அனைவருக்கும் வணக்கம், மின்கைத்தடி.காம் குழுமத்திலிருந்து, பிம்பம் பதிப்பகம் என்று புதிய கிளை இந்த தமிழ்ப் புத்தாண்டில் தொடங்கி இருப்பதில் மிக்க மகிழ்ச்சியுறுகிறோம். படி வாழ்க்கையின் முதல் படி என்ற கூற்றுக்கு ஈடாகக் கடைசி மனிதர் இருக்கும் வரை, புத்தகம் நிச்சயமாக இருக்கும். நிச்சயமாக எந்த ஒரு தனி மனிதரையும் வளர்ப்பது புத்தகம் மட்டுமே அதைப் படிப்பதனால் மட்டுமே அடுத்தடுத்த பரிணாம வளர்ச்சி அடைகிறார் என்பது மிகையல்ல. 1093 சாதனங்கள் கண்டுபிடித்தற்குக் காப்புரிமை பெற்ற தாமஸ் ஆல்வா எடிசன் […]Read More
அனைவருக்கும் இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்… தமிழ் நிலா தொலைக்காட்சியின் விளையாட்டு அலைவரிசையின் நிர்வாக அலுவலகம் ஈக்காடுதாங்கலில் அமைந்திருந்தது. நிர்வாக இயக்குநர் குரியன் ஜோசப் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் திருவேங்கடம் தமிழ்கிரிக்கெட் வர்ணனையின் இயக்குநர் பால்மரியா மூத்த வர்ணனயாளர் கிரிகாந்த் மற்ற வர்ணனையாளர்கள் கிஷ்மன் பவராமகிருஷ்ணன், தப்பிரமணியம் சுத்ரிநாத், சுமாங் கிதானி, யாதாகிருஷ்னன் கீனிவாசன், பட்சுமிபதி சாலாஜி, எஸ்கே மீலாஜி, முட்டுசந்து கிரிக்கெட்டர் பத்து, கேவனா, படகோபன் கிமேஷ், பானி மற்றும் பலர் கூடியிருந்தனர். “மீட்டிங்குக்கு எல்லாரும் வந்திருக்கம் […]Read More
‘மின் கைத்தடி’ வாசகர்கள் அனைவருக்கும் வணக்கம். வரும் ஏப்ரல் 14 முதல் பல புதிய அம்சங்களுடன் நம் தளம் ஜொலிக்க இருக்கிறது. அதற்கான திட்டங்கள் தயாராகி வருகின்றன. அதன் ஒரு அங்கமாக இப்போது இந்த நகைச்சுவைச் சிறுகதைப் போட்டியை அறிவிக்கிறோம். மேலே உள்ள படம் சொல்லும் சூழ்நிலையை, கதாபாத்திரங்களை கவனியுங்கள். இவற்றை வைத்து கலகலவெனச் சிரிக்க வைக்கும் படியான ஒரு நகைச்சுவைச் சிறுகதையை எழுதுங்கள். எழுதிய சிறுகதையை [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள். சிறந்த […]Read More
அவளுக்கு பதட்டமாக இருந்தது. அவனுடைய பதிலுக்காக காத்திருந்தாள். சசீதர் அமைதியாக அவளைப்பார்த்துக்கொண்டிருந்தான்.‘சரீன்னு சொல்லித் தொலையேண்டா’மனசுக்குள் அர்ச்சனை தொடர்ந்தது.“ஹ்ம்! ஓகே! நீ நம்ம வீட்டுக்கு வரியா? இல்லை நான் வரணுமா?” அவனுடைய “நம்ம வீடு “என்ற பதம் லேசாய் அசைத்தது. அவளை… “நானும் பிள்ளைகளுமே நாளைக்கு வந்திடுறோம். அதுதான் வரவங்களுக்கும் வசதியாயிருக்கும். “ அவனுடையது மூன்று பெட்ரூம் ப்ளாட்..கிச்சன் வராண்டா என்று தனிவீடு போலிருக்கும். “ஓகே! ” தோள்குலுக்கலில் அலட்சியம் தெரிந்தது. ‘க்கும்! இதுக்கெல்லாம் ஒன்னும் குறைச்சலில்லை! ,’அர்ச்சனையைத் […]Read More
கைபேசியில் குவிந்திந்த குறுந்தகவல்களில் தேவையற்ற வற்றை அழித்துக் கொண்டிருந்தான் கௌதம். வயது 29. திராவிட நிறம் 175செமீ உயரம். மணிமேகலைப் பல்கலைக்கழத்தில் விரிவுரையாளராக பணிபுரிபவன். சமீபத்தில் திருமணமானவன். மனைவிக்கு குரல் கொடுத்தான். “மஞ்சரி காபி கொண்டா” மஞ்சரி வயது 26. முதுகலை விவசாயம் படித்தவள். நடிகை அபர்ணா பாலமுரளி சாயல் இருப்பாள். பெற்றோருக்கு ஒரே மகள் செல்லமாக வளர்ந்தவள். ஏறக்குறைய முப்பது குறுந்தகவல்களை அழித்த பிறகு மஞ்சரி சமையலறையிலிருந்து வெளிப்பட்டாள். பிடிபட்ட சுண்டெலியை தூக்கி வருவது போல […]Read More
