இன்றைய ராசி பலன்கள் ( செப்டம்பர் 11 புதன்கிழமை 2024 )

தினம் தினம் திருநாளே!’ தினப்பலன் செப்டம்பர் 11-ம் நாளுக்கான மேஷம் முதல் மீனம் வரையுள்ள 12 ராசிக்காரர்களுக்கும் பலன்கள் எப்படி இருக்கிறது என்று நமது மின்கைத்தடியின் இப்பகுதியில் பார்க்கலாம்.

குரோதி வருடம் ஆவணி மாதம் 25 ஆம் தேதி செவ்வாய்க்கிழமை 10.09.2024 சந்திர பகவான் இன்று விருச்சிக ராசியில் பயணம் செய்கிறார். இன்று இரவு 07.10 வரை சப்தமி. பின்னர் அஷ்டமி .இன்று மாலை 05.13 வரை அனுஷம். பின்னர் கேட்டை.அஸ்வினி பரணி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சந்திராஷ்டமம்.சற்று கவனமுடனும் எச்சரிக்கையுடனும் நடந்துகொள்வது அவசியம்.

மேஷ ராசி அன்பர்களே!

தந்தைவழி உறவுகளால் சில பிரச்னைகள் ஏற்பட்டு நீங்கும். குடும்பம் தொடர்பான முக்கிய முடிவு எடுப்பதில் பெரியவர்களின் ஆலோசனை அவசியம். நண்பர்களிடம் எதிர்பார்த்த காரியம் முடிவதில் தாமதம் ஏற்படும். அவ்வப்போது மனதில் சிறுசிறு குழப்பங்கள் ஏற்பட்டு நீங்கும். வியாபாரத்தில் விற்பனை வழக்கம்போலவே இருக்கும். வாடிக்கையாளர் களிடம் கனிவான அணுகுமுறை அவசியம். இன்று மகாலட்சுமி வழிபாடு நலம் சேர்க்கும்.

ரிஷப ராசி அன்பர்களே!

மனதில் தன்னம்பிக்கை அதிகரிக்கும். சிலருக்கு நண்பர்களிடம் எதிர் பார்த்த பணம் கிடைக்க வாய்ப்பு உண்டு. வாழ்க்கைத்துணைவழி உறவுகளிடம் எதிர்பார்த்த காரியம் நல்லபடி முடியும். உறவினர்கள் மூலம் மகிழ்ச்சி தரும் செய்தி கிடைக்கும். அதிகரிக்கும் செலவுகளால் கையிருப்பு குறையும். வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் கூடுதலாகக் கிடைக்கும். மகாவிஷ்ணுவை வழிபடுவதன் மூலம் நன்மைகள் அதிகரிக்கும்.

மிதுன ராசி அன்பர்களே!

இன்று எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு உண்டு. சிலருக்கு புதிய ஆடை, ஆபரணங்கள் வாங்கும் யோகம் உண்டாகும். சகோதர வகையில் சுபச்செலவுகள் ஏற்படக்கூடும். வாழ்க்கைத்துணையால் மகிழ்ச்சி உண்டாகும். தந்தையின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. வியாபாரத்தில் லாபம் கூடுதலாகக் கிடைக்கும். பங்குதாரர்களால் அனுகூலம் உண்டா கும். சிவபெருமானை தியானித்து வழிபட மகிழ்ச்சி கூடுதலாகும்.

கடக ராசி அன்பர்களே!

இன்று உற்சாகமாகக் காணப்படுவீர்கள். உறவினர்கள் மூலம் மகிழ்ச்சி தரும் செய்தி கிடைக்கக்கூடும். சுபநிகழ்ச்சிகளில் கலந்துகொள்ளும் வாய்ப்பு ஏற்படும். தாய்வழி உறவு களால் நன்மை உண்டாகும். மற்றவர்களுடன் பேசும்போது பொறுமையைக் கடைப்பிடிக்கவும். வியாபாரத்தில் எதிர்பார்த்தபடியே விற்பனை நடக்கும். சக வியாபாரிகளால் ஆதாயம் கிடைக் கும். ஆஞ்சநேயரை வழிபட நற்பலன்கள் அதிகரிக்கும்.

சிம்ம ராசி அன்பர்களே!

தேவையான பணம் கையில் இருக்கும். காரியங்கள் முடிவதில் தாமதம் ஏற்பட்டாலும் முடித்துவிடுவீர்கள். இளைய சகோதரர்களிடம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். சிலருக்கு தெய்வப் பிரார்த்தனைகளை நிறைவேற்றும் வாய்ப்பு உண்டாகும். உறவினர்கள் மூலம் கேட்கும் செய்தி சிறிது சங்கடத்தைத் தரக்கூடும். வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் எதிர் பார்த்தபடியே இருக்கும். துர்கையை வழிபட காரியங்கள் வெற்றிகரமாக முடியும்.

கன்னி ராசி அன்பர்களே!

