இன்றைய ராசி பலன்கள் ( பிப்ரவரி 10 திங்கட்கிழமை 2025 )

‘தினம் தினம் திருநாளே!’ தினப்பலன் பிப்ரவரி 10-ம் நாளுக்கான மேஷம் முதல் மீனம் வரையுள்ள 12 ராசிக்காரர்களுக்கும் பலன்கள் எப்படி இருக்கிறது என்று நமது மின்கைத்தடியின் இப்பகுதியில் பார்க்கலாம்.

குரோதி வருடம் தை மாதம் 28 ஆம் தேதி திங்கட்கிழமை 10.02.2025 சந்திர பகவான் இன்று கடக ராசியில் பயணம் செய்கிறார். இன்று இரவு 08.08 வரை திரியோதசி. பின்னர் சதுர்த்தசி.இன்று இரவு 07.12 வரை புனர்பூசம். பின்னர் பூசம்.கேட்டை மூலம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சந்திராஷ்டமம்.சற்று கவனமுடனும் எச்சரிக்கையுடனும் நடந்துகொள்வது அவசியம்.

மேஷ ராசி அன்பர்களே!

அனுகூலமான நாள். புதிய முயற்சி சாதகமாக முடியும். எதிர்பாராத செலவுகள் ஏற்பட்டாலும் சமாளித்துவிடுவீர்கள். வீட்டில் உற்சாகமான சூழ்நிலை காணப்படும். வாழ்க்கைத்துணை வழியில் மகிழ்ச்சி தரும் செய்தி வந்து சேரும். தாயின் தேவைகளை நிறை வேற்றி, அவருடைய ஆசிகளைப் பெறுவீர்கள். குடும்பப் பொறுப்புகளை நிறைவேற்றுவதில் உற்சாகமாக ஈடுபடுவீர்கள். அலுவலகத்தில் பணிச்சுமை அதிகரிக்கும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும்.

ரிஷப ராசி அன்பர்களே!

உற்சாகமான நாளாக அமையும். சிலருக்கு எதிர்பாராத பொருள்வரவுக்கு வாய்ப்பு உண்டு. அரசாங்கக் காரியங்கள் சற்று தாமதமாகத்தான் முடியும். புதிய முயற்சிகளைப் பொறுத்தவரை ஒருமுறைக்குப் பலமுறை யோசித்து இறங்குவது நல்லது. வாழ்க்கைத்துணை வழி உறவுகளிடம் எதிர்பார்த்த காரியம் நல்லபடி முடியும். தந்தை வழி உறவுகளால் செலவுகள் ஏற்படக்கூடும். அலுவலகத்தில் வழக்கமான நிலையே காணப்படும். வியாபாரத்தில் பணியாளர்களுக்காக செலவு செய்யவேண்டி வரும்.

மிதுன ராசி அன்பர்களே!

இன்று எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு உண்டு. சிலருக்கு புதிய ஆடை, ஆபரணங்கள் வாங்கும் யோகம் உண்டாகும். சகோதர வகையில் செலவுகள் ஏற்படக்கூடும் என்றாலும், அதனால் மகிழ்ச்சியே ஏற்படும். அரசாங்க வகையில் எதிர்பார்க்கும் காரியம் சற்று இழுபறிக்குப் பிறகு அனுகூலமாக முடியும். கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். அலுவலகத்தில் பணிகளில் உற்சாகமாக ஈடுபடுவீர்கள். வியாபாரத்தில் லாபம் கூடுதலாகக் கிடைக்கும்.

கடக ராசி அன்பர்களே!

மனதில் இனம் தெரியாத உற்சாகம் பெருக்கெடுக்கும். ஆனால், புதிய முயற்சி எதையும் இன்று தொடங்கவேண்டாம். திடீர் செலவுகளால் கையிருப்பு கரைவதுடன் கடன் வாங்கவேண்டிய சூழ்நிலையும் ஏற்படும். வாழ்க்கைத்துணை வழி உறவுகளால் சிறுசிறு சங்கடங்கள் ஏற்படக் கூடும். அலுவலகத்தில் உங்கள் பணிகளில் சக ஊழியர்கள் உதவிகரமாக இருப்பார்கள். வியாபாரத்தில் லாபம் கிடைத்தாலும் பணியாளர்கள் வகையில் செலவுகளும் அதிகரிக்கும்.

சிம்ம ராசி அன்பர்களே!

மகிழ்ச்சியான நாள். தேவையான பணம் கையில் இருக்கும். இளைய சகோதரர் கேட்டு வரும் உதவியை மகிழ்ச்சியுடன் செய்து தருவீர்கள். தந்தை வழியில் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். சிலருக்கு முக்கிய பிரமுகர்களின் அறிமுகமும் அவர்களால் தொடர் ஆதாயமும் கிடைக்கும். வாழ்க்கைத் துணையால் மகிழ்ச்சி உண்டாகும். அலுவலகத்தில் எதிர்பார்த்த சலுகை கிடைக்கும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். பங்குதாரர்களால் ஆதாயம் உண்டாகும்.

கன்னி ராசி அன்பர்களே!

