கிளாம்பாக்கத்தில் பயணிகள் திடீர் சாலை மறியல்..!

500க்கும் மேற்பட்டோர் மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பான சூழல் நிலவியது.

கிளாம்பாக்கம் பஸ் நிலையம் என்பது சென்னையில் உள்ள ஒரு பெரிய பேருந்து நிலையமாகும். இது கலைஞர் நூற்றாண்டு பேருந்து நிலையம் என்று அழைக்கப்படுகிறது. சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தின் நெரிசலைக் குறைக்கும் நோக்கில் இந்த பேருந்து நிலையம் கட்டப்பட்டது.

இந்த நிலையில் சொந்த ஊர்களுக்கு செல்ல பயணிகள் நேற்று கிளாம்பாக்கத்தில் காத்திருந்தனர். ஆனால் வெகு நேரமாக காத்திருந்தும் எந்த பஸ்சும் வராததால் பயணிகள் பொருமையை இழந்தனர். இதனையடுத்து நள்ளிரவாகியும் எந்த பஸ்சும் வராததால் ஒரு கட்டத்திற்கு மேல் ஆத்திரம் அடைந்த பயணிகள் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர்.

500க்கும் மேற்பட்டோர் மறியலில் ஈடுபட்டதால், சென்னை – திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மேலும் கிளாம்பாக்கத்தில் இருந்து வெளியூர்களுக்கு செல்ல போதிய பஸ்கள் இல்லை என பயணிகள் குற்றஞ்சாட்டி உள்ளனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பான சூழல் நிலவியது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!