“மை டியர் சிந்து நதியே எப்படி இருக்கறே?” வாட்ஸ் அப்பில் வந்த புதிய எண்ணை திறக்கையில் கண்களில் பட்ட வாக்கியம் தூக்கி வாரிப்போட்டது சிந்துவை! “சிந்து நதியே” அவளை இப்படி விளிப்பவன்? கிருஷ். கிருஷ் என்று அவள் கொண்டாடிய அவளின் முன்னாள் காதலன் கிருஷ்ணசாமி. வருடங்கள் ஐந்து ஓடிவிட்டது மனம் என்னும் சிலேட்டிலிருந்து அவனை துடைத்துவிட்டு அற்புதராஜை அதில் எழுதியாகிவிட்டது. அற்புதராஜுடன் அற்புதமாக வாழ்வை கழிப்பாள் என்று திருமண பந்தத்திற்குள் தள்ளிவிடப்பட்டவள் வாழ்க்கையில் ஒன்றும் பெரிய அற்புதம் […]Read More
ரொம்ப நேரம் அடித்து கொண்டு இருந்த மொபைலை எடுக்கல, ஒரு புது நம்பர். மீண்டும் மீண்டும் ஒலிக்க இப்போ எடுத்தேன் “ஹலோ” மறு முனையில் “ஹலோ” ஒரு இளம் வயசு பெண் குரல். “நீங்க” “நான் நான்சி அங்கிள்” “நான்சி ! அப்படி யாரும் எனக்கு தெரியாதே” “அங்கிள். போன மாசம். பாண்டியன் எக்ஸ்பிரஸ். ரயில் பயணத்தில். நான் என் பையன் பிரபாகரன் அம்மாவோட மீட் பண்ணோம். திண்டுக்கல்லில் இறங்கிட்டீங்க. நாம பேசிக்கொண்டிருந்தபோது பத்திரிகை ஆசிரியர்னு சொல்ல […]Read More
“என்னாச்சு டாக்டர்?” “கொஞ்சம் கிரிடிக்கல்தான். ஆப்ரேசன் பண்ண வேண்டி நெலம வரலாம்” “என்னடா அரசு…. டாக்டர் திடீர்னு இப்டி சொல்றாங்க. இப்ப என்ன பண்றது?” “அழாத மா… ஆப்ரேசன் பண்ணுனாலும் ஒன்னும் பிரச்சன வராது” என்று கலங்கிய விழிகளோடு தன் தாய் லட்சுமிக்கு ஆறுதல் கூறினான் அறிவரசன். அறிவரசன் லட்சுமியோட ஒரே மகன். சொல்லப் போனா லட்சுமிக்கு இருக்குற ஒரே உறவு ஆதரவு எல்லாமே அவன்தான். குடிகாரன்னு தெரிஞ்சும் சொந்த தாய்மாமனுக்கே வாக்கப்பட்டவ லட்சுமி. அவ வாழ்கைல […]Read More
“எனக்கென்னமோ, எங்கமாமியார் நடிக்கிறாங்கன்னே தோணுதும்மா! “—- மஹிமா சப்பாத்தி விள்ளலை குருமாவில் தோய்த்துக் கொண்டே தாயை ஏறிட்டாள். ” என்னடி இது இப்படியெல்லாம் பேசுற? “ “ஆமாம்மா மருமகளைதிட்டாத….கோபமா ஒரு பார்வை கூடப் பார்க்காத மாமியார் உலகத்திலே உண்டா? அன்னிக்கு அவங்களோட ஃபேவரிட் புடைவை மேல. குழம்பைக் கொட்டிட்டேன். கைத்தவறுதல் சகஜம் தானே. ட்ரை க்ளீனிங் கொடுத்தா ஆச்சுன்னு சொல்லிட்டு ஸாரி மாத்திட்டாங்க! கடிஞ்சு ஒரு சொல் இல்லை பார்வையில்லை…இன்னொருநாள்… அவங்க ஆசையா வாங்கி வந்திருந்த பீங்கான் […]Read More
பூஜையறையிலிருந்து வெளியே வந்தாள் மனோகரி.. கணவன் பிரணவ் இன்னும் படுக்கையை விட்டு எழுந்திருக்கவில்லை. சமயலறைக்குள் புகுந்தவள் பாலைச் சூடாக்கி ஃபில்டரிலிருந்து டிக்காஷனை இறக்கி காஃபி கலந்தாள். கோப்பையுடன் பெட்ரூமிற்குள் சென்று கணவனை உசுப்பினாள். காஃபிக் கோப்பையை டீப்பாய் மேல் வைத்தவள்.. “ஏங்க மணி ஆறாச்சு.. இன்னும் என்ன உறக்கம்? இன்னும் கொஞ்சம் முன்னாடி எழுந்துக்கப் பாருங்க. நீங்க ஜாக்கிங் முடிச்சிட்டு வரும்போது சூரியன் பல்லை இளிக்குது. அப்புறம் அடிச்சுப் பிடிச்சு வண்டியை விரட்டிட்டுப் போறது. நேத்து என் […]Read More
விட்றாதே..பிடி..இடிச்சுராதே..தலைவாசல் கொஞ்சம் உயரம் குறைவா இருக்கு..சாச்சுப்பிடி..” சலசலவென்ற பலர் பேசும் குரல் நல்ல உறக்கத்தில் இருந்த மாதவனை எழுப்பி விட்டது. பரபரப்பாக எழுந்து உட்கார்ந்தான்..பக்கத்தில் இருந்த செல் போனில் மணி பார்த்தான்..ஏழு _பதினைந்தைக் காட்டியது.. “ச்சே..! இன்னும் அரை மணிநேரம் இருக்கு..” “சுதா..சுதா..” “என்னங்க..” என்றபடி வந்து நின்றவள் குளித்து மங்களகரமான முகத்துடன் கூந்தலை நுனியில் முடிந்து கிள்ளுப்பூ வைத்திருந்தாள். இவை எதுவும் கண்ணிலோ கருத்திலோ பதியாமல் ,முகத்தை சுளித்தபடி ..”என்ன சத்தம்..”என்றான்.. “அது ஒண்ணுமில்லீங்க..ரொம்ப நாளா […]Read More
