முதலமைச்சர் தலைமையில் இன்று ‘பெற்றோர்களை கொண்டாடுவோம்’ மாநாடு..!

வேப்பூர் அருகே திருப்பெயரில் இன்று (பிப்.22) முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ‘பெற்றோர்களை கொண்டாடுவோம்’ மாநாடு நடைபெறுகிறது.தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 2 நாள் சுற்றுப்பயணமாக நேற்று மாலை கடலூருக்கு சென்றார். அங்கு அவர், கடலூர் மஞ்சக்குப்பம் மைதானத்தில் நடந்த அரசு விழாவில் பங்கேற்று பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கினார். அதனுடன், அவர் முடிவுற்ற பணிகளை மக்கள் பயன்பாட்டுக்கு திறந்து வைத்து, புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார். பின்னர் அவர் நேற்று இரவு நெய்வேலி சுற்றுலா மாளிகையில் தங்கினார்.

இந்த நிலையில் வேப்பூர் அருகே திருப்பெயர் கிராமத்தில் இன்று (பிப்.22) முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ‘பெற்றோர்களை கொண்டாடுவோம்’ மாநாடு நடைபெறுகிறது. இந்த விழாவுக்காக திருப்பெயர் கிராமத்தில் வேப்பூர்-விருத்தாசலம் சாலையில் பிரமாண்ட பந்தல் அமைக்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நெய்வேலி சுற்றுலா மாளிகையில் இருந்து இன்று காலை 9.30 மணிக்கு திருப்பெயர் கிராமத்திற்கு வருகை தருகிறார்.

தமிழ்நாடு மாநில பெற்றோர் ஆசிரியர் கழகம் நடத்தும் பெற்றோர்களைக் கொண்டாடுவோம் மாநாட்டிற்கு தலைமை தாங்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மிழ்நாடு பெற்றோர் ஆசிரியர் கழக செயலி, விழா மலரை வெளியிட்டு, அரசு பள்ளி புதிய கட்டிடங்களை காணொலி காட்சி மூலமாக திறந்து வைத்து சிறப்புரையாற்ற உள்ளார்.

இவ்விழாவில் அமைச்சர்கள் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், சி.வெ.கணேசன், அன்பில் மகேஷ் பொய்யாமொழி உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர். மேலும் விழாவில் கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி உள்ளிட்ட 7 மாவட்டங்களை சேர்ந்த மாணவர்கள், பெற்றோர்கள் கலந்து கொள்கின்றனர். அவர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் மற்றும் முன்னேற்பாடுள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *