்லை.
1993 – துருவ செயற்கைக்கோள் ஏவுகணையை இந்தியா ஏவியது.

பிறப்புகள்

1924 – அ. நாகேஸ்வர ராவ், தென்னிந்தியத் திரைப்பட நடிகர் (இ. 2014)
1940 – டாரோ ஆசோ, சப்பானிய அரசியல்வாதி
1946 – மார்க்கண்டேய கட்சு, இந்திய நீதிபதி
1948 – ஜார்ஜ் ஆர். ஆர். மார்ட்டின், அமெரிக்கத் திரைப்படத் தயாரிப்பாளர், எழுத்தாளர்

இறப்புகள்

1933 – அன்னி பெசண்ட், பெண் விடுதலைக்குப் போராடியவர் (பி. 1847)
1996 – பால் ஏர்டோசு, அங்கேரி நாட்டுக் கணிதவியலாளர் (பி. 1913)
2011 – புர்ஹானுத்தீன் ரப்பானி, ஆப்கானித்தானின் 10வது அரசுத்தலைவர் (பி. 1940)

சிறப்பு நாள்

*****

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!