உற்சாகமான நாள். குடும்பத்தில் ஏற்பட்டிருந்த குழப்பங்கள் நீங்கும். நண்பர்களால் ஆதாயம் கிடைக்கும். கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். குடும்ப விஷயமாக சிறு பயணம் மேற்கொள்ள நேரிடும். பிள்ளைகளால் மகிழ்ச்சி உண்டாகும். வியாபாரத்தில் புதிய முயற்சி சாதகமாக முடியும். விற்பனை கூடுதலாக இருக்கும். இன்று சிவபெருமானை வழிபட காரியங்கள் சாதகமாக முடியும்.

துலா ராசி அன்பர்களே!

உற்சாகமான நாள். எதிர்பார்த்த பணம் கைக்கு வரும். எதிர்பாராத செலவு களும் ஏற்படக்கூடும். உங்கள் முயற்சிகளுக்கு வாழ்க்கைத்துணை ஒத்துழைப்பு தருவார். பிள்ளை களின் விருப்பத்தை நிறைவேற்றுவீர்கள். மாலையில் குடும்பத்தினருடன் பேசி ஒரு பிரச்னைக்குத் தீர்வு காண்பீர்கள். வியாபாரத்தில் பரபரப்பாகச் செயல்படுவீர்கள். புதிய வாடிக்கையாளர்கள் அறிமுகமாவார்கள். இன்று தட்சிணாமூர்த்தியை வழிபட மனதில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.

விருச்சிக ராசி அன்பர்களே!

தெய்வ அனுகிரகம் நிறைந்த நாள். காரியங்களில் சிறுசிறு தடைகள் ஏற்பட்டாலும் முடிந்துவிடும். எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு உண்டு. கணவன் – மனைவிக் கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். பிள்ளைகள் பிடிவாதமாக நடந்துகொள்வார்கள். விட்டுக் கொடுத்துச் செல்வது நல்லது. நண்பர்களிடம் எதிர்பார்த்த பண உதவி கிடைக்கும். வியாபாரத்தில் பணியாளர்களால் ஏற்பட்ட இடையூறுகள் நீங்கும். இன்று முருகப்பெருமானை வழிபடுவது நன்று.

தனுசு ராசி அன்பர்களே!

காரியங்களில் அனுகூலம் உண்டாகும். எதிர்பார்த்த பணம் கைக்கு வரும். ஆனால், திடீர் செலவுகளால் கையிருப்பு கரையும். அக்கம்பக்கத்தில் இருப்பவர்களுடன் இணக்க மாக நடந்துகொள்வது நல்லது. வாழ்க்கைத்துணையால் மகிழ்ச்சி ஏற்படும். உடல் ஆரோக்கியத் தில் கவனம் தேவை. வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் எதிர்பார்த்ததைவிட கூடுதலாக இருக்கும். இன்று விநாயகரை வழிபடுவதால் நற்பலன்கள் கூடுதலாகும்.

மகர ராசி அன்பர்களே!

எதிர்பாராத அதிர்ஷ்ட வாய்ப்புகள் ஏற்படும். சிலருக்கு தாய்வழி உறவினர் களால் தேவையற்ற பிரச்னைகள் ஏற்படக்கூடும். தாயின் உடல்நலனில் கவனம் தேவை. மாலை யில் நண்பர்கள் மூலம் கேட்கும் செய்தி உங்களை உற்சாகப்படுத்தும். வாழ்க்கைத்துணைவழி உறவுகளுக்காக செலவு செய்யவேண்டி வரும். உங்கள் முயற்சிக்கு வாழ்க்கைத்துணை ஒத்துழைப்பு தருவார். வியாபாரம் வழக்கம்போலவே இருக்கும். இன்று சிவபெருமான் வழிபாடு நன்று.

கும்பராசி அன்பர்களே!

தந்தை வழியில் எதிர்பார்த்த பணஉதவி கிடைக்கும். சகோதரர்களிடம் எதிர்பார்த்த காரியம் சாதகமாக முடியும். சிலருக்கு புதிய ஆடை, ஆபரணங்களின் சேர்க்கை உண்டாகும். மாலையில் உறவினர்கள் மூலம் மகிழ்ச்சி தரும் செய்தி கிடைக்க வாய்ப்பு உள்ளது. நண்பர்களால் ஆதாயம் கிடைக்கும். பிள்ளைகளின் தேவைகளைப் பூர்த்தி செய்வீர்கள். வியாபா ரத்தில் பங்குதாரர்களால் சில சங்கடங்கள் ஏற்படக்கூடும். இன்று மகாவிஷ்ணுவை வழிபட மகிழ்ச்சி அதிகரிக்கும்.

மீனராசி அன்பர்களே!

எதிர்பார்த்த பணம் கைக்கு வரும். எதிர்பாராத செலவுகளும் ஏற்படக்கூடும். உறவினர்கள் வகையில் சிற்சில சங்கடங்களைச் சமாளிக்கவேண்டி வரும். கணவன் – மனைவிக் கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். பிள்ளைகள் பொறுப்பாக நடந்துகொள்வது மகிழ்ச்சி தரும். அக்கம்பக்கத்தில் இருப்பவர்களுடன் அனுசரணையாக நடந்துகொள்ளவும். வியாபாரம் சுமாராகத்தான் இருக்கும். இன்று தட்சிணாமூர்த்தியை வழிபடுவது நலம் சேர்க்கும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!