வார ராசிபலன்கள் !! – 16.12.2019 முதல் 22.12.2019 வரை – ஜோதிடர் அ.மோகன்ராஜ்

 வார ராசிபலன்கள் !! – 16.12.2019 முதல் 22.12.2019 வரை – ஜோதிடர் அ.மோகன்ராஜ்
மேஷம் :
சமூக பணியில் இருப்பவர்களுக்கு தடைகள் நீங்கி சுபிட்சம் உண்டாகும். மனதில் நினைத்த காரியங்கள் கைகூடி வரும். மனதிற்கு நெருக்கமானவர்களின் விருப்பங்களை நிறைவேற்றி வைப்பீர்கள். கணவன், மனைவிக்கிடையே ஒற்றுமை மேம்படும். உடல் ஆரோக்கியம் சார்ந்த இன்னல்கள் குறையும். புத்திரர்கள் வழியில் சுபச்செயல்கள் தொடர்பான செய்திகள் கிடைக்கும். தனவரவுகள் சாதகமாக அமையும். பொன், பொருள் சேர்க்கைகள் உண்டாகும். உத்தியோகத்தில் சிலருக்கு பணி நிமிர்த்தமாக வெளியூர் சென்று பணிபுரிவதற்கான வாய்ப்புகள் உண்டாகும்.
வழிபாடு :
வெள்ளிக்கிழமைதோறும் மகாலட்சுமியை வழிபட்டு வர இன்னல்கள் குறையும்.
———————————————————————
ரிஷபம் :
நண்பர்களின் மூலம் சாதகமான வாய்ப்புகள் ஏற்படும். உடல் ஆரோக்கியம் சம்பந்தமான செயல்பாடுகளில் கவனம் வேண்டும். கொடுக்கல்-வாங்கலில் கவனம் வேண்டும். உத்தியோகஸ்தர்கள் பணியில் திறமைகளை வெளிப்படுத்தி உயர் அதிகாரிகளின் பாராட்டுகளை பெறுவார்கள். கணவன், மனைவிக்கிடையே அனுசரித்து செல்லவும். தாய்வழி உறவினர்களிடம் விட்டுக்கொடுத்து செல்லவும். எதிர்பாராத பயணங்களால் வீண் அலைச்சல்கள் உண்டாகும். மாணவர்களுக்கு கல்வியில் முயற்சிக்கேற்ற முன்னேற்றம் உண்டாகும்.
வழிபாடு :
செவ்வாய்க்கிழமைதோறும் முருகப்பெருமானை வழிபட்டு வர ஆதரவுகள் பெருகும்.
———————————————————————
மிதுனம் :
நண்பர்களிடம் தேவையற்ற கருத்துக்களை பகிர்வதை தவிர்க்கவும். தடைபட்டு கொண்டிருந்த தனவரவுகள் கிடைக்கும். வியாபாரம் தொடர்பான புதிய முடிவுகளில் கூட்டாளிகளை அனுசரித்து செல்லவும். உயர் அதிகாரிகளிடம் கொடுக்கல்-வாங்கலில் கவனம் வேண்டும். ஆடம்பர பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். உடல் ஆரோக்கியத்தில் சிறுசிறு பாதிப்புகள் தோன்றி மறையும். புதிய வேலை தேடுபவர்கள் கிடைக்கும் வாய்ப்புகளை பயன்படுத்தி கொள்வது உத்தமமாகும். மாணவர்கள் விளையாட்டு போட்டிகளில் ஈடுபட்டு அனைவரின் பாராட்டுகளையும் பெற்று மகிழ்வீர்கள்.
வழிபாடு :
புதன்கிழமைதோறும் பெருமாளை வழிபட்டு வர எண்ணங்கள் தெளிவு பெறும்.
———————————————————————
கடகம் :
திட்டமிட்டு செயல்படுவதன் மூலம் எண்ணிய வெற்றியை அடைய இயலும். மனதில் எதையும் சமாளிக்கும் தன்னம்பிக்கை அதிகரிக்கும். பயணங்களின் தன்மைகளை அறிந்து மேற்கொள்வதன் மூலம் உடல் ஆரோக்கியம் சீராகும். சமூகத்தில் உள்ள பெரிய மனிதர்களின் தொடர்புகள் கிடைக்கும். மற்றவர்களிடம் பேசும்போது நிதானம் வேண்டும். எதிர்பாராத தனவரவுகள் கிடைக்கும். குடும்ப நபர்களிடம் சூழ்நிலைக்கு ஏற்றவாறு அனுசரித்து செல்லவும். தொழில் முனைவோருக்கு எதிர்பார்த்த வாய்ப்புகளும், இலாபமும் கிடைக்கும். உத்தியோகத்தில் எதிர்பார்த்த இடமாற்றம் சாதகமாகும்.
