அண்ணல் அம்பேத்கர்

 அண்ணல் அம்பேத்கர்

அண்ணல் அம்பேத்கர் பல்வேறு மத, இன, மொழி, சமூக பழக்க வழக்கங்கள் கொண்ட இந்திய நாட்டை இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தால் ஒருங்கிணைத்தவர். இவர் அரசியல் மாமேதை. தேசிய தலைவராகவும் திகழ்ந்தவர். சமத்துவத்தை வலியுறுத்தியவர்.

அம்பேத்கர் மராட்டிய மாநிலத்தில் கொங்கண் மாவட்டத்தில் உள்ள அம்பவாடே என்னும் சிற்றூரில் 1891ம் ஆண்டு ஏப்ரல் 14 ஆம் நாள் இராம்ஜி சக்பால், பீமாபாய் ஆகியோருக்கு பதினான்காவது பிள்ளையாகப் பிறந்தார். அம்பேத்காரின் இயற்பெயர் பீமாராவ் ராம்ஜீ.

தந்தையார் இராம்ஜீ சக்பால் இராணுவ பள்ளி ஒன்றின் தலைமை ஆசிரியராகப் பணிபுரிந்து வந்தார். மகர் என்னும் தாழ்த்தப்பட்ட சமுதாயத்தில் பிறந்த பீமாராவ் இளம் வயதில் பல்வேறு துன்பங்களை அனுபவித்தார்.

சிறு வயதில் ஒரு முறை தனது சகோதரருடன் மாட்டு வண்டியில் பயணம் செய்த பொழுது தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சார்ந்தவர் என்ற ஒரே காரணத்திற்காக மாட்டு வண்டியிலிருந்து குப்பையைக் கொட்டுவது போன்று கீழே தள்ளிய கொடுமை நிகழ்ந்தது. இது அவரின் சிறுவயது துன்பத்திற்கு ஓர் எடுத்துக் காட்டாகும்.

1900-ல் தனது தொடக்கக் கல்வியை முடித்த அம்பேத்கார் உயர்நிலைப் பள்ளியில் சேர்ந்து பயின்றார். அங்கு தாழ்த்தப்பட்ட மாணவர்கள் தனியே அமர்த்தப்பட்டனர். யாருடனும் பேச அனுமதி இல்லை. தண்ணீர் பருக வேண்டுமெனில் பிறர் ஊற்ற கையால் பருக வேண்டும்.

வகுப்பறையில் அமர தனியே கோணிப்பை வீட்டிலிருந்து கொண்டு வரவேண்டும். இக்கொடுமைகளைக் கண்ட அம்பேத்கரின் பிஞ்சு மனம் வெம்பியது. அம்பேகர் என்பது இவரின் குடும்பப் பெயராகும்.

இவர் மீது அன்பு கொண்ட பீமாராவின் ஆசிரியர் மகாதேவ அம்பேத்கர் அம்பேகர் என்ற இவரின் குடும்பப் பெயரை அம்பேத்கர் என்று மாற்றி பீமாராவ் ராம்ஜி அம்பேத்கர் என்று அழைக்கச் செய்தார்.

முதல் உலகப் போருக்கு பின்னர் பொருளாதார பிரச்சினைகளுக்கு தீர்வுகாண கிங்டன்யங் ஆணையத்திடம் அம்பேத்கர் கூறிய கருத்துக்களின் அடிப்படையில் 1935ஆம் ஆண்டு இந்திய ரிசர்வ் வங்கி தோற்றுவிக்கப்பட்டது.

ஒவ்வொருவரும் முழுமனித நிலையை அடைய கல்வி, செல்வம், உழைப்பு இம்மூன்றும் தேவை என்றும் செல்வமும் உழைப்பும் இல்லாத கல்வி களர்நிலம் என்றும், உழைப்பும், கல்வியும் அற்ற செல்வம் மிருகத் தனம் என்றும் கூறினார்.

கல்வி என்பது தகவல்களை திணிப்பதாக இருக்கக்கூடாது. அது ஒருவனது ஊக்கத்தை தூண்டுவதோடு தனித்தன்மையை வெளிக்கொணர்வதாக இருக்க வேண்டும் என்பது கல்வி பற்றி அம்பேத்கரின் கருத்தாகும்.

1946ஆம் ஆண்டு மக்கள் கல்வி கழகத்தை தோற்றுவித்தார். மும்பையில் இவர் உருவாக்கிய சித்தார்தா உயர்கல்வி நிலையத்தில் இன்றைய அறிவு வளர்ச்சிக்கு வேண்டிய அனைத்து பாடங்களும் கற்பிக்கப்படுகின்றன.

May be an image of 1 person

All reactions:

6Prabhala Subash and 5 others

uma kanthan

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...