சுப்பிரமணியன் சந்திரசேகர் காலமான நாள்

சுப்பிரமணியன் சந்திரசேகர் காலமான நாள்😢

இவரு ஒரு வானியல்- இயற்பியல் விஞ்ஞானி. பக்கா தமிழரான இவரு ஆங்கியேர் கால இந்தியாவில் இப்போதைய பாகிஸ்தான் பகுதியான லாகூரில் சுப்பிரமணியன்- சீதாலட்சுமி தம்பதிக்கு இதே அக்டோபர் 19ம் தேதி பிறந்தவர். அவர் லாகூரிலும், பிறகு லக்னோவிலும் வாழ்ந்த பின், சென்னை வந்த சேந்தாரு. 11 வயசிலே அவர் நம்ம டிரிப்பிளிகேன் இந்து ஐஸ்கூலில் சேர்ந்தார். அப்பாலே இங்குள்ள மாநிலக்கல்லூரியில் பிசிக்ஸ் படிச்சார்.

அப்போதான் அவரோட சித்தப்பா சர். சி. வி. ராமனுக்கு நோபல் பரிசு கிடைச்சுது. இந்த சந்திர சேகரோட அம்மா உலகப் புகழ்பெற்ற நாடகாசிரியர் ஹென்ரிக் இப்சனின் நாடகத்தைத் தமிழாக்கியவர். அந்தம்மாவோட அறிவார்ந்த ஆற்றலும் இளம் சந்திரசேகருக்கு மாபெரும் தூண்டுதலாக இருந்தது.

சந்திரசேகர் 19 வயது ஸ்டூடண்டா இருக்கறச்சேயே ஆய்வுக் கட்டுரைகள் எழுதினார். 1930-ம் ஆண்டு, இந்திய அரசின் பண உதவி பெற்று, மேல்படிப்புக்காக கேம்ப்ரிட்ஜ் பல்கலைக்கழகத்துக்குப் போனார்.அவர் தனது 19 –வது வயதில் ஐன்ஸ்டீனின் சார்பியல் தத்துவத்தையும் குவாண்டம் கோட்பாட்டையும் பயன்படுத்தி ஒரு வானியல் கோட்பாட்டை உருவாக்கினார்.

விண்வெளியில் உள்ள ஒரு நட்சத்திரத்தின் இறுதிக் காலம் அது எவ்வளவு பொருள்நிறையைக் கொண்டதாக உள்ளது என்பதைப் பொறுத்ததாக அமைகிறது. மிக அதிகமான பொருள்நிறையை கொண்டுள்ள நட்சத்திரங்கள் தங்களின் இறுதிநாளில் நியூட்ரான் நட்சத்திரங்களாகவோ அல்லது கருந்துளைகளாகவோ மாறுகின்றன.பொருள்நிறை குறைவாக உள்ள அல்லது நடுத்தரமான பொருள்நிறை உள்ள நட்சத் திரங்கள்- உதாரணமாக – நமது சூரியனைவிட ஏறத்தாழ எட்டு மடங்கு பொருள்நிறை குறைவாக உள்ள நட்சத்திரங்கள்- வெள்ளைக் குள்ளன் எனும் ஒரு அடர்த்தியான நிலையை அடைகின்றன.இந்த நிகழ்ச்சிப்போக்கை நாம் புரிந்துகொள்ளும் வகையில் ஒரு வரையறையை கணித அவதானிப்புகள் மூலம் அவர் அறிவிச்சார். அவரது இந்த வரையறைதான் நட்சத்திரங்களின் பிறப்பு, வளர்ச்சி, இறப்பு பற்றிய ஆய்வில் இன்றும் வழிகாட்டுகிறது.

இந்த ஆய்வுக்காக இவருக்கு, 1983- ல் இயற்பியலுக்கான நோபல் பரிசு வில்லியம் பவுலர் என்பவரோடு இணைத்து வழங்கப்பட்டது.

1937 – ல் சந்திரசேகர் அமெரிக்காவின் சிகாகோ பல்கலைக்கழகத்தில் உதவி பேராசிரியராகச் சேர்ந்தார். 1995 -ல் 84 வயதில் இறக்கும்வரை அதே பல்கலைக்கழகத்திலேயே பணிபுரிந்தார். இவர் 1953 முதல் அமெரிக்க குடியுரிமை பெற்று அங்கேயே வாழ்ந்தார். அமெரிக்காவில் 50 முனைவர் பட்டதாரிகளை உருவாக்கினார்.

அமெரிக்காவின் விண்வெளி ஆய்வு அமைப்பான நாசா உள்ளிட்ட பல இடங்களுக்கு அவரது நினைவாகப் பெயர்கள் சூட்டப் பட்டுள்ளன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!