அவனியாபுரம் ஜல்லிக்கட்டு தொடங்கியது..!

மதுரை அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டை முன்னிட்டு 1,500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மதுரை மாவட்டத்தில் அவனியாபுரம், பாலமேடு மற்றும் அலங்காநல்லூர் ஆகிய இடங்களில் ஜல்லிக்கட்டு நடைபெறுகிறது. இதில், மதுரை அவனியாபுரத்தில் புகழ்பெற்ற ஜல்லிக்கட்டு இன்று தொடங்கியது. ஜல்லிக்கட்டில் பங்கேற்கும் 1,100 காளைகளுக்கும், 900 வீரர்களுக்கும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. வெற்றி பெறும் சிறந்த காளைக்கு டிராக்டரும், வீரருக்கு காரும் பரிசாக வழங்கப்பட உள்ளது.

பொங்கல் பண்டிகை தினமான இன்று அவனியாபுரத்திலும், நாளை பாலமேட்டிலும், நாளை மறுநாள் அலங்காநல்லூரிலும் அடுத்தடுத்து போட்டிகள் நடக்கின்றன. அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்க 1,100 காளைகளுக்கும், 900 மாடுபிடி வீரர்களுக்கும் அனுமதி வழங்கப்பட்டு உள்ளது. இன்று ஜல்லிக்கட்டு நடைபெறும் அவனியாபுரத்தில் 1,500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

சீறி வரும் காளைகளை போட்டி போட்டு கொண்டு வீரர்கள் பிடிக்க தயாராகி உள்ளனர். வாடிவாசலில் இருந்து 1,100 காளைகள் ஒன்றன்பின் ஒன்றாக அவிழ்த்து விடப்படுகின்றன. வீரர்களும் உற்சாகத்துடன் காளைகளை பிடித்து வருகின்றனர். ஒவ்வொரு காளை அவிழ்த்து விடும்போதும் 2 சக்கர வாகனம், தங்க காசு, வெள்ளி காசு, ரொக்க பணம், குக்கர், வேட்டி, அண்டா போன்ற பாத்திரங்கள் உள்ளிட்ட பரிசு பொருட்கள் அறிவிக்கப்படுகின்றன.

முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் சார்பில் டிராக்டர் மற்றும் துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சார்பில் காரும் பரிசாக வழங்கப்படுகிறது. இதில், முதல் பரிசு பெறும் காளைக்கு, விவசாயத்திற்கு பயன்படும் டிராக்டர் பரிசாக வழங்கப்படுகிறது. முதல் பரிசு பெறும் வீரருக்கு கார் பரிசாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!