இன்றைய ராசி பலன்கள் ( ஜூன் 29 சனிக்கிழமை 2024 )

தினம் தினம் திருநாளே!’ தினப்பலன் ஜூன் 29-ம் நாளுக்கான மேஷம் முதல் மீனம் வரையுள்ள 12 ராசிக்காரர்களுக்கும் பலன்கள் எப்படி இருக்கிறது என்று நமது மின்கைத்தடியின் இப்பகுதியில் பார்க்கலாம்.

குரோதி வருடம் ஆனி மாதம் 15 ஆம் தேதி சனிக்கிழமை 29.06.2024 சந்திர பகவான் இன்று மேஷ ராசியில் பயணம் செய்கிறார். இன்று மாலை 03.58 வரை அஷ்டமி. பின்னர் நவமி.இன்று காலை 10.46 வரை உத்திரட்டாதி . பின்னர் ரேவதி.ஆயில்யம் மகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சந்திராஷ்டமம்.சற்று கவனமுடனும் எச்சரிக்கையுடனும் நடந்துகொள்வது அவசியம்.

மேஷ ராசி அன்பர்களே!

மனதில் உற்சாகம் பெருக்கெடுக்கும். நினைத்தவேலைகளை குறித்த நேரத்தில் முடிப்பீர்கள். தாயின் விருப்பத்தை நிறைவேற்று வீர்கள். தாய்வழி உறவினர்களிடம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். சிலருக்கு புதிய நண்பர்களின் அறிமுகம் ஏற்படும். உறவினர்களிடம் பக்குவமாக நடந்துகொள்ளவும். தந்தையின் உடல் ஆரோக் கியத்தில் கவனம் செலுத்தவும். இன்று ஆஞ்சநேயரை வழிபடுவது நன்று.

ரிஷப ராசி அன்பர்களே!

மனதில் தைரியமும் தன்னம்பிக்கையும் அதிகரிக்கும். துணிச்சலுடன் செயல்படுவீர்கள். தொடங்கும் காரி யம் அனுகூலமாக முடியும். வாழ்க்கைத்துணையால் மகிழ்ச்சி உண்டாகும். உங்களுடைய முயற்சி களுக்கு குடும்பத்தினரின் ஆதரவு கிடைக்கும். செலவுகள் அதிகரித்தாலும் அதனால் மகிழ்ச்சியே உண்டாகும். விநாயகரை வழிபடுவது நலம் சேர்க்கும்.

மிதுன ராசி அன்பர்களே!

எதிர்பார்த்த பணம் கைக்குக் கிடைக்கும். வீட்டில் உள்ளவர்கள் உங்கள் ஆலோசனையைக் கேட்டுச் செயல்படுவார்கள். கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். பிள்ளைகள் குறித்த கவலைகள் நீங்கும். மாலையில் வாழ்க்கைத்துணைவழியில் மகிழ்ச்சியான செய்தி கிடைக்க வாய்ப்பு உள்ளது. தட்சிணாமூர்த்தி வழிபாடு நலம் சேர்க்கும்.

கடக ராசி அன்பர்களே!

உற்சாகமான நாள். இன்று தொடங்கும் புதிய முயற்சிகள் வெற்றிகரமாக நிறைவேறும். எதிரிகளால் ஏற்பட்ட தொல்லைகள் நீங்கும். மகிழ்ச்சி பிறக்கும். சகோதர வகையில் எதிர்பார்த்த காரியம் அனுகூலமாக முடிவதுடன் அவர்கள் மூலம் பணவரவுக்கும் வாய்ப்பு உண்டு. கணவன் – மனைவிக்கிடையே ஏற்பட்டிருந்த பிணக்குகள் நீங்கும். மகாவிஷ்ணு வழிபாடு நலம் சேர்க்கும்.

சிம்ம ராசி அன்பர்களே!

முக்கிய முடிவு எடுப்பதைத் தவிர்ப்பது நல்லது. மனதில் அவ்வப்போது தேவையற்ற குழப்பங்கள் ஏற்பட்டு நீங்கும். உறவினர்கள் வகையில் தேவையற்ற பிரச்னை ஏற்படும் என்பதால் பொறுமை அவசியம். பேச்சில் நிதானம் தேவை. வார்த்தைகளால் வம்பு வரலாம். ஒரு சிலருக்கு அதிகரிக்கும் செலவுகளால் கடன் வாங்க வேண்டிய சூழ்நிலை உண்டாகும். இன்று விநாயகர் வழிபாடு நன்று.

கன்னி ராசி அன்பர்களே!

