வரலாற்றில் இன்று (அக்டோபர் 02)

வரலாறு என்பது இறந்த காலத்தில் நிகழ்ந்த விஷயத்தை பற்றி நாம் தெரிந்து கொள்ளும் ஒன்றாகும். குறிப்பாக வரலாற்றில் ஒருவர் செய்த சாதனைகள், தியாகங்கள், சிறப்புகள் இதுபோன்ற பலவகையான முக்கிய விஷயங்கள் பற்றி அனைவருக்கும் தெரியப்படுத்தும் விஷயமாகும். தெளிவாக சொல்ல வேண்டும் என்றால் தங்கள் வாழும் காலத்தின் பின்னணியில் கடந்த காலத்தின் நிகழ்வுகளை விளக்கி வரலாறாக எழுதுகின்றனர். சரி இந்த பதிவில் நாம் நமது வாழ்வில் கடந்து செல்லும் ஒவ்வொரு நாட்களிலும் ஏதாவது ஒரு விஷயம் நிகழ்ந்திருக்கலாம் அந்த  வகையில் வரலாற்றில் இன்று என்ன நாள்? என்பதை பற்றி நாம் நமது மின்கைத்தடியின் இந்த தொகுப்பில் படித்து தெரிந்து கொள்வோம் வாங்க..

வரலாற்றில் இன்று | Today History in Tamil

அக்டோபர் 2 (October 2) கிரிகோரியன் ஆண்டின் 275 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 276 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 90 நாட்கள் உள்ளன.

நிகழ்வுகள்

829 – தியோஃபிலோஸ் (813-842) தனது தந்தையை தொடர்ந்து பைசாந்தியப் பேரரசர் ஆனார்.
1187 – 88 ஆண்டுகள் சிலுவைப் போரின் பின்னர் எகிப்திய சுல்தான் சலாதீன் ஜெருசலேமைக் கைப்பற்றினான்.
1263 – நோர்வேக்கும் ஸ்கொட்லாந்துக்கும் இடையே லார்க்ஸ் என்ற இடத்தில் போர் இடம்பெற்றது.
1535 – ஜாக் கார்ட்டியே மொண்ட்றியாலைக் கண்டுபிடித்தார்.
1864 – அமெரிக்க உள்நாட்டுப் போர்: ஐக்கிய அமெரிக்கப் படையினர் வேர்ஜீனியாவின் சால்ட்வில் நகரைத் தாக்கினர். ஆனாலும் அவர்கள் கூட்டமைப்பினரால் விரட்டப்பட்டனர்.
1870 – ரோம் மீண்டும் இத்தாலியுடன் இணைவதற்கு ஆதரவாக மக்கள் பெரும்பான்மையாக வாக்களித்தனர்.
1903 – யாழ்ப்பாணத்தில் Jaffna Steam Navigation Company என்ற நிறுவனத்துக்குச் சொந்தமான “SS Jaffna” என்ற பயணிகள் கப்பல் தனது வெள்ளோட்டத்தை ஆரம்பித்தது.
1935 – இத்தாலி அபிசீனியாவைக் கைப்பற்றியது.
1941 – இரண்டாம் உலகப் போர்: நாசி ஜெர்மனிப் படைகள் மாஸ்கோவுக்கு எதிரான தமது மூன்று மாதத் தாக்குதலை ஆரம்பித்தனர்.
1946 – பல்கேரியா கம்யூனிஸ்டுகளின் வசமாகியது.
1958 – கினி பிரான்சிடம் இருந்து விடுதலையை அறிவித்தது.
1968 – மெக்சிகோவில் இடம்பெற்ற மாணவர்களின் அமைதிப் போராட்டத்தின் முடிவில் நூற்றக்கணக்கானோர் கொல்லப்பட்டனர்.
1990 – சீனாவின் போயிங் விமானம் கடத்தப்பட்ட பின்னர் அது குவாங்சூ விமானநிலையத்தில் தரையிறங்கும் போது தரையில் நின்ற இரு விமானங்களுடன் மோதியதில் 132 பேர் கொல்லப்பட்டனர்.
1992 – பிரேசிலில் சிறைக்கைதிகளின் போராட்டம் ஒன்றின் போது 111 கைதிகள் சுட்டுக் கொல்லபட்டனர்.
1996 – பெருவில் விமானம் ஒன்று பசிபிக் பெருங்கடலில் வீழ்ந்ததில் 70 பேர் கொல்லப்பட்டனர்.
2005 – நியூயோர்க்கில் படகு ஒன்று கவிழ்ந்ததில் 22 பேர் கொல்லப்பட்டனர்.
2006 – பென்சில்வேனியாவில் பாடசாலை ஒன்றில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு நிகழ்வில் 5 மாணவிகள் கொல்லப்பட்டனர்.

பிறப்புகள்

1800 – நாட் டர்னர், அமெரிக்க அடிமைக் கிளர்ச்சித் தலைவர் (இ. 1831)
1869 – மகாத்மா காந்தி, (இ. 1948)
1904 – லால் பகதூர் சாஸ்திரி, இந்தியப் பிரதமர், (இ. 1966)
1908 – டி. வி. இராமசுப்பையர், தினமலர் நாளிதழின் நிறுவனர் (இ. 1984)
1925 – ஆன் றணசிங்க, ஆங்கிலேய யூதப் பெண் எழுத்தாளர்
1965 – டொம் மூடி ஆஸ்திரேலிய துடுப்பாட்ட வீரர்

இறப்புகள்

1906 – ராஜா ரவி வர்மா, இந்தியாவின் பிரபல ஓவியர் (பி. 1848)
1975 – காமராஜர், இந்திய அரசியல் தலைவர், தமிழ் நாடு முன்னாள் முதலமைச்சர் (பி. 1903)
2014 – பொள்ளாச்சி நா. மகாலிங்கம், தமிழகத் தொழிலதிபர், மக்கள் சேவையாளர் (பி. 1923)

சிறப்பு நாள்

இந்தியா – காந்தி ஜெயந்தி
கினி – விடுதலை நாள் (1958)
அனைத்துலக வன்முறையற்ற நாள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!