சென்டிரல்-கும்மிடிப்பூண்டி உள்பட 23 மின்சார ரெயில்கள் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.
சென்னை சென்டிரல் – கூடூர் வழித்தடத்தில் உள்ள பொன்னேரி – கவரைப்பேட்டை ரெயில் நிலையம் இடையே இன்று (வியாழக்கிழமை) காலை 9 மணி முதல் மாலை 3 மணி வரை (6 மணி நேரம்) பராமரிப்பு பணி மேற்கொள்ளப்பட இருப்பதால் அந்த வழித்தடத்தில் இயக்கப்படும் மின்சார ரெயில்கள் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரெயில்வே தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
* சென்னை சென்டிரலில் இருந்து இன்று காலை 8.35, 10.15 மதியம் 12.10 ஆகிய நேரங்களில் புறப்பட்டு சூலூர்பேட்டை செல்லும் மின்சார ரெயில்களும், சென்டிரலில் இருந்து மதியம் 1.05 மணிக்கு புறப்பட்டு சூலூர்பேட்டை செல்லும் பயணிகள் ரெயிலும் (மெமு) ரத்து செய்யப்படுகிறது. மறுமார்க்கமாக, சூலூா்பேட்டையில் இருந்து இன்று மாலை 3.10 புறப்பட்டு சென்னை சென்டிரல் வரும் மின்சார ரெயிலும், சூலூர்பேட்டையில் இருந்து இரவு 9 மணிக்கு புறப்பட்டு சென்டிரல் வரும் பயணிகள் ரெயிலும் ரத்து செய்யப்படுகிறது.
* சென்டிரலில் இருந்து இன்று காலை 9, 9.30, 10.30, 11.35 ஆகிய நேரங்களில் புறப்பட்டு கும்மிடிப்பூண்டி செல்லும் மின்சார ரெயில்கள் ரத்து செய்யப்படுகிறது. மறுமார்க்கமாக, கும்மிடிப்பூண்டியில் இருந்து இன்று காலை 11.25, மதியம் 12, 1, 2.30 மாலை 3.15 ஆகிய நேரங்களில் புறப்பட்டு சென்டிரல் வரும் மின்சார ரெயில்கள் ரத்து செய்யப்படுகிறது.
* சென்னை கடற்கரையில் இருந்து இன்று காலை 9.40 மதியம் 12.40 ஆகிய நேரங்களில் புறப்பட்டு கும்மிடிப்பூண்டி செல்லும் மின்சார ரெயில்கள் ரத்து செய்யப்படுகிறது. மறுமார்க்கமாக, கும்மிடிப்பூண்டியில் இருந்து இன்று காலை 10.55 மணிக்கு புறப்பட்டு சென்னை கடற்கரை வரும் மின்சார ரெயில் ரத்து செய்யப்படுகிறது.
* சூலூர்பேட்டையில் இருந்து இன்று மாலை 3.50 மணிக்கு புறப்பட்டு நெல்லூர் செல்லும் பயணிகள் ரெயிலும், மறுமார்க்கமாக, நெல்லூரில் இருந்து இன்று மாலை 6.45 மணிக்கு புறப்பட்டு சூலூர்பேட்டை செல்லும் பயணிகள் ரெயிலும் ரத்து செய்யப்படுகிறது.
* சூலூர்பேட்டையில் இருந்து இன்று காலை 11.45 மதியம் 1.15 மாலை 3.10 ஆகிய நேரங்களில் புறப்பட்டு சென்டிரல் வரும் மின்சார ரெயில்கள் ரத்து செய்யப்படுகிறது.
* சென்டிரலில் இருந்து இன்று இரவு 11.40 மணிக்கு புறப்பட்டு ஆவடி செல்லும் மின்சார ரெயில் ரத்து செய்யப்படுகிறது.
* செங்கல்பட்டில் இருந்து இன்று காலை 9.55 மணிக்கு புறப்பட்டு கும்மிடிப்பூண்டி செல்லும் மின்சார ரெயில் சென்னை கடற்கரை – கும்மிடிப்பூண்டி இடையே ரத்து செய்யப்பட்டு, கடற்கரையில் நிறுத்தப்படும்.
* கும்மிடிப்பூண்டியில் இருந்து இன்று மாலை 3 மணிக்கு புறப்பட்டு தாம்பரம் செல்லும் மின்சார ரெயில் கும்மிடிப்பூண்டி – கடற்கரை இடையே பகுதி நேர ரத்து செய்யப்பட்டு, கடற்ரையில் இருந்து புறப்பட்டு தாம்பரம் செல்லும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
சிறப்பு மின்சார ரெயில்கள் (இன்று மட்டும்)
காலை 9, 10.30 மணி: சென்டிரல் – பொன்னேரி.
காலை 11.42 மதியம் 1.18 மணி: பொன்னேரி – சென்டிரல்.
காலை 9.30 மணி: சென்டிரல் – எண்ணூர்.
மதியம் 12.43 மணி: எண்ணூர் – சென்டிரல்
காலை 11.35 மணி: சென்டிரல் – மீஞ்சூர்.
மதியம் 2.59 மணி: மீஞ்சூர் – சென்டிரல்
மதியம் 12.40 மணி: சென்னை கடற்கரை – பொன்னேரி.
மாலை 3.33 மணி: பொன்னேரி – சென்டிரல்.