ஜி-20 மாநாட்டு பிரதிநிதிகளுக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு சிறப்பு விருந்து! | தனுஜா ஜெயராமன்

 ஜி-20 மாநாட்டு பிரதிநிதிகளுக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு சிறப்பு விருந்து! | தனுஜா ஜெயராமன்

ஜி-20 அமைப்பில் அமெரிக்கா, அர்ஜென்டினா, ஆஸ்திரேலியா, பிரேசில், கனடா, சீனா, பிரான்ஸ், ஜெர்மனி, இந்தியா, இந்தோனேஷியா, இத்தாலி, ஜப்பான், கொரியா, மெக்சிகோ, ரஷியா, சவுதி அரேபியா, தென்ஆப்பிரிக்கா, துருக்கி, இங்கிலாந்து மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் ஆகிய நாடுகள் உறுப்பினர்களாக உள்ளனர்.

இந்த நாடுகளின் தலைவர்கள் மற்றும் பிரதிநிதிகள் டெல்லி மாநாட்டில் பங்கேற்கிறார்கள்.

வங்காளதேசம் மற்றும் ஆப்பிரிக்க ஒன்றியத்தை சேர்ந்த நாடுகள் உள்பட ஏராளமான நாடுகளின் தலைவர்களும் சிறப்பு அழைப்பாளர்களாக இந்த மாநாட்டில் கலந்துகொள்கிறார்கள்.

இவர்களை தவிர ஐ.நா., உலக வங்கி, சர்வதேச நிதியம், உலக வர்த்தக அமைப்பு மற்றும் உலக சுகாதார அமைப்பு போன்ற ஏராளமான சர்வதேச அமைப்புகளின் தலைவர்களும் இந்த மாநாட்டுக்காக டெல்லி வந்துள்ளனர்.

ஜி-20 மாநாட்டு பிரதிநிதிகளுக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு இன்று சிறப்பு விருந்து அளிக்கிறார்.

உணவு வகைகள் அனைத்தும் வெள்ளி பாத்திரங்களில் பரிமாறப்படும். குளிர்பானம் கொடுக்கும் தட்டுகள், தங்க முலாம் பூசியதாக இருக்கும்.

சிறுதானிய உணவுகள், ஸ்பெஷல் உணவுகள் விருந்தினர்களுக்காக தயார் செய்யப்பட இருக்கிறது.

குலோப் ஜாமுன், ரசமலாய், ஜிலேபி போன்ற இனிப்புவகைகளும் பரிமாறப்படும். வெளிநாட்டு பிரதிநிதிகள் மறக்க முடியாத சுவையுடன் செல்லும்வகையில், உணவுவகைகள் இருக்கும்.

தனுஜா ஜெயராமன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...