இன்றைய ராசி பலன்கள் ( ஜூன் 01 சனிக்கிழமை 2024 )

தினம் தினம் திருநாளே!’ தினப்பலன் ஜூன் 01-ம் நாளுக்கான மேஷம் முதல் மீனம் வரையுள்ள 12 ராசிக்காரர்களுக்கும் பலன்கள் எப்படி இருக்கிறது என்று நமது மின்கைத்தடியின் இப்பகுதியில் பார்க்கலாம்.

குரோதி வருடம் வைகாசி மாதம் 19 ஆம் தேதி சனிக்கிழமை 1.06.2024 சந்திர பகவான் இன்று மீன ராசியில் பயணம் செய்கிறார். இன்று காலை 06.28 வரை நவமி. பின்னர் தசமி. இன்று அதிகாலை 04.03 வரை பூரட்டாதி. பின்னர் உத்திரட்டாதி. பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சந்திராஷ்டமம். சற்று கவனமுடனும் எச்சரிக்கையுடனும் நடந்துகொள்வது அவசியம்.

மேஷ ராசி அன்பர்களே!

புதிய முயற்சிகளில் நிதானம் தேவை. தாயாரின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்தவும். வீண் செலவுகள் எதுவும் ஏற்படுவதற்கில்லை. நண்பர்கள் மூலம் பண உதவி கிடைக்க வாய்ப்பு உண்டு. வீட்டில் சிறுசிறு மராமத்துப் பணிகளை மேற்கொள்ள நேரிடும். அலுவலகப் பணிகளை முடிப்பதில் தாமதம் ஏற்படும். வியாபாரத்தில் விற்பனை சுமாராகத்தான் இருக்கும். இன்று விநாயகரை வழிபட காரியங்கள் அனுகூலமாகும்.

ரிஷப ராசி அன்பர்களே!

இன்று மனதில் தன்னம்பிக்கையும் தைரியமும் அதிகரிக்கும். குடும்பம் தொடர்பான முக்கிய முடிவு எடுப்பதற்கு உகந்த நாள். இளைய சகோதரர்கள் மூலம் ஆதாயம் கிடைக்கும். நினைத்த காரியங்கள் வெற்றிகரமாக நிறைவேறும். குடும்ப உறுப்பினர்கள் உங்கள் ஆலோசனைக்கு முக்கியத்துவம் தருவார்கள். வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் கூடுதலாக இருப்பது மகிழ்ச்சி தரும். மகாலட்சுமியை வழிபட நன்மைகள் அதிகரிக்கும்.

மிதுன ராசி அன்பர்களே!

புதிய முயற்சிகளில் ஈடுபடவேண்டாம். வழக்கமான பணிகளிலும் கவன மாக இருக்கவும். உறவினர்களிடம் எதிர்பார்த்த உதவி கிடைப்பது தாமதமாகும். அவ்வப்போது மனதில் குழப்பங்கள் ஏற்பட்டு நீங்கும். குடும்பம் தொடர்பான எந்த விஷயமாக இருந்தாலும் குடும்பப் பெரியவரின் அறிவுரையைக் கேட்டு நடப்பது நல்லது. வியாபாரத்தில் பணியாளர்களால் பிரச்னைகள் ஏற்படக்கூடும். துர்கையை வழிபட சிரமங்கள் குறையும்.

கடக ராசி அன்பர்களே!

உற்சாகமாகவும் பரபரப்பாகவும் செயல்படுவீர்கள்.நினைத்த காரியத்தை நினைத்தபடி முடிப்பீர்கள். வாழ்க்கைத்துணையுடன் ஏற்பட்டிருந்த மனவருத்தங்கள் நீங்கும். தேவையான அளவுக்கு பணம் இருப்பதால் செலவுகளை சமாளிப்பதில் சிரமம் எதுவும் இருக்காது. பிற்பகலுக்கு மேல் நண்பர்கள் மூலம் மகிழ்ச்சி தரும் செய்தி கிடைக்க வாய்ப்பு உண்டு. வியாபாரம் வழக்கம்போல் நடைபெறும். இன்று வேங்கடேச பெருமாளை வழிபட நற்பலன்கள் கூடும்.

சிம்ம ராசி அன்பர்களே!

அவசர முடிவுகளைத் தவிர்க்கவும். காரியங்களில் பொறுமை மிக அவசி யம். அதிகரிக்கும் செலவுகளால் கையிருப்பு கரையும். சிலருக்குக் கடன் வாங்கக்கூடிய சூழ்நிலை யும் ஏற்படும். தந்தையின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்தவும். வியாபாரத்தில் விற்பனை யும் லாபமும் எப்போதும்போல் இருந்தாலும் பணியாளர்களால் செலவுகள் ஏற்படக்கூடும். முருகப்பெருமானை வழிபட அனுகூலம் உண்டாகும்.

கன்னி ராசி அன்பர்களே!

பல வகைகளிலும் அனுகூலமான நாளாக இருக்கும். மனக்குழப்பங்கள் நீங்கி தெளிவு பிறக்கும். பிள்ளைகள் வகையில் மகிழ்ச்சி தரும் செய்தி கிடைக்க வாய்ப்பு உள்ளது. உறவினர்களால் ஆதாயம் கிடைக்கும். நண்பர்கள் உதவி கேட்டு வருவார்கள். வாழ்க்கைத்துணை யுடன் ஏற்பட்டிருந்த பிணக்குகள் நீங்கும். வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் கூடுதலாக இருப்பது மகிழ்ச்சி தரும். மகாவிஷ்ணுவை வழிபட மகிழ்ச்சி அதிகரிக்கும்.

