சென்னை உட்பட பல இடங்களில் உணவகங்களில் இட்லி, தோசை, பொங்கல், சாப்பாடு என, உணவு பொருட்கள் விலை உயர்ந்துள்ளது. குறிப்பாக, ‘சிக்கன், மட்டன்’ என, அசைவ பிரியாணிக்கு இணையாக, பனீர் பிரியாணி, மஷ்ரூம் பிரியாணி என, சைவ உணவு வகைகள் விலை அதிகரித்துள்ளது. தமிழகத்தில் அமைப்பு சார்ந்த பிரிவில் சிறியது, பெரியது, நடுத்தரம் என, சராசரியாக, 50,000 உணவகங்கள் உள்ளன. இது தவிர, தள்ளுவண்டி உணவகம், ‘டிபன் சென்டர்’ உள்ளிட்ட அமைப்புசாரா உணவகங்களும் உள்ளன.

சைவ உணவகங்களில், இட்லி, தோசை, சாம்பார் இட்லி, பொங்கல், பூரி, கிச்சடி, தோசை வகைகள், மதிய சாப்பாடு, மஷ்ரூம் பிரைடு ரைஸ், புலாவ், மஷ்ரூம் பிரியாணி, பனீர் பிரைடு ரைஸ், புலாவ், பனீர் பிரியாணி, கோபி பிரைடு ரைஸ் என, பல உணவு வகைகள் விற்கப்படுகின்றன.
அசைவ உணவகங்களில், மட்டன், சிக்கன் பிரியாணி, இறால், மீன், சிக்கன் 65, ஆட்டுக்கால் பாயா உட்பட, பல்வேறு உணவு வகைகள் விற்கப்படுகின்றன.
மளிகை பொருட்கள், எண்ணெய் வகைகள், காய்கறி, சமையல் காஸ் சிலிண்டர், கடை வாடகை, மின் கட்டணம் போன்றவற்றை உள்ளடக்கி, உணவகங்களில் உணவு பொருட்களின் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது.
