வரலாற்றில் இன்று (செப்டம்பர் 05)

வரலாறு என்பது இறந்த காலத்தில் நிகழ்ந்த விஷயத்தை பற்றி நாம் தெரிந்து கொள்ளும் ஒன்றாகும். குறிப்பாக வரலாற்றில் ஒருவர் செய்த சாதனைகள், தியாகங்கள், சிறப்புகள் இதுபோன்ற பலவகையான முக்கிய விஷயங்கள் பற்றி அனைவருக்கும் தெரியப்படுத்தும் விஷயமாகும். தெளிவாக சொல்ல வேண்டும் என்றால் தங்கள் வாழும் காலத்தின் பின்னணியில் கடந்த காலத்தின் நிகழ்வுகளை விளக்கி வரலாறாக எழுதுகின்றனர். சரி இந்த பதிவில் நாம் நமது வாழ்வில் கடந்து செல்லும் ஒவ்வொரு நாட்களிலும் ஏதாவது ஒரு விஷயம் நிகழ்ந்திருக்கலாம் அந்த  வகையில் வரலாற்றில் இன்று என்ன நாள்? என்பதை பற்றி நாம் நமது மின்கைத்தடியின் இந்த தொகுப்பில் படித்து தெரிந்து கொள்வோம் வாங்க..

வரலாற்றில் இன்று | Today History in Tamil

செப்டம்பர் 5 (September 5) கிரிகோரியன் ஆண்டின் 248 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 249 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 117 நாட்கள் உள்ளன.

நிகழ்வுகள்

1666 – லண்டனின் பெரும் தீ அணைந்தது. 13,200 வீடுகளும் 87 தேவாலயங்களும் எரிந்து அழிந்தன. 16 பேர் கொல்லப்பட்டனர்.
1698 – ரஷ்ய பேரரசன் முதலாம் பீட்டர் தாடி வைத்திருப்பவர்களுக்கு வரி அறவிட உத்தரவிட்டான்.
1799 – பாஞ்சாலங்குறிச்சியை மேஜர் பானர்மேன் தலைமையிலான படை முற்றுகையிட்டது.
1800 – மோல்டா பிரித்தானியாவினால் பிடிக்கப்பட்டது.
1839 – முதலாவது ஓப்பியம் போர் சீனாவில் ஆரம்பமானது.
1880 ரஷ்யாவில் சென் பீட்டர்ஸ்பேர்க்கில் உலகின் முதலாவது மின்சார டிராம் (Tram) வெற்றிகரமாகச் சோதிக்கப்பட்டது.
1881 – மிச்சிகனில் இடம்பெற்ற தீயினால் மில்லியன் ஏக்கர்கள் வரை சேதமடைந்தது. 282 பேர் கொல்லப்பட்டனர்.
1882 – ஐக்கிய அமெரிக்காவின் முதலாவது தொழிலாளர் நாள் பேரணி நியூயோர்க் நகரில் இடம்பெற்றது.
1887 – இங்கிலாந்தில் எக்செட்டர் நகரில் நாடக அரங்கில் தீப்பிடித்ததில் 186 பேர் கொல்லப்பட்டனர்.
1902 – இலங்கையில் சாவகச்சேரிக்கும் பளைக்கும் இடையில் 14 மைல் நீளமான தொடருந்துப் பாதை திறக்கப்பட்டது.
1905 – ரஷ்ய-ஜப்பானியப் போர்: அமெரிக்க அதிபர் தியோடர் ரூஸ்வெல்ட்டின் அமைதி முயற்சியை அடுத்து இரு நாடுகளுக்கும் இடையில் அமைதி உடன்பாடு நியூ ஹாம்ப்ஷயரில் எட்டப்பட்டு போர் முடிவுக்கு வந்தது.
1914 – முதலாம் உலகப் போர்: பாரிசின் வடகிழக்கே பிரெஞ்சுப் படைகள் ஜெர்மனியப் படைகளைத் தாக்கி அவர்களை வென்றனர்.
1932 – பிரெஞ்சு மேல் வோல்ட்டா பிளவடைந்து ஐவரி கோஸ்ட், பிரெஞ்சு சூடான், நைஜர் என மூன்று தனிநாடுகளானது.
1939 – இரண்டாம் உலகப் போர்: ஐக்கிய அமெரிக்கா போரில் தனது நடுநிலையை அறிவித்தது.
1961 – அணிசேரா நாடுகளின் முத்லாவது மாநாடு பெல்கிறேட்டில் இடம்பெற்றது.
1969 – மை லாய் படுகொலைகள்: அமெரிக்க இராணுவ லெப். வில்லியம் கலி 109 வியட்நாமிய பொதுமக்களைக் கொலை செய்ததாகக் குற்றஞ்சாட்டப்பட்டான்.
1972 – ஜேர்மனியில் மியூனிக்கில் இடம்பெற்ற ஒலிம்பிக் போட்டிகளில் பங்குபற்றிய இஸ்ரேலிய வீரர்களின் மீது பாலஸ்தீனத் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியதில் 17 பேர் கொல்லப்பட்டனர்.
1977 – வொயேஜர் 1 விண்கலம் விண்ணுக்கு ஏவப்பட்டது.
1978 – காம்ப் டேவிட் ஒப்பந்தம்: இஸ்ரேலியப் பிரதமர் பெகினுக்கும் எகிப்திய அதிபர் அன்வர் சதாத்துக்கும் இடையில் மேரிலாந்தில் அமைதி ஒப்பந்த மாநாடு ஆரம்பமானது.
1980 – உலகின் மிக நீளமான நெடுஞ்சாலைச் சுரங்கமான கோதார்ட் சாலைச் சுரங்கம் (16.224 கிமீ) சுவிட்சர்லாந்தில் திறக்கப்பட்டது.
1986 – அமெரிக்க பான் ஆம் விமானம் 358 பேருடன் கராச்சியில் கடத்தப்பட்டது.
1990 – மட்டக்களப்பு வந்தாறுமூலைப் பல்கலைக்கழகத்தில் அகதிகளாகத் தங்கியிருந்த 158 தமிழர்கள் இலங்கை இராணுவத்தினரால் படுகொலை செய்யப்பட்டனர்.
2005 – சுமாத்ராவில் பயணிகள் விமானம் ஒன்று தரையில் மோதியதில் தரையில் இருந்த 39 பேர் உட்பட மொத்தம் 143 பேர் கொல்லப்பட்டனர்.

பிறப்புகள்

1872 – வ. உ. சிதம்பரம் பிள்ளை, விடுதலைப் போராட்ட வீரர் (இ. 1938)
1888 – சர்வபள்ளி இராதாகிருஷ்ணன், இந்தியாவின் இரண்டாவது குடியரசுத் தலைவர் (இ. 1975)
1945 – மு. மேத்தா, கவிஞர்
1950 – வீரசிங்கம் துருவசங்கரி, இலங்கையைச் சேர்ந்த அறிவியலாளரும் கண்டுபிடிப்பாளரும் (இ. 2006)

இறப்புகள்

1997 – அன்னை தெரேசா, (பி 1910)

சிறப்பு நாள்

இந்தியா – ஆசிரியர் நாள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!