சென்னை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று இரவு பெய்த கனமழை காரணமாக விமான சேவை பாதிப்பு அடைந்தது.
கனமழையால் நகரின் பல பகுதிகளில் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்தது.. நுங்கம்பாக்கம், வள்ளுவர் கோட்டம், குரோம்பேட்டை, தாம்பரம் உள்ளிட்ட பகுதிகளில் மழை வெள்ளம் காரணமாக போக்குவரத்து பாதிப்பு அடைந்தது.

மழை காரணமாக மதுரை, தூத்துக்குடி, கொச்சி உள்ளிட்டநகரங்களிலிருந்து சென்னை வந்த பல விமானங்கள் தாமதமாக தரையிறங்கின. சென்னையிலிருந்து மங்களூரு, கொச்சி செல்ல வேண்டிய விமானங்கள் தாமதமாக புறப்பட்டதால் பயணிகள் அவதியடைந்தனர்
இந்நிலையில் திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட ஐந்து மாவட்டங்களில், இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக, சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
