சோழன் விரைவு ரயிலின் நேரம் மாற்றமா?

 சோழன் விரைவு ரயிலின் நேரம் மாற்றமா?

சென்னை எழும்பூர் – திருச்சிராப்பள்ளி இடையே இயக்கப்படும் சோழன் விரைவு ரயிலின் நேரம் மாற்றப்பட இருக்கிறது.

ரயில் தண்டவாள பராமரிப்பு பணி, பயணிகளுக்கான வசதிகள் உள்பட பல்வேறு காரணங்களுக்காக ரயில்களின் நேரம் மாற்றி அமைக்கப்படுகிறது. அந்தவகையில், சென்னையில் இருந்து இயக்கப்படும் சோழன் விரைவு ரயில்களின் நேரம் ஆக.14-ம் தேதி முதல்மாற்றி அமைக்கப்பட உள்ளது.

7.45 மணிக்கு புறப்படும்: சென்னை எழும்பூரில் இருந்து திருச்சிராப்பள்ளிக்கு காலை 7.15 மணிக்கு புறப்படவேண்டிய சோழன் விரைவு ரயில் (22675) நேரம் மாற்றப்பட்டு, காலை 7.45 மணிக்கு புறப்படும். இந்த ரயில் தாம்பரத்தை 8.13 மணிக்கு அடையும். அங்கிருந்து புறப்பட்டு திருச்சிராப்பள்ளியை பிற்பகல் 2.30 மணிக்கு பதிலாக, பிற்பகல் 3 மணிக்கு சென்றடையும்.

தனுஜா ஜெயராமன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...