விழுப்புரத்தில் நாளை பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை..!

ஃபெஞ்சல் புயல் காரணமாக மிக அதிக பாதிப்புகளை சந்தித்த மாவட்டங்களில் விழுப்புரம் முதன்மையானதாகும். புயல் ஓய்ந்த பின்னரும் கூட இன்னும் இம்மாவட்டத்தில் மழை வெள்ளம் வடியவில்லை. இந்நிலையில் மீட்பு பணிகள் காரணமாக நாளை மாவட்டத்தில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டிருக்கிறது.

விழுப்புரம், கள்ளக்குறிச்சி மற்றும் கடலூர் என 3 மாவட்டங்களில் ஃபெஞ்சல் புயல் கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளது. வீடு, வாசலை இழந்து, உற்றார் உறவினர்களை இழந்து மக்கள் கடும் துன்பத்தில் ஆழ்ந்துள்ளனர். பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் தெரிவித்துள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ரூ.5 லட்சம் இழப்பீடாக வழங்கப்படும் என்று கூறியுள்ளார். அதேபோல, சேதமடைந்த குடிசைகளுக்கு ரூ.10,000, முழுமையாக சேதமடைந்த குடிசைகளுக்கு பதிலாக கலைஞர் கனவு இல்லம் திட்டத்தில் வீடு கட்டித்தரப்படும் எனவும் கூறியுள்ளார்.

தவிர மூன்று மாவட்டங்களிலும் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு ரூ.2000 நிவாரணமாக வழங்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.

இப்படி இருக்கையில் மீட்பு பணிகள் காரணமாக விழுப்புரம் மாவட்டத்தில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டிருக்கிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!