சந்தோஷங்கள் பேரழகானவை

சின்னச் சின்ன சந்தோஷங்களால் அலங்கரிக்கப்பட்ட வாழ்க்கையே எல்லோருக்கும் கிடைத்திருக்கிறது. இலகுவான மனம் படைத்தவர்களால் மட்டுமே அதைக் கண்டடையவும் கொண்டாடவும் முடிகிறது. இன்னொரு உயிரை காயப் படுத்தாத சந்தோஷங்கள் பேரழகானவை

❤️ மகிழ்ச்சி என்பது எப்போதும் நம்மிலிருந்து தான் உருவாகிறது. மகிழும் கலை எண்களுக்கு அப்பால் பட்டது. உணர்வுகளுடன் பின்னிப் பிணைந்தது. //ஓர் அன்பளிப்பின் பெறுமதியை அன்பினால் அளவிடுபவர்களையே மகிழ்ச்சி அரவணைத்துக் கொள்கிறது.

மகிழ்ந்திருக்க ஒவ்வொரு நாளும் பெரும் ஆச்சரியங்கள் நிகழ வேண்டியதில்லை. ஒரு கப் தேநீரில்

,🤎 கால் தொடும் கடலலையில்

..💙 இனிக்க இனிக்க சிறு சாக்லேட்டில்

..,🤎 எப்போதேனும் எட்டிப்பார்க்கும் குட்டிக்குட்டிப் பரிசுகளில்

.💝 அவ்வப்போது வரும் விடுமுறை நாட்களில்..

💗 பெரு வேலையின் முடிவுகளில்..

சின்னஞ்சிறுசுகளுடன் சிறு அரட்டையில்

..😍 நாம் நட்ட செடி முதன் முதலாய் துளிர்க்கையில்.

.💚 உயிர் நனைக்கும் மெல்லிசையில்

..💜 உள்ளம் தொடும் புத்தகத்தில்

..🤍 கவிதையுடனான தனிமையில்

💞 மௌனம் சுமந்த பயணம் ஒன்றில்..

ஆத்மார்த்தமான ஆசீர்வாதம் ஒன்றில்

🥰 கொஞ்சம் குறு நகையில்..

கொஞ்சும் வார்த்தைகளில்..

💓 புதிய நபர்களின் அறிமுகத்தில்

..🫂 பழைய உறவுகளின் நினைவுகளில்

..💌 அற்ப கவனிப்பிற்காய் அன்பைப் பொழியும் பூனைக்குட்டியின் கரிசனத்தில்.

.😘 எப்போதும் பார்க்கும் கார்டூன் எபிசோடில்.

.😉 மகிழ்வித்து மகிழ்தலில்..

பகிர்ந்து கவனித்தலில்..

ஏற்கப்பட்ட பிரார்த்தனையில்.

.💗 ஆறுதலாய் ஒரு தலை கோதலில்

,😻 நமக்கும் யாரேனும் முக்கியத்துவம் கொடுக்கையில்

♥️ நாம் பேசுவதில் , அருகிருத்தலில் மகிழும் ஜீவன்களிடத்தில்..

😁🧡 என நீள்கிறது பட்டியல்.

நம்மை நாமே மகிழ்விக்கத் தொடங்கும் ஒரு நாளில் மகிழ்ச்சியின் தேவதை நெருங்கி வருகிறாள்.

அன்றிலிருந்து புத்தம் புது அதிசயங்கள் உதயமாகத் தொடங்குகின்றன.புதிதாய் பிறக்கிறோம். மகிழ்ச்சி பிரசவிக்கிறது

🍂

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *