கடந்த மாதத்தில் 99 லட்சத்து 9 ஆயிரத்து 632 பயணிகள் மெட்ரோ ரெயில்களில் பயணித்துள்ளனர்
சென்னை மெட்ரோ ரெயில் நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,
சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம், சென்னையில் உள்ள மக்களுக்கும், மெட்ரோ ரெயில் பயணிகளுக்கும் போக்குவரத்து வசதியை அளித்து வருவதோடு நம்பக தன்மையான பாதுகாப்பான வசதியை வழங்கி வருகிறது.அந்த வகையில் நடப்பாண்டு ஜனவரி மாதத்தில் மெட்ரோ ரெயில்களில் 86 லட்சத்து 99 ஆயிரத்து 344 பயணிகளும், பிப்ரவரி மாதத்தில் 86 லட்சத்து 65 ஆயிரத்து 803 பயணிகளும், மார்ச் மாதத்தில் 92 லட்சத்து 10 ஆயிரத்து 69 பயணிகளும், ஏப்ரல் மாதத்தில் 87 லட்சத்து 89 ஆயிரத்து 587 பயணிகளும், மே மாதத்தில் 89 லட்சத்து 9 ஆயிரத்து 724 பயணிகளும், ஜூன் மாதத்தில் 92 லட்சத்து 19 ஆயிரத்து 925 பயணிகளும், ஜூலை மாதத்தில் 1 கோடியே 3 லட்சத்து 78 ஆயிரத்து 835 பயணிகளும் சென்னை மெட்ரோ ரெயில்களில் பயணம் செய்துள்ளனர்.
இந்நிலையில் கடந்த மாதத்தில் 99 லட்சத்து 9 ஆயிரத்து 632 பயணிகள் மெட்ரோ ரெயில்களில் பயணித்துள்ளனர். அதிகபட்சமாக கடந்த மாதம் 14-ந் தேதி அன்று (சுதந்திர தினத்துக்கு முந்தைய நாள்) 4 லட்சத்து 9 ஆயிரத்து 590 பயணிகள் மெட்ரோ ரெயில்களில் பயணம் செய்துள்ளனர். என தெரிவிக்கப்பட்டுள்ளது.