வழிபாடு :
வயதில் முதியவர்களுக்கு தேவையான உதவிகளை செய்வதன் மூலம் தடைகள் அகலும்.
———————————————————————
சிம்மம் :
சக ஊழியர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். செய்யும் வேலைகளில் அவசரமின்றி நிதானத்துடன் செயல்படவும். பொதுக் கூட்டப் பேச்சுக்களால் கீர்த்தி உண்டாகும். தாய்மாமன் உறவினர்களால் அனுகூலமான வாய்ப்புகள் கிடைக்கும். அந்நியர்களின் மூலம் இலாபம் உண்டாகும். தொழிலில் ஏற்படும்அலைச்சல்களால் அனுகூலமான இலாபம் கிடைக்கும். வர்த்தகம் சம்பந்தமான பணிகளில் மேன்மையான சூழல் ஏற்படும். பூர்வீக சொத்துக்களால் பொருட்சேர்க்கை உண்டாகும். வீடு கட்டுவதற்கான புதிய முயற்சிகளை மேற்கொள்வீர்கள். பொருளாதார மேன்மைக்கான உதவிகள் நண்பர்கள் மூலம் கிடைக்கும்.
வழிபாடு :
வெள்ளிக்கிழமைதோறும் மாரியம்மனை வழிபட்டு வர வாழ்க்கை பற்றிய புரிதல் உண்டாகும்.
———————————————————————
கன்னி :
அரசு தொடர்பான காரியங்களில் காலதாமதம் உண்டாகும். பேச்சுக்களால் தனலாபம் கிடைக்கும். கௌரவ பதவிகளால் மதிப்புகள் உயரும். துணிவுமிக்க தீரச் செயல்களால் மேன்மை உண்டாகும். நேர்மைக்கான அங்கீகாரம் கிடைக்கும். வாக்குவன்மையால் பாராட்டப்படுவீர்கள். இளைய சகோதரர்கள் சாதகமாக நடந்து கொள்வார்கள். புதிய தொழில் சம்பந்தமான முயற்சிகளால் கீர்த்தி உண்டாகும். சொந்த பந்தங்களின் வருகையால் மனமகிழ்ச்சி ஏற்படும். கூட்டாளிகளால் அனுகூலமான பலன்கள் உண்டாகும். நீர்வழி தொழிலில் இலாபம் கிடைக்கும்.
வழிபாடு :
சனிக்கிழமைதோறும் அனுமனை வழிபட்டு வர உடல் ஆரோக்கியம் மேம்படும்.
———————————————————————
துலாம் :
ஆடம்பர செலவுகளை தவிர்ப்பதன் மூலம் நெருக்கடியான சூழலை தவிர்க்க இயலும். கணவன், மனைவிக்கிடையே இருந்த கருத்து வேறுபாடுகள் மறைந்து குடும்பத்தில் ஒற்றுமை நிலவும். பூர்வீக சொத்துக்களின் மூலம் சிறுசிறு செலவுகள் தோன்றி மறையும். துரிதமான செயல்பாடுகளால் எண்ணிய இலக்கை அடைவீர்கள். முயற்சிக்கேற்ற பலன்கள் கிடைக்கும். வாக்குவன்மையால் எதிர்பார்த்த இலாபம் உண்டாகும். நண்பர்களுடன் விருந்துகளில் பங்கேற்று மகிழ்வீர்கள். இன்பச் சுற்றுலா செல்வதற்கான வாய்ப்புகள் உண்டாகும். வெளியூர் வேலை சம்பந்தமான முயற்சிகள் சாதகமாக அமையும்.
வழிபாடு :
சிவாலய வழிபாடு தடைகளை அகற்றி மேன்மையடைய செய்யும். 
———————————————————————
விருச்சிகம் :
திடீர் யோகத்தால் எதிர்பாராத வரவுகள் உண்டாகும். கடனால் மன வருத்தங்கள் ஏற்படும். பிள்ளைகளால் சுபச்செலவுகள் உண்டாகும். அரசாங்கத்திடமிருந்து எதிர்பார்த்த அனுகூலமான பலன்கள் கிடைக்கும். குறுகிய தூர பயணங்களை மேற்கொள்வதால் மனதில் உள்ள கவலைகள் குறையும். தொழிலில் கூட்டாளிகளிடம் தேவையற்ற பேச்சுக்களை தவிர்ப்பது நன்று. மனதில் புதுவிதமான எண்ணங்கள் தோன்றும். குடும்ப உறுப்பினர்களின் ஆதரவுகள் கிடைக்கும். எதிர்பாலின மக்களிடம் கவனத்துடன் செயல்படவும். தாய்வழி உறவினர்களிடம் அனுகூலமாக நடந்து கொள்ளவும்.