காலை பதினொரு மணி வெயில் காற்றைச் சூடாக்கி விட கோபமுற்ற காற்று தெருப் புழுதியை வாரியிறைக்க போவோர், வருவோர் முகத்திலெல்லாம் “நற…நற”வென்று சுடு மண். “அம்மணி…அம்மணி….” யாரோ அழைக்கும் குரல் கேட்டு குடிசைக்குள்ளிருந்து வெளியே வந்து எட்டிப் பார்த்த பங்கஜம் அந்த வயதான மனிதரைப் பார்த்து நெற்றியைச் சுருக்கிக் கொண்டு, “என்னா பெருசு?….ஆரு வேணும்?” கேட்டாள். அவள் பேச்சில் ஓங்கி நிற்கும் தெனாவெட்டிற்கு அந்த ஊர் இளைஞர்; மத்தியில் ரசிகர் மன்றமே உண்டு. “பங்கஜம்”…ங்கறது,….” நாக்கு வறண்ட […]Read More
தேனி அருகே நெருங்கி கொண்டிருந்தது கார். ஓட்டுநரின் லாவகமான கை வண்ணத்தில் அதிகாலையிலேயே மதுரையை தொட்டதும் மனது துள்ளியது சீக்கிரம் தேனிக்கு சென்றுவிடலாம் என்று. தற்போது மாவட்ட ஆட்சியரின் முதன்மை உதவியாளராக பணியில் இருந்தாலும் கடைநிலை ஊழியனாய் வேலை பார்த்த இடத்திற்கு செல்லும் போது இனம்புரியாத மலர்ச்சி ஏற்படுகிறது. ஏனோ மனது பல வருடங்கள், பின்னோக்கி பயணித்தது. தேனி ! கேரளா மாநிலத்தின் எல்லைக்கு மிக அருகில் கம்பம் பள்ளத்தாக்கில் அழகுற அமைந்திருக்கும் அழகான நகருக்கு அல்லி […]Read More
நீயென தின்னுயிர் கண்ணம்மாஎந்த நேரமும் நின்றனைப் போற்றுவேன் “வக்ர துண்ட மாகா காயசூர்யகோடி சமப் ப்ரப நிர்விக்னம்குருமே தேவ சர்வ கார்யேஷூ சர்வதா” இரண்டாவது முறையில் விழிப்பு வந்து விட்டது. ஆனால் சாய் நாதன் எழுந்திருக்கவில்லை. அப்படியே படுத்திருந்தார். உடலின் சோர்வு அகன்று ஒரு சுறுசுறுப்பு வரும் வரை அப்படியே கிடப்பார்.தினசரி சொல்லும் பாரதியார் பாட்டு மனசுக்குள் மந்திரமாய் ஓடும்.புது பேட்டரி போட்டது போல் ஆகி விடும் மனசும், உடலும். கண்ணை மூடிக் கிடந்தார். மனம் அம்பாய் […]Read More
காலையிலேயே அம்மா ஹாஸ்டலுக்கு வந்திருந்தாள். தம்பியும், நானும் அவளோடு கிளம்பி போனோம்.எங்கே போகிறோம் ? என கேட்கும் போதெல்லாம் அவள் எதுவும் சொல்லிக் கொள்ளவில்லை. அம்மாவின் உடலில் ஏலக்காய் வாசம் வீசியது வேலைக்கு போய்விட்டு அப்படியே வந்து இருக்கிறாள் போலிருக்கிறது. அவளின் விரல்கள் முன்பை விட இப்போது அதிகமாக கருப்பு,கருப்பாய் பித்தவெடிப்பை போல் வெடித்திருந்தது. எங்கள் குடும்பம் கடன்களால் சீரழிந்த குடும்பம். கடன் கொடுத்தவர்களின் கெட்ட வார்த்தைகளை கேட்க திராணியில்லாமல் சொந்த ஊர் விட்டு கேரளாவில் பிழைக்கும் […]Read More
- இன்றைய ராசி பலன்கள் ( மே 05 ஞாயிற்றுக்கிழமை 2024 )
- மறந்துபோன மரபு விளையாட்டுகள்- 8 | லதா சரவணன்
- கேப்ஸ்யூல் (நாவல்) பகுதி- 8 | பாலகணேஷ்
- “கிளைகள் இசைக்கும் கீதங்கள்” – 8 (நாவல்) | முகில் தினகரன்
- “பூமியை நெருங்கும் எரிகற்கள்” – நாசாவின் விளக்கம்..!
- கோடை விடுமுறையில் சிறப்பு வகுப்புகள் நடத்தினால் பள்ளிகள் மீது நடவடிக்கை..!
- 100 ரூபாயில் உதகையை சுற்றிப் பார்க்க சுற்று பேருந்து இயக்கப்படுவதாக தமிழ்நாடு அரசு அறிவிப்பு..!
- மே 8 வரை தமிழ்நாட்டில் மழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம்..!
- உதகையில் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் கொட்டி தீர்த்த மழை..!
- நாளை தமிழ்நாடு முழுவதும் கடைகள் இயங்காது..!