இருள் எங்கும் இருள்! நான் எங்கிருக்கிறேன்? என் நினைவுகள் மெல்ல விழித்தெழத் தொடங்கியது. உடலெல்லாம் வலி! வலி! கைகளால் மெல்ல உடலைத் தடவத் தொடங்கினேன். ஆங்காங்கே முண்டும், முடிச்சுமாக வாழ்க்கையைப் போன்று மேடு பள்ளமாக இருந்தது. கையில் பிசுபிசுப்புடன் ஒருவித வாடை என் மூக்கின் நுனியை உரசியது. அது என் வயிற்றில் மிச்சமிருந்த பகுதியை வெளியே கொண்டு வந்துவிடும் போலத் தோன்றியது. தட்டுத்தடுமாறி எழுந்து நின்றேன். அது ஒரு இருள் சூழ்ந்த சாலை. விளக்கின் ஒளியில் மரங்கள் […]Read More
இணை சைக்கிளை மரத்தடியில் நிறுத்திவிட்டு வீட்டுக்குள் போன ராமசாமி செருப்பை வாசலில் கழற்றிப் போட்டு விட்டு அப்படியே திண்ணையில் அமர்ந்தார். தோளில் கிடந்த துண்டால் வியர்வையைத் துடைத்தபடி ‘சித்திர வையாசியில போடுற மாரியில்ல அப்பியல்ல வெயிலுப் போடுது’ என்றார் சற்றே சத்தமாக. ‘வந்துட்டியளா… வந்தவுக ஏ வெளியிலயே ஒக்காந்துட்டிய…?’ சப்தம் கேட்டு வெளியே பார்த்துக் கேட்ட பார்வதி, தண்ணீர்ச் சொம்போடு வந்தாள். ‘ம்… உள்ள வந்தோடனே போன காரியம் என்னாச்சுன்னு கேட்டுக்கிட்டு நிப்ப… என்ன சொல்றதுக்கு இருக்கு… […]Read More
காதல் காதல் காதல் மாலை மங்கும் அந்த இனிமையான நேரத்தில் சென்னை கடற்கரை காற்று வந்து ரகிமாவின் பட்டு கூந்தலை அழகாய் வருடிச் சென்றது. யாரையுமே பார்த்ததும் வசிகரீக்கும் அழகான புன்னகையை எப்போதும் தவழ விட்டிருக்கும் ரோஜாவை போன்ற செக்க சிவந்த இதழ்கள் . கருவண்டு விழிகள் என பார்ப்பவர்கள் யாரையுமே கவர்ந்துவிடும் அழகு. “ரகிமா..” “ஹ்ம்ம்…. சொல்லு கார்த்திக்..?” “இன்னும் எவ்வளவு நேரம் தான் இப்படியே உட்கார்ந்திட்டு இருக்கறது…?” “ஏன் கார்த்திக் எங்கூட இருக்க உனக்கு […]Read More
சென்னை மாநகரப் பேருந்து ஒரு வெள்ளிக்கிழமை காலை சென்னை மாநகரப் பேருந்து நிலையம் ஒன்றில் வரிசையாக குளுகுளு பேருந்துகள் மாலை போட்டு நிற்க வைக்கப்பட்டிருந்தது. மந்திரி ஒருவர் பேருந்துகளை நகருக்கு வழங்கினார். அங்கே நின்று கொண்டிருந்த மற்ற பேருந்துகள், புதியவற்றை பார்த்து நக்கலாக சிரித்துக் கொண்டிருந்தன. “முதல்நாளே மாலையை போட்டு சங்கு ஊதிட்டானுங்க.” “அதை சொல்லு! உள்ளூர் ஆளான நாமளே இப்படி ஆகிட்டோம்.இவனுங்க எல்லாம் வெளியூர்லேருந்து வந்துருக்கானுங்க.ஒரு மாசம் கூட தாங்க மாட்டானுங்க.” “நல்லதுதான். பாரு! இப்போவே […]Read More
பயம் இரவின் நிசப்தத்தைக் ‘வவ்…வவ்’ என்ற நாயின் குரல் கலைத்தபோது எனது தூக்கமும் கலைந்தது. போர்வைக்குள் இருந்தபடியே மொபைலை எடுத்து மணி பார்த்தேன். ரெண்டு பத்து எனக் காண்பித்தது. படுக்கும் போது ஒரு மணியிருக்கும்… தூக்கம் வராது புரண்டு புரண்டு படுத்தவன் எப்படித் தூங்கிப் போனேன் என்று தெரியாது… நாயின் சப்தத்தால் தூக்கம் கலைந்தது எரிச்சலாக இருந்தது. இனி மறுபடியும் தூக்கம் வரப்போவதில்லை என்று நினைத்தபடி எழுந்தேன். வெளியில் நாயின் குரல் வேகமெடுத்தது. மெல்லக் கதவை நீக்கிப் […]Read More
