இன்றைய ராசி பலன்கள் ( மே 13 திங்கட்கிழமை 2024 )

 இன்றைய ராசி பலன்கள் ( மே 13 திங்கட்கிழமை 2024 )

தினம் தினம் திருநாளே!’ தினப்பலன் மே 13-ம் நாளுக்கான மேஷம் முதல் மீனம் வரையுள்ள 12 ராசிக்காரர்களுக்கும் பலன்கள் எப்படி இருக்கிறது என்று நமது மின்கைத்தடியின் இப்பகுதியில் பார்க்கலாம்.

குரோதி வருடம் சித்திரை மாதம் 30 ஆம் தேதி திங்கட்கிழமை 13.05.2024சந்திர பகவான் இன்று கடக ராசியில் பயணம் செய்கிறார். இன்று அதிகாலை 05.28 வரை பஞ்சமி. பின்னர் சஷ்டி இன்று பிற்பகல் 02.44 வரை புனர்பூசம். பின்னர் பூசம். விசாகம் அனுஷம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சந்திராஷ்டமம். சற்று கவனமுடனும் எச்சரிக்கையுடனும் நடந்துகொள்வது அவசியம்.

மேஷ ராசி அன்பர்களே!

மனதில் குழப்பம் ஏற்பட்டு நீங்கும். தாய்வழியில் வீண் செலவுகள் ஏற்படக்கூடும். வாழ்க்கைத்துணையுடன் அனுசரித்துச் செல்லவும். உறவினர்களால் சில பிரச்னைகள் ஏற்பட்டாலும் பாதிப்பு இருக்காது. தாய்மாமன் மூலம் எதிர்பார்த்த உதவி கிடைக் கும். வியாபாரத்தில் எதிர்பாராத செலவுகளால் மனதில