துலா ராசி அன்பர்களே!

தந்தையால் ஆதாயம் கிடைக்கும். அரசாங்க வகையில் எதிர்பார்த்த காரி யம் அனுகூலமாக முடியும். தந்தைவழி உறவினர்கள் மூலம் சுபநிகழ்ச்சிக்கான பேச்சுவார்த்தை சாதகமாக முடியும். இன்று நீங்கள் தொடங்கும் புதிய முயற்சி வெற்றிகரமாக நிறைவேறும். மன இறுக்கம் நீங்கி நிம்மதி உண்டாகும். வியாபாரத்தில் பணியாளர்கள் உற்சாகத்துடன் செயல்படு வார்கள். இன்று லட்சுமி நரசிம்மரை வழிபடுவது நன்று.

விருச்சிக ராசி அன்பர்களே!

பதற்றம் இல்லாமல் செயல்படவேண்டிய நாள். தந்தையுடன் வீண் மனஸ்தாபம் ஏற்பட வாய்ப்பு உள்ளதால், அவருடன் பேசும்போது பொறுமையைக் கடைப்பிடிக்க வும். உறவினர்கள் மூலம் குடும்பத்தில் சில பிரச்னைகள் ஏற்படக்கூடும் என்பதால் கவனமாக இருக்கவும். பிள்ளைகளின் விருப்பத்தை நிறைவேற்றுவீர்கள். வியாபாரம் வழக்கம்போல நடைபெறும். பணியாளர்கள் பணம் கேட்டு நச்சரிப்பார்கள். தட்சிணாமூர்த்தியை வழிபட தடைகள் விலகும்.

தனுசு ராசி அன்பர்களே!

புதிய முயற்சிகளைக் கண்டிப்பாகத் தவிர்த்துவிடவும். அவ்வப்போது சற்று சோர்வு உண்டாகும். கணவன் – மனைவிக்கிடையே கருத்துவேறுபாடு ஏற்படக்கூடும் என்பதால் ஒருவரையொருவர் அனுசரித்துச் செல்வது நல்லது. உறவினர்கள் தலையீடு காரணமாகக் குடும்பத் தில் குழப்பம் ஏற்பட்டு நீங்கும். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களால் சில பிரச்னைகள் ஏற்பட வாய்ப்பு உள்ளதால், அவர்களுடன் கனிவாக நடந்துகொள்ளவும். ஆஞ்சநேயர் வழிபாடு அல்லல் தீர்க்கும்.

மகர ராசி அன்பர்களே!

மனதில் உற்சாகம் பெருக்கெடுக்கும். கணவன் – மனைவிக்கிடையே ஏற்பட்டு இருந்த கருத்துவேறுபாடு நீங்கி, அந்நியோன்யம் அதிகரிக்கும். வாழ்க்கைத்துணைவழி உறவினர்கள் மூலம் எதிர்பார்த்த காரியம் அனுகூலமாக முடியும். பிள்ளைகள் உங்கள் விருப்பப் படி நடந்துகொள்வார்கள். நண்பர்கள் கேட்கும் உதவியை மகிழ்ச்சியுடன் செய்து தருவீர்கள். வியாபாரத்தில் லாபம் கூடுதலாகக் கிடைக்கும். பைரவர் வழிபாடு நலம் சேர்க்கும்.

கும்பராசி அன்பர்களே!

எதிர்பார்த்த பணம் கைக்கு வரும். சகோதரர்கள் மூலம் ஆதாயம் உண் டாகும். எதிரிகளால் ஏற்பட்ட இடையூறுகள் நீங்கும். உடல் ஆரோக்கியம் மேம்படும். முயற்சிகள் சாதகமா கும். கடனாகக் கொடுத்த பணம் திரும்பக் கிடைக்கும். அதிகாரிகளின் ஆதரவால் எதிர்பார்த்த சலுகை கிடைக்கும். வியாபாரத்தில் விற்பனை அதிகரிக்கும். சக வியாபாரிகளால் ஏற்பட்ட இடையூறுகளை முறியடிப்பீர்கள். துர்கை வழிபாடு நலம் சேர்க்கும்.

மீனராசி அன்பர்களே!

ஆன்மிகத்தில் நாட்டம் அதிகரிக்கும். சிலருக்கு தெய்வப் பிரார்த்தனையை நிறைவேற்றும் வாய்ப்பு ஏற்படும். தாயின் அன்பும் ஆதரவும் மனதுக்கு உற்சாகம் தரும். புதிய முயற்சிகளில் யோசித்து ஈடுபடுவது நல்லது. பிற்பகலுக்கு மேல் பிள்ளைகளால் வீண் செலவுகள் ஏற்படும். அக்கம்பக்கத்தில் இருப்பவர்களுடன் அனுசரணையாக நடந்துகொள்ளவும். வியாபா ரத்தில் வழக்கமான நிலையே காணப்படும். முருகப்பெருமானை வழிபடுவது நன்று.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!