‘கூர்மன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!

 ‘கூர்மன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!

MK Entertainment தயாரிப்பில் இயக்குநர் பிரையன் B. ஜார்ஜ் இயக்கத்தில் ராஜாஜி, ஜனனி ஐயர், பாலசரவணன்  நடிப்பில், உருவாகியுள்ள, சைக்கலாஜிகல், திரில்லர் திரைப்படம் “கூர்மன்”. இதன் கதை மனதில் உள்ளதைக்  கண்டுபிடிக்கும்  ஒரு பாத்திரத்தை முதன்மைப் பாத்திரமாகக்கொண்டு அமைக்கப்பட்டுள்ளது. மாறு பட்ட பாணியில் வித்தியாசமான திரைக்கதை யில் உருவாகியுள்ள இப்படம் விரைவில் உலகமெங்கும் வெளியாகவுள்ளது. இப்படத்தின் இசை விழா இன்று (5-2-2022) படக்குழுவினர் மற்றும் பிரபலங்கள் கலந்துகொள்ள, பத்திரிகை யாளர்கள் முன்னிலையில் இனிதே நடைபெற்றது.

இவ்விழாவில் முதலில் படக்குழுவினர் மனதில் உள்ளதை அறியும் மெண்ட லிஸ்ட் அதை எப்படிக் கண்டுபிடிக்கிறார் என்பதைப் பார்வையாளர்களுக்கு ஒரு சிறிய டெமோவாக, பார்வையாளர்களிலிருந்தே ஒருவரை அழைத்து, மனதில் நினைப்பதைக் கண்டுபிடிக்கும் நிகழ்வினைச்  செய்துகாட்டினர். இதனைப் பார்த்த பார்வையாளர்கள் அனைவரும் ஆச்சர்யத்தில் மூழ்கினர்.

இதனைத் தொடர்ந்து இப்படம் மூலம் மக்கள் தொடர்பாளர்களாக அறிமுக மாகும் பரணி அழகிரி மற்றும் திருமுருகன் ஆகியோருக்கு மக்கள் தொடர் பாளர் சங்கம் சார்பாக டைமண்ட் பாபு தலைமையில் மரியாதை செய்யப் பட்டது.

இதனைத் தொடர்ந்து விழாவில் நடிகர் பாலசரவணன் பேசும்போது… “கூர்மன் தலைப்பே வித்தியாசமானது, இங்கு நடந்த மெண்டலிஸ்ட் நிகழ்வும் வித்தியாச மாக இருந்தது. இதைப்போலவே படத்தின் திரைக்கதையும் உருவாக்கமும் மிக வித்தியாசமாக இருந்தது. இந்த டீமும் வித்தியாசமான வர்கள்தான்.  இந்தப் படத்தில் இயக்குநரிடம்  நிறைய கற்றுக்கொண்டேன். இந்தப் படத்தில் முதல் முறையாகக் கொஞ்சம் வயதானவராக வித்தியாசமான வேடத்தில் நடித்துள் ளேன்.  எங்களுடன் ஒரு நாயும் நடித்தது. அது இப்போது இல்லை என்பது வருத்தமாக உள்ளது. நண்பன் ராஜாஜியுடன் நடித்தது நல்ல அனுபவமாக இருந்தது. படம் மிக அற்புதமாக வந்துள்ளது, அனைவரும் திரையரங்கில் சென்று பார்த்து ஆதரவு தாருங்கள்.”  
நடிகர் முருகானந்தம் பேசும்போது… “கூர்மன் படத்தில் சின்ன கேரக்டர்தான். எனக்கு மிகவும் பிடித்திருந்தது. ஆனாலும் நடித்தேன். அதற்குக் காரணம் தயாரிப்பாளர்தான். மதன் மிகவும் நல்ல தயாரிப்பாளர். ஒரு படம் தோற்றால் யாருக்கு வேண்டுமானாலும் வாய்ப்பு மீண்டும் கிடைக்கும். ஆனால் தயாரிப் பாளருக்கு வாய்ப்பு கிடைக்காது. அவர் ஜெயிக்க வேண்டும். நண்பன் ராஜாஜி அவருடன் ‘எங்கிட்ட மோதாதே’ படம் செய்துள்ளேன். இப்படத்தில் நன்றாக நடித்துள்ளார். இயக்குநர் ‘கத்தி எடுத்து குத்தப்போறாங்க’ என்பதையே, ‘சத்தமே இல்லாமல் அமைதியாக சொல்வார்’. படத்தை அழகாக எடுத்துள்ளார் இப்படத்தில் வாய்ப்பு கிடைத்தது மகிழ்ச்சி.”‘

