தெலுங்கு சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபு- “ஓ மை கடவுளே” திரைப்படம் குறித்து

நடிகர் அசோக் செல்வன், ரித்திகா சிங் மற்றும் வாணி போஜன் நடிப்பில் கடந்த பிப்ரவரி 14 ஆம் தேதி வெளியான திரைப்படம் ஓ மை கடவுளே.

இப்படம் காதலர் தினத்தில் வெளியாகி ரசிகர்களின் பேராதரவை பெற்றது என கூறலாம்.

மேலும் இப்படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் நடிகர் விஜய் சேதுபதி நடித்திருப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் இப்படம் வெளியாகி இதனை மாதங்கள் ஆன பின்பும் பலரின் பாராட்டுகளை பெற்று வருகிறது.

அந்த வரிசையில் தற்போது தெலுங்கு சினிமாவின் சூப்பர் ஸ்டாரான மகேஷ் பாபு குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

அதில் இப்படத்தை தான் மிகவும் என்ஜோய் செய்ததாகவும், நடிகர் அசோக் செல்வன் மற்றும் இயக்குனர் அஸ்வந்த் அவர்களையும் பாராட்டியுள்ளார்.

இதற்கு அசோக் செல்வன், ரித்திகா சிங், வாணி போஜன் உள்ளிட்டோர் நன்றி தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!