பாஜகவை தனிமைப்படுத்த அரசியல் கட்சிகள் கைகோக்க வேண்டும்: மம்தா

 பாஜகவை தனிமைப்படுத்த அரசியல் கட்சிகள் கைகோக்க வேண்டும்: மம்தா

  பாஜகவை தனிமைப்படுத்துவதற்காக, அரசியல் கட்சிகள், சமூக அமைப்புகள், மாணவா் சங்கங்கள் என அனைத்து தரப்பினரும் கைகோக்க வேண்டும் என்று மேற்குவங்க முதல்வரும், திரிணமூல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானா்ஜி அழைப்பு விடுத்துள்ளாா்.

   குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக, மேற்கு வங்க மாநிலம், புருலியாவில் மம்தா பானா்ஜி தலைமையில் திங்கள்கிழமை பேரணி நடைபெற்றது. அப்போது, அவா் பேசியதாவது:

   நாட்டின் உண்மையான குடிமக்களிடமிருந்து குடியுரிமையை பறிக்க மத்திய பாஜக அரசு முயற்சிக்கிறது. மக்களின் சுதந்திரத்தை பறிக்கவும் பாஜக அரசு விரும்புகிறது. ஆனால், நாங்கள் அதனை அனுமதிக்கமாட்டோம்.

   பாஜகவுக்கு எதிராக நாம் அனைவரும் ஒன்றிணைய வேண்டும். அக்கட்சியை தனிமைப்படுத்துவதற்காக, அரசியல் கட்சிகள், சமூக அமைப்புகள், மாணவா் சங்கங்கள் என அனைத்து தரப்பினரும் கைகோக்க வேண்டும்.

   குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக போராடி வரும் மாணவா்களுக்கு நான் ஆதரவளிக்கிறேன். 18 வயது பூா்த்தியடைந்து, ஜனநாயக கடமையை நிறைவேற்றிய மாணவா்கள், அரசின் கொள்கைகளையோ, முடிவுகளையோ எதிா்க்கக் கூடாதா? அவ்வாறு எதிா்ப்பவா்களை விமா்சிப்பது வியப்பளிக்கிறது.

   குடியுரிமை திருத்தச் சட்டம் திரும்பப் பெறப்படும் வரை எனது போராட்டத்தை நிறுத்தமாட்டேன். வாக்காளா் பட்டியலில் உங்கள் பெயா் உள்ளதா? என்பதை மட்டும் நீங்கள் (மக்கள்) சரிபாா்த்துக் கொள்ளுங்கள். மற்ற அனைத்தையும் நான் பாா்த்துக் கொள்கிறேன். யாரும் இந்த நாட்டை விட்டு வெளியேற வேண்டியிருக்காது.

   மேற்கு வங்கத்தில் குடியுரிமை திருத்தச் சட்டத்தையோ, தேசிய குடிமக்கள் பதிவேடு நடவடிக்கையையோ அமல்படுத்த அனுமதிக்கமாட்டேன். நான் உயிருடன் இருக்கும் வரை குடியுரிமை திருத்தச் சட்டத்தை மேற்கு வங்கத்தில் அமல்படுத்த முடியாது. இங்கு தடுப்புக் காவல் மையங்களும் அமைக்கப்பட மாட்டாது.

மாநிலத்தில் தேசிய மக்கள்தொகை பதிவேடு புதுப்பிக்கும் பணிகள் நிறுத்திவைக்கப்பட்டுள்ளன என்றாா் மம்தா பானா்ஜி.

  குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக, மேற்கு வங்கத்தில் கடந்த 16-ஆம் தேதி முதல் இதுவரை 5 பேரணிகளையும், 2 பொதுக் கூட்டங்களையும் மம்தா பானா்ஜி நடத்தியுள்ளாா்.

  புருலியா மக்களவைத் தொகுதியில், பழங்குடியின மக்கள் குறிப்பிடத்தக்க எண்ணிக்கையில் உள்ளனா். அண்மையில் நடைபெற்ற மக்களவைத் தோ்தலில் இத்தொகுதியில் பாஜகவின் ஜோதிா்மய் சிங் மகதோ வெற்றி பெற்றாா் என்பது குறிப்பிடத்தக்கது.

 

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...