உலக கவிதை தினம் இன்று (மார்ச் 21)/அம்மா அப்பாவே ஆனந்தம்

இன்றைய தினத்தில் நினைவுக்கு வந்த தலைப்பு :

அம்மா அப்பாவே ஆனந்தம்

உலக கவிதை தினம் இன்று (மார்ச் 21)

இன்றைய தினத்தில் நினைவுக்கு வந்த தலைப்பு :

அம்மா அப்பாவே ஆனந்தம் :


சொந்தங்கள் ஆயிரம் இருந்தாலும்

சுகங்கள் பல வகையில் தந்தாலும்

பெற்றவருக்கு இணையென உலகில் ஏதுமில்லை

அப்பெரியோர்களை நினைப்பதே பேரின்ப எல்லை

துள்ளித் திரிந்து மகிழ்ந்தது அக்காலம்

பள்ளியில் படிக்கையில் எழில் கோலம்

சொல்லித்தந்த யாவும் நல்லதொரு வரவே

அள்ளி அரவணைத்த தெல்லாம் அன்பான நிகழ்வே

நிம்மதி தந்திட்ட நெஞ்சங்கள் இரண்டு

நிழலாய் நம்மை என்றும் காத்தது உண்டு

துவளும் காலத்தில் தேவையினை அறிந்து

துணை நின்று எதிர்பார்த்ததுக்கும் மேல் தந்து

உயர்த்திய ஏணியாய் வாழ்விலே வந்து

உள்ளத்திலே உவகையினை ஒரு சேர தந்து

நிம்மதி தந்திட்ட நெஞ்சங்கள் இரண்டு

நிழலாய் நம்மை என்றும் காத்தது உண்டு

அன்பால் விளைந்த பந்தம்

அப்பா அம்மாவே ஆனந்தம்.

முருக. சண்முகம்,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!