அரசாங்க அதிகாரிகளால் காரிய அனுகூலம் உண்டாகும். தந்தை வழி உறவுகளால் பணவரவுக்கு வாய்ப்பு ஏற்படும். குடும்பம் தொடர்பான முக்கிய முடிவுகளை பிற்பகலுக்கு மேல் மேற்கொள் வது சாதகமாக முடியும். பிற்பகலுக்கு மேல் தொலைதூரத்தி லிருந்து எதிர்பார்த்த நல்ல செய்தி வந்து சேரும். அலுவலகத்தில் சக ஊழியர்களால் ஏற்பட்ட தொல்லைகள் நீங்கும். வியாபாரம் வழக்கம்போலவே நடைபெறும். பணியாளர்களின் ஒத்துழைப்பு சுமாராகத்தான் இருக்கும்.

துலா ராசி அன்பர்களே!

உற்சாகமான நாள். எதிர்பார்த்த பணம் கைக்கு வரும். உங்கள் முயற்சிக்கு சகோதரர்கள் ஒத்து ழைப்பு தருவார்கள். பிள்ளைகளின் விருப்பத்தை நிறைவேற்றுவீர்கள். மாலையில் குடும்பத்துடன் வெளியிடங்களுக்குச் சென்று வருவீர்கள். அலுவலகத்தில் பணிச்சுமை சற்று அதிகரித்தாலும் உற்சாகமாகச் செய்து முடிப்பீர்கள். வியாபாரத்தில் எதிர்பார்த்ததை விடவும் லாபம் கூடுதலாகக் கிடைப்பது மகிழ்ச்சி தரும். பங்குதாரர்களால் சில சங்கடங்கள் ஏற்படக்கூடும்.

விருச்சிக ராசி அன்பர்களே!

வீண் அலைச்சலைத் தவிர்ப்பது நல்லது. மற்றவர்களுடன் பேசும்போது வீண்மனஸ்தாபம் ஏற்படக் கூடும் என்பதால், பொறுமையைக் கடைப்பிடிக்கவும். காரியங்களில் சிறுசிறு தடைகள் ஏற்பட்டா லும் அனுகூலமாக முடிந்துவிடும். சிலருக்குக் குடும்பத்துடன் கோயில்களுக்குச் சென்று பிரார்த்தனைகளை நிறைவேற்றும் வாய்ப்பு ஏற்படும். அலுவலகத்தில் பணிகளில் கூடுதல் கவனம் தேவை. வியாபாரத்தில் வாடிக்கையாளர்களால் பிரச்னைகள் ஏற் படக்கூடும். பொறுமை தேவை.

தனுசு ராசி அன்பர்களே!

புதிய முயற்சிகளையும் வெளியூர்ப் பயணங்களையும் தவிர்ப்பது நல்லது. மற்றவர்களுடன் வீண்விவாதத்தில் ஈடுபடவேண்டாம். உறவினர்களால் குடும்பத்தில் சில பிரச்னைகள் ஏற்படக்கூடும். நண்பர்களிடம் எதிர்பார்த்த உதவி கிடைப்பதில் தாமதம் ஏற்படும். அலுவலகத்தில் சக ஊழியர்களின் பணிகளையும் சேர்த்துப் பார்க்கவேண்டி வரும். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களிடம் கனிவான அணுகுமுறை அவசியம். லாபம் கூடுதலாகக் கிடைக்கும்.

மகர ராசி அன்பர்களே!

எதிர்பாராத அதிர்ஷ்ட வாய்ப்புகள் ஏற்படும். சிலருக்கு பணியின் காரண மாக பயணம் மேற்கொள்ள நேரிடும். மாலையில் உறவினர்கள் வருகையால் வீட்டில் மகிழ்ச்சி ஏற்படும். வாழ்க்கைத் துணைவழி உறவுகளுக்காக செலவு செய்யவேண்டி வரும். கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். அலுவலகத்தில் அதிகாரிகள் அனுசரணையாக நடந்துகொள்வார்கள். வியாபாரத்தில் சக வியாபாரிகளால் ஏற்பட்ட தொல்லை நீங்கும். விற்பனையும் லாபமும் கூடுதலாக இருக்கும்.

கும்பராசி அன்பர்களே!

காரியங்களில் அனுகூலம் உண்டாகும். முயற்சிகள் வெற்றி பெறும். காரியங்கள் அனுகூலமாக முடியும். தந்தை வழியில் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். சகோதரர் களுக்காக செலவு செய்யவேண்டி வரும். சிலருக்கு புதிய ஆடை, ஆபரணங்களின் சேர்க்கை உண்டாகும். மாலையில் குடும்பத்துடன் உறவினர் அல்லது நண்பர் வீட்டு விசேஷத்தில் கலந்து கொள்ளும் வாய்ப்பு ஏற்படும். அலுவலகத்தில் வழக்கமான நிலையே காணப்படும். வியாபாரம் பிற்பகலுக்குமேல் விறுவிறுப்பாக நடக்கும். லாபமும் கூடுதலாகக் கிடைக்கும்.

மீனராசி அன்பர்களே!

எதிர்பார்த்த பணம் கைக்கு வரும். பிள்ளைகள் வழியில் எதிர்பாராத செலவுகளும் ஏற்படக்கூடும். வெளியூர்ப் பயணங்களைத் தவிர்ப்பது நல்லது. உணவு தொடர்பான அலர்ஜி ஏற்படக்கூடும் என்பதால், வெளியிடங்களில் உணவு விஷயத்தில் கவனம் தேவை. உறவினர்கள் வருகையால் சிற்சில சங்கடங்களைச் சமாளிக்கவேண்டி வரும். அலுவலகத்தில் பணிச்சுமை அதிகரிப்பதால் சற்று சோர்வு உண்டாகும். வியாபாரத்தில் விற்பனை சுமாராகத்தான் இருக்கும்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!