தேவையான பணம் கிடைக்கும். சிலருக்கு எதிர்பாராத பணவரவுக்கும் திடீர் செலவுகளுக்கும் வாய்ப்பு உண்டு. தாயின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்தவும். வீண் அலைச்சலைத் தவிர்ப்பது நல்லது. உறவினர்களுடன் பேசும்போது பொறுமையைக் கடைப் பிடிக்கவும். முருகப்பெருமானை வழிபடுவது சிறப்பான பலன்களைத் தரும்.

துலா ராசி அன்பர்களே!

காரியங்களில் அனுகூலம் உண்டாகும். ஆனால்,குடும்பம் தொடர்பான முக்கிய முடிவுகள் எதையும் எடுக்கவேண்டாம். பிள்ளைகள் பிடிவாதம் பிடிப்பார்கள். கெடுபிடி காட்டாமல் அவர்களை அனுசரித்துச் செல்வது நல்லது. சிலருக்கு வேலை விஷயமாக வெளியில் செல்ல நேரிடும் என்பதால் எச்சரிக் கையுடன் இருக்கவும். இன்று சரபேஸ்வரரை வழிபடவும்.

விருச்சிக ராசி அன்பர்களே!

பணவரவு உண்டு என்றாலும் சகோதர வகையில் எதிர்பார்த்த காரியம் இழுபறியாகும். சிலருக்கு வீண் செலவுகள் ஏற்படும். கணவன் – மனைவிக்கிடையே சிறுசிறு விவாதங்கள் ஏற்படக்கூடும் என்பதால் பொறுமை அவசியம். பிள்ளைகள் வழியில் எதிர்பார்த்த காரியம் அனுகூலமாக முடி யும். மகாவிஷ்ணுவை வழிபடுவதன் மூலம் நன்மைகள் அதிகரிக்கும்.

தனுசு ராசி அன்பர்களே!

குடும்பத்தில் சிறுசிறு சலசலப்பு ஏற்பட்டாலும், சமயோசிதமாக சமாளித்து விடுவீர்கள். தேவையான பணம் கையில் இருந்தாலும் எதிர்பாராத செலவுகளும் ஏற்படக்கூடும். பிள்ளைகளின் விருப்பத்தை நிறைவேற்றுவீர்கள். கணவன் – மனைவி இருவரும் ஒருவரையொருவர் அனுசரித்துச் செல்வது நல்லது. பிள்ளைகள் வழியில் இருந்த கவலைகள் நீங்கும். இன்று அம்பிகையை வழிபடுவது மிகச் சிறப்பு.

மகர ராசி அன்பர்களே!

புதிய முயற்சிகளில் ஈடுபடுவதைத் தவிர்க்கவும். தந்தை வழி உறவுகளால் அலைச்சலும் செலவுகளும் ஏற்படும். அவசர முடிவுகளைத் தவிர்ப்பது நல்லது. சகோதரர்களால் சில பிரச்னைகள் ஏற்பட்டு நீங்கும். தேவையற்ற வீண்செலவுகள் மனதை சஞ்சலப்படுத்தும். அவசியத் தேவை என்றாலும்கூட கடன் வாங்க வேண்டாம். சிவபெருமானை வழிபட சிரமங்கள் குறையும்.

கும்பராசி அன்பர்களே!

புதிய முயற்சிகளை பிற்பகலுக்குமேல் தொடங்குவது நல்லது. எதிரிகளால் மறைமுக ஆதாயம் உண்டாகும். சகோதர வகையில் எதிர்பார்த்த காரியம் இழுபறிக்குப் பிறகு சாதகமாக முடியும். சிலருக்கு எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு உண்டு. பிள்ளைகளால் மகிழ்ச்சி உண்டு. நண்பர்கள் மூலம் ஆதாயம் கிடைக்கும். விநாயகரை வழிபடுவது நன்று.

மீனராசி அன்பர்களே!

தொடங்கும் காரியங்கள் அனுகூலமாக முடியும். அதிகப்படியான செலவுகள் ஏற்பட்டாலும் போதுமான பணவரவு இருப்பதால் சமாளித்துவிடுவீர்கள். தந்தையிடம் எதிர்பார்த்த காரியம் அனுகூலமாக முடியும். குடும் பம் தொடர்பான முக்கிய முடிவு எடுப்பதற்கு உகந்த நாள். சகோதரர்களால் ஆதாயம் உண்டாகும். உணவு விஷயத்தில் கவனமாக இருக்கவும். ஆஞ்சநேயரை வழிபடுவது நன்மைகளை அதிகரிக்கும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!