மருத்துவ சேவை கிடைக்க போராடும் பெண்ணின் கதை

 மருத்துவ சேவை கிடைக்க போராடும் பெண்ணின் கதை
மலைவாழ், கிராம மக்களுக்கு மருத்துவ சேவை கிடைக்க போராடும் (அபிராமி அரவிந்தன்) 

சமூக பொருளாதார அடிப்படையில் பின்தங்கியிருக்கும் மலைவாழ் மற்றும் கிராம மக்களுக்கு மருத்துவ சேவைகள் அளிப்பதற்காக ‘டாக்டர்நெட் இந்தியா’ எனும் தன்னார்வ அமைப்பை உருவாக்கி நடத்தி வருகிறார் அபிராமி அரவிந்தன்.கோயம்புத்தூரில் வசித்து வரும் அபிராமி, தமிழகம் மற்றும் கேரள மாநிலங்களில் உள்ள கிராமங்களுக்கும், மலைகளுக்கும் சென்று ஏழைகளுக்காக பணிபுரியும் நிறுவனங்கள் அல்லது தனிநபர்களை நேரில் சந்தித்து, அவர்களுடன் இணைந்து பணியாற்றுகிறார். மருத்துவ ஆலோசனை தேவைப்படும் நோயாளிகளை இவர்கள் அறிமுகம் செய்து வைக்கிறார்கள். சிகிச்சை முடியும் வரை, அவர்களுக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் செய்கிறார்.இவரது தன்னார்வ குழுவில் 100 க்கும் மேற்பட்ட மருத்துவர்களும், 20க்கும் மேற்பட்ட தன்னார்வலர்களும் சேவை செய்து வருகின்றனர்.

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...