நடிகர் ஆடுகளம் நரேன் பேசும்போது, “கூர்மன் பற்றி பிஜு கதை சொன்ன போது அவனிடம் ‘எப்ப வரணும்னு சொல்லு, வர்றேன்.’ என்று சொன்னேன். அவனை எனக்கு நன்றாகத் தெரியும். ஒரு சிறு காட்சிக்குப் பின்னால் அடுக்கடுக்காக நிறைய விசயங்கள் வைத்திருந்தார். எனக்குப் புரிய கஷ்டமாக இருந்தது. நான் போலீஸ் வேடம் நிறைய செய்திருந்தாலும் இது வித்தியாச மாக இருந்தது. கூட நடித்தவர்கள் அனைவரும் கேஷுவலாக நடித்தார்கள், இது நல்ல பொழுதுப் போக்கு படமாக இருக்கும்.”

எடிட்டர் தேவராஜ் பேசும்போது, “படத்தில் வாய்ப்புத்  தந்த தயாரிப்பாளர் மதன் மற்றும் இயக்குநர் பிஜுவுக்கு நன்றி. பிஜுவும் நானும் 12 வருட நண்பர்கள். மற்ற படத்திற்கும் இப்படத்திற்கும் புட்டேஜிலேயே நிறைய வித்தியாசம் இருந்தது. எடிட்டிங்கில் நான் செய்ய வேண்டியதை திரைக்கதையில் அவரே வைத்திருந் தார். படம் நன்றாக வந்துள்ளது படம் வெற்றி பெற ஆதரவு தாருங்கள்.”

நடிகர் பிரவீன் பேசியதாவது…. “இந்தப்படம் அமைந்தது மகிழ்ச்சி. ‘டிரிப்’ படத் திற்குப் பிறகு கிடைத்த இரண்டாவது வாய்ப்பு. மதன்  எப்போதோ சொன் னது, படம் செய்யும்போது என்னைக் கூப்பிட்டு வாய்ப்பு தந்தார். இதில் இரண்டவது லீட் மாதிரி ஒரு முக்கியமான வேடம், கேட்டபோதே இதில் நடிக்க வேண்டும் என முடிவு செய்துவிட்டேன், என்னுடன் நடித்த அனை வரும் அருமையாக நடித்தார்கள். ராஜாஜி, பாலசரவணன் இருவரும் நிறைய படங்கள் நடிப்பவர்கள் என்னை ஆதரித்தது மகிழ்ச்சியாக இருந்தது. இந்தப் படத்தை கஷ்டப்பட்டு எடுத்திருக்கிறார் மதன், இந்தப் படம் பெரிய வெற்றி பெற வேண்டும்.”

சூப்பர்குட் சுப்பிரமணி பேசியதாவது… “சமீபத்தில் உலகம் முழுக்க வெற்றி பெற்ற படம் ஜெய்பீம். அது கூடிய சீக்கிரத்தில் ஆஸ்கர் பெறும், அந்தப் படத்தில் எனக்கு ஒரு அடையாளம் கிடைத்தது. அந்தப் படம் போல் இந்தப் படமும் மிகப் பெரிய வெற்றி பெறும். பிஜுவை உதவி இயக்குநராகப் பல படங்களில் பார்த்திருக் கிறேன். அவர் உழைப்பு தெரியும். அவர் கண்டிப்பாக ஜெயிக்க வேண்டும்.”

பாடலாசிரியர் உமா தேவி பேசியதாவது… “கூர்மன் என் இலக்கிய விகுதியை, தமிழுக்குத் தந்திருக்கும் குழுவிற்கு என் நன்றிகள். இப்படத்தில் இரண்டு பாடல்கள் எழுதியுள்ளேன். பிரிட்டோ சந்தோஷ் நாரயணன் மூலம் அறிமுக மானவர், அவரது இசை வித்தியாசமாக இருந்தது. கூர்மனில் வரும் இரண்டு பாடல்களும் எல்லோருக்கும் பிடிக்கும். ‘ஆம்பல் பூ’ எனும் பாடல் திவாகர் வைசாலி பாடியுள்ளார்கள், இன்னொரு பாடல் பிரதீப் பாடியுள்ளார். நாசூக்காக வேலை வாங்குவதில் இந்தக் குழு கில்லாடி, பொறுப்பை என்னிடம் ஒப்படைத்து, பாடலை கவிதையாய் வேண்டுமென எழுதி வாங்கினார்கள். பாடலும் படமும் நன்றாக வந்துள்ளது.”