கடந்த ஒரு வாரமாகத்தான் வேலைக்கு போகிறேன்.நான் பழுத்த சோம்பேறி என்பதாலோ என்னவோ , என்னை நானே அவ்வளவாய் வேலை வாங்கிக் கொண்டதில்லை. நுங்கம்பாக்கத்திலிருந்து தரமணி போக வேண்டும்.தேர்ந்த நோஞ்சான் ஆன எனக்கு இந்த தூரம் ஒரு கேடென புலம்பிக் கொண்டே ரயிலில் ஏறி வாசல்பக்கமாய் நின்றேன். ரயில் கொஞ்ச கொஞ்சமாய் நடந்து கொண்டேஇருந்து விட்டு பிறகு ஓட ஆரம்பித்தது.பேருந்து பயணத்தில் அவ்வளவாய் காணக் கிடைக்காதசென்னையின் மறுப்பக்கத்தை அதாவதுசேரியைபார்த்து விட முடியும்.கருப்பு ஆறுகள் ஓடிக் கொண்டிருக்க அதனை தொட்டவாரே […]Read More
ஓடிக் கொண்டிருந்த பேருந்தின் இதமான அதிர்வு உறக்கத்தை அள்ளி வீச, கண்களை மூடி அதைத் தழுவ முனைந்தேன். “அந்தக் கதை பெரிய கதை சாமி! அதை மட்டும் சினிமாவா எடுத்தா… சும்மா பிச்சுக்கிட்டுப் போவும்” சுற்றியிருப்பவர்களைப் பற்றிய கவலை சிறிதும் இல்லாமல், உரத்த குரலில் சொல்லி விட்டு ஓங்கிச் சிரித்தான் ஒரு முண்டாசுக்காரன். “எனக்கும் அரசல் புரசலாய்க் கொஞ்சம் தெரியும்! இருந்தாலும் உன்னோட வாயால தெரிஞ்சுக்கிட்டா தெளிவாய்ப் போயிடும்!னுதான் கேட்டேன்” கூட இருந்தவன் முண்டாசுக்காரனுக்கு நான் எந்த […]Read More
இரவு மணி பதினொன்று. அன்றைய வீட்டு வேலைகள் அனைத்தையும் முடித்துவிட்டு, அறைக்குள் நுழைந்தாள் கமலா. தன் மனைவியை கண்டதும், அதுவரை பார்த்துக் கொண்டிருந்த டிவி நியூஸ் சேனலை அணைத்தார் ராமசாமி. “இன்னும் நீங்க தூங்கலையா?” “தூக்கம் வரலை. உனக்காக காத்துகிட்டு இருந்தேன்.” “நாம என்ன இளமைக் காதலர்களா என்ன? காத்துக்கிட்டு இருக்கேன்னு சொல்றீங்க? என கூறிவிட்டு, எதையோ அலமாரியில் தேடினாள். “இதையா தேடிக்கிட்டு இருக்க…” என கட்டிலில் கிடந்த தலைவலி தைலத்தை மனைவியிடம் காட்டினார். “அட…. ஆமாம்! […]Read More
கடிகாரத்தை பார்த்தாள் மணி 9. 00 ஆக போகிறது. இன்னமும் பேருந்தை காணவில்லை. அலுவலகத்திற்கு நேரமாகி விட்டது. அப்படியே அருகிலிருந்தவர்களை வேடிக்கை பார்த்தவாறு கண்களை சுழற்றினாள் இந்து. பெரிய மீசை வைத்து ஆஜானுபாகுவான தோற்றத்துடன் நின்று கொண்டிருந்தான் ஒருவன். அவனது பார்வை அலைபாய்ந்து கொண்டிருந்தது. எதையோ நோட்டமிட்டபடி. அவனது கருமை நிறம் மேலும் அவனை கடுமையானவனாக காட்டியது. இந்துவிற்கு அவனை பார்த்ததுமே பிடிக்கவிலலை. ஏனென்றே தெரியாமலே வெறுப்பை காட்டினாள். அவனை பார்க்க பிடிக்காமல் முகத்தை திருப்பியவாறு நின்று […]Read More
மலைக்கோவிலின் சுவரில் சாய்ந்து கொண்டு படிகளில் சின்ன சின்னஞ் சிறு புள்ளியாக ஏறி வருபவர்களை ரசித்துக் கொண்டு இருந்தோம். நானும் என் பையன் சித்தார்த்தும். அப்போது தூரத்தில் படி ஏறிக் கொண்டு இருந்த அந்தப் பெண் கண்ணில் பட்டாள். சத்யாவா? அது? ரொம்ப தூரத்தில் வந்து கொண்டு இருந்ததால் அவ்வளவாகத் தெரியவில்லை. பார்ப்பதற்கு அவளைப் போலவே இருந்தது. பார்த்துப் பத்து வருடங்கள் இருக்குமா. ? நான் (சாந்தி), சரண், சத்யா மூவரும் கொங்கு ஆர்ட்ஸ் காலேஜ் ல […]Read More
- ‘2 நாட்களுக்கு குடிநீர் விநியோகம் பாதிக்கும்’ – சென்னை குடிநீர் வாரியம் அறிவிப்பு..!
- அருண் விஜய் இன் AV36 படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியானது..!
- ‘குரங்கு பெடல்’ திரைப்படத்தின் வெளியீடு தேதி அறிவிப்பு..!
- TCS உடன் “BSNL” மாஸ் திட்டம்..!
- வரலாற்றில் இன்று ( 25.04.2024 )
- இன்றைய ராசி பலன்கள் ( 25 ஏப்ரல் வியாழக்கிழமை 2024 )
- கோடை வெப்பத்தால் கண்களுக்கு ஏற்படும் பாதிப்பு -மருத்துவர்கள் எச்சரிக்கை..!
- வரலாற்றில் இன்று ( 24.04.2024 )
- இன்றைய ராசி பலன்கள் ( 24 ஏப்ரல் புதன்கிழமை 2024 )
- உலக புத்தக தினம் இன்று