வழிபாடு :
அம்மனை வழிபட்டு வர குடும்ப ஒற்றுமை மேம்படும். 
———————————————————————
தனுசு :
பொருளாதாரம் மேன்மை அடையும். சாதுர்யமான பேச்சுக்களால் நன்மை உண்டாகும். அரசு அதிகாரிகளிடம் அமைதிப்போக்கினை கடைபிடிப்பதால் தேவையற்ற வம்புகளை தவிர்க்கலாம். எண்ணங்களில் மாற்றம் ஏற்படும். வெளியூர் பயணங்களால் இலாபம் உண்டாகும். எதிர்காலம் சம்பந்தமான திட்டங்களுக்கான பணியில் ஈடுபடுவீர்கள். மனைகளால் இலாபம் உண்டாகும். தொழிலில் இழந்த பொருட்களை மீட்பதற்கான சூழல் சாதகமாக அமையும். நண்பர்களுடன் வீண் விவாதங்களை தவிர்ப்பது நல்லது. நீண்ட நாள் ஆசைகளை நிறைவேற்றி கொள்வதற்கான வாய்ப்புகள் உண்டாகும்.
வழிபாடு :
தட்சிணாமூர்த்தியை வழிபட்டு வர எண்ணங்கள் தெளிவு பெறும். 
———————————————————————
மகரம் :
எதிர்பாராத செலவுகளால் பண நெருக்கடி உண்டாகும். பிள்ளைகளால் சுபச்செய்திகள் கிடைக்கும். கணவன், மனைவிக்கிடையே உள்ள பிரச்சனைகள் குறைந்து அன்பு அதிகரிக்கும். செய்யும் தொழிலில் மேன்மை உண்டாகும். பணியில் உள்ளவர்கள் சக ஊழியர்களிடம் நிதானமாக நடந்து கொள்ளவும். நண்பர்களின் மூலம் வருமான வாய்ப்புகள் அதிகரிக்கும். அரசு காரியங்களில் எதிர்பார்த்த செயல்கள் யாவும் எண்ணியவாறு ஈடேறும். தொழிலில் உள்ள போட்டிகளை சமாளிப்பீர்கள். அருள் தரும் வேள்விகளில் கலந்து கொள்வீர்கள்.
வழிபாடு :
துர்க்கை அம்மனை வழிபட்டு வர மேன்மை உண்டாகும். 
———————————————————————
கும்பம் :
உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் உயர்பதவிகள் கிடைப்பதற்கான வாய்ப்புகள் உண்டாகும். பணி செய்யும் இடங்களில் கோப்புகளை கையாளும்போது சற்று விழிப்புணர்வுடன் செயல்படவும். தாய்மாமன் உறவினர்களால் ஆதாயம் உண்டாகும். செய்யும் வேலையில் பதற்றமில்லாமல் நிதானத்துடன் செயல்படவும். கூட்டாளிகளால் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். தந்தையிடம் சற்று கனிவாக நடந்து கொள்ளவும். தலைமை பதவியில் உள்ளவர்களின் ஆதரவுகள் கிடைக்கும். தொழிலை அபிவிருத்தி செய்ய போதுமான கடன் உதவிகள் சாதகமாக அமையும்.
வழிபாடு :
முருகப்பெருமானை வழிபட்டு வர காரியத்தடைகள் அகலும்.
———————————————————————
மீனம் :
புதிய முயற்சிகளில் எதிர்பார்த்த பலன்கள் சாதகமாக அமையும். மனக்கவலைகள் நீங்கி மகிழ்ச்சியுடன் காணப்படுவீர்கள். பதவி உயர்விற்கான முயற்சிகள் கைகூடும். கல்வி பயிலும் மாணவர்களின் திறமைகள் வெளிப்படும். எதிர்பார்த்த கடன் உதவிகள் கிடைக்கும். ஆபரணச்சேர்க்கை உண்டாகும். விளையாட்டு வீரர்களுக்கு சாதகமான சூழல் உண்டாகும். வாசனை திரவியங்கள் விற்பனை செய்வோருக்கு தனலாபம் கிடைக்கும். உயர் அதிகாரிகளின் ஆதரவால் நீண்ட நாள் நிலுவையில் இருந்த பணிகள் முடியும். வாரிசுகள் தந்தையின் தொழிலில் புதுவித மாற்றங்களை செய்து தந்தைக்கு உதவியாக இருப்பார்கள்.
வழிபாடு :
தினமும் விநாயகரை வழிபட்டு வர லாபம் அதிகரிக்கும். 
———————————————————————
         – ஜோதிடர் அ.மோகன்ராஜ்

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...