“ எக்ஸ்” வலைதளத்தில் முகப்பு படத்தை மாற்றிய பிரதமர் மோடி! | தனுஜா ஜெயராமன்

 “ எக்ஸ்” வலைதளத்தில் முகப்பு படத்தை மாற்றிய பிரதமர் மோடி! | தனுஜா ஜெயராமன்

ஜி-20 மாநாடு தொடங்கும் நிலையில் ‘எக்ஸ்’ சமூக வலைத்தளத்தில் பாரத் மண்டபத்தை முகப்பு படமாக வைத்திருக்கிறார் பிரதமர் நரேந்திர மோடி.

இந்தியா ஜி-20 அமைப்புக்கு தலைமை ஏற்றுள்ளது. டெல்லியில், இன்றும், நாளையும் ஜி-20 மாநாடு நடைபெற உள்ளது.

பிரதமர் மோடி தனது ‘எக்ஸ்’ சமூக வலைத்தள பக்கத்தின் முகப்பு படமாக மூவர்ண கொடியை வைத்திருந்தார்.

டெல்லியில் இன்று ஜி-20 மாநாடு தொடங்கும் நிலையில், அவர் ‘எக்ஸ்’ சமூக வலைத்தள முகப்பு படத்தை மாற்றியுள்ளார். டெல்லியில் உள்ள பாரத் மண்டபத்தில் மாநாட்டு நிகழ்ச்சிகள் நடக்கின்றன.

அவ்வகையில் ஜி-20 மாநாடு நடக்கும் பாரத் மண்டபத்தின் புகைப்படத்தை பதிவேற்றம் செய்துள்ளார்.

முன்புறத்தில் நடராஜர் சிலை நின்றிருக்க, விளக்குகளால் ஒளிரும் பாரத் மண்டபம், முகப்பு படமாக வைத்துள்ளார் பாரத பிரதமர் நரேந்திர மோடி . ‘எக்ஸ்’ சமூக வலைத்தளத்தில் பாரத் மண்டபத்தை முகப்பு படமாக வைத்திருப்பதை தொடர்ந்து பலரும் அவ்வாறு வைப்பார்கள் என சொல்கிறார்கள்.

தனுஜா ஜெயராமன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...