பாகப்பிரிவினைகமலாவைச் சுற்றி பிள்ளைகள். அம்மாவின் வீட்டை எப்படி பங்குபோடலாம் என்ற எண்ணத்தோடு பிள்ளைகள். கமலாவிற்கு ஆறு குழந்தைகள். அதில் நான்கு பெண், இரண்டு ஆண்.மூத்தவள் கன்யா நல்ல படிப்பு. தனியார் அலுவலகத்தில் வேலை. இரண்டு ஆண் குழந்தையுடன் வசதியுடனும் வாழ்கிறாள். அடுத்தவள் நித்யா பெண் குழந்தையோடு சிங்கபூரில் கொழிக்கிறாள். மூன்றாவது பெண் முற்றமெல்லாம் பொன் என்பார்கள். (கிராமத்து வீடுகளில் இருக்கும் ஒரு பகுதி முற்றம்) அப்படிதான் சாந்தா பிறந்தவுடன் அவ்வளவு செல்வ செழிப்பு கமலாவின் வீட்டில்..ஆனால் சாந்தாவின் […]Read More
அவன் பிச்சைக்காரன் அல்ல… ஆம், அவன் ஒரு ஓவியக்கலைஞன்! சாலையோரத்தில் மக்கள் நடமாட்டம் மிகுந்த ஒரு இடத்தைத் தேர்ந்தெடுத்து சுத்தப்படுத்தி தன் கலைத்திறனைப் பயன்படுத்தி அழகான ஓவியம் ஒன்றை வரைவதுதான் அவன் வேலை. அதைப் பார்த்துக் கொண்டே செல்லும் மக்கள் வெள்ளத்தில் சில ஈர நெஞ்சங்கள் மட்டும் தன்னால் இயன்றதில் சிறிதளவு அவனுக்காகவோ, அவன் திறனுக்காகவோ போட்டுவிட்டு தன் இயந்திரப் பயணத்தை நோக்கிச் சென்றுவிடும். உதிரம் சிந்தும் இயேசு நாதர் தன் சிலுவையோடு, கோகுலத்துக் கண்ணன் தன் […]Read More
அந்தி சாயும் நேரத்த்தில் அந்த முதியோர் இல்லத்தின் வராந்தாவில் வந்தமர்ந்து பேசிக்கொண்டிருந்தார்கள் வயதான பாட்டிகள். மேலாளர் ரவி அங்கிருந்த பாட்டிகளைக் கணக்கெடுத்துவிட்டு நாற்காலியில் அமர்ந்தார். ”இன்னைக்கு கதை சொல்றது யாரு…?” கேட்டார் ரவி. ”நான்…!” குரல் தந்து விட்டு கை உயர்த்தினாள் தெய்வானைப் பாட்டி. ”ம்…சொல்லுங்க!: ரவி சொன்னதும் தொண்டையைக் கனைத்தபடி கதை சொல்ல ஆரம்பித்தாள் தெய்வானைப்பாட்டி. ”பாட்டி…நீங்க தான் அதிகமா கதை சொல்லியிருக்கீங்க, நீங்க தான் வின்னர்.!” ”எங்க கதையக் கேட்டு என்ன பண்ணப் போறீங்க…?” […]Read More
- 10 வயதில் 12 உலக சாதனைகள் – சிறுவன் கிருஷ்வா கஜபதி!
- மாக்சிம் கார்க்கி பிறந்த நாள்*
- டி. கே. பட்டம்மாள்
- எஸ். சத்தியமூர்த்தி காலமான தினமின்று
- வேதாத்திரி மகரிஷி நினைவு நாளின்று
- ஷங்கர் இயக்கத்தில் ராம் சரண் நடிப்பில் உருவாகி வரும் ‘கேம் சேஞ்சர்’ திரைப்படத்தின் முதல் பாடல் வெளியானது..!
- “மஞ்சும்மல் பாய்ஸ்” படத்தின் ஓடிடி வெளியீடு தேதி அறிவிப்பு!
- IPL 2024: புதிய வரலாறு படைத்தது சன்ரைசர்ஸ் அணி..!
- “பானை சின்னம்” மறுப்பு டெல்லி உயர்நீதிமன்றத்தில் விசிக மனு தாக்கல்..!
- தமிழ்நாட்டில் 1403 பேர் வேட்பு மனுக்கள் தாக்கல் – தேர்தல் ஆணையம்