இசையமைப்பாளர் டோனி பிரிட்டோ பேசியதாவது… “தயாரிப்பாளர் இருவருக் கும் நன்றி. பாடல் இசை பற்றி இயக்குநரிடம் கேட்டால் அவர் என்ன நினைக் கிறார் என்பதே தெரியாது,  அவர் உதவியாளர்களிடம் கேட்டால்தான் தெரியும், நான் கொடுத்த முதல் சில டியூன்களே அவர்களுக்குப் பிடித்திருந்தது. அது எனக்குச் சந்தோஷமாக இருந்தது. இரண்டு பாடல்களுமே உமாதேவி மேடம் கரக்சனே சொல்ல முடியாமல் எழுதி தந்துவிட்டார். இன்னொரு பாடலை பிஜுவே எழுதிவிட்டார். இந்தப் படத்தில் பாடலைக் கேட்டு, அவரது கருத்துக்கள் கூறி, எனக்கு வழிகாட்டிய சந்தோஷ் நாராயணன் சாருக்கு நன்றி.”

நடிகர் ராஜாஜி பேசியதாவது… “நன்றி சொல்லும் மேடையாக இதை நினைத்து கொள்கிறேன். MK Entertainment  தயாரிப்பாளர் ‘தான் மட்டும் நல்லாருக்கனும்னு நினைப்பவர் அல்ல. தன்னைச் சுற்றியிருக்கும் எல்லோரும் நல்லாயிருக்க வேண்டும் என்று நினைப்பவர்’ நான் நன்றாக இருக்க வேண்டுமென இந்தக் கதை கேட்டவுடன் என்னை அழைத்து நடிக்கச் சொன்னார். சுரேஷ் இப்படத் தில் பெரும் உதவியாக இருந்தார். இப்படத்தில் ஒரு ஜெர்மன் செப்பர்ட் நாய் நன்றாக நடித்துள்ளது. அது இப்போது இல்லை என்பது வருத்தமே. பிஜு என்னை முதலில் சந்தித்தபோது ஆடிசன் பண்ணலாம் என்றார். ஒண்ணுல்ல, இத பண்ணா போதும்னு சொல்லியே தலைகீழாக நிற்க வைத்தார். படத்தில் நன்றாக வேலை வாங்கினார். படத்தை அருமையாக எடுத்துள்ளார்.

இசையமைப்பாளர் டோனிஜி பின்னணி இசையில் கலக்கியுள்ளார் அவருக்கு வாழ்த்துக்கள், இந்தப் படத்தில் கேரக்டர் ரொம்ப முக்கியம். நரேன் சார் நிறைய சொல்லிக்கொடுத்தார். பாலசரவணன் உடன் வேலை செய்தது மகிழ்ச்சியாக இருந்தது. முருகானந்தம் இப்போது ஒரு படத்தில் ஹீரோவாக நடிக்கிறார். எங்கள் படத்திற்கு நேரம் ஒதுக்கி நடித்து தந்தார். என் நெருங்கிய நண்பர். இந்தப் படம் ஒரு தரமான படமாக இருக்கும்.”

நடிகை ஜனனி ஐயர் பேசியதாவது… “பிரையன் B. ஜார்ஜை  ‘தெகிடி’ படத்தி லிருந்தே தெரியும். அவரிடம் நீங்கள் படம் எடுக்கும்போது வேறு யாரை யாவது நாயகியாகப் போட்டால் சண்டை போடுவேன் என்றேன். ஆனால் உண்மையி லேயே என்னை நடிக்க வைத்துவிட்டார். இந்தக் கதையே வித்தி யாசமாக இருந்தது என்று சொன்னால் அது வழக்கமாக இருக்கும். ஆனால் இன்று இங்கு நடந்த நிகழ்வைப் பார்த்திருந்தால் உங்களுக்கே தெரியும். நீங்கள் இங்கு பார்த்த அதே அளவு ஆச்சர்யம் படத்திலும் இருக்கும். படத்தில் ஒரு மேஜிக் நடந்தது. ஒருநாள் 5 காட்சி எடுக்க வேண்டும். ஆனால் அன்று நல்ல மழை, அதனால் மழையில் காட்சியை மாற்றி எடுத்தோம். அப்படியும் மழை மாலை வரை நிற்காமல் பெய்ய வேண்டுமே என தவித்தோம். ஆனால் மேஜிக்காக கடவுள் ஆசிர்வாதத்தில் மழை நிற்காமல் பெய்தது. அந்த ஆசிர்வாதம் படத்திற்கும் கிடைக்க வேண்டும்.”

இப்படத்தின் இசைத்தட்டை நடிகர் நரேன் வெளியிட நடிகை ஜனனி ஐயர் உடன் படக்குழுவினர் பெற்றுக்கொண்டனர்.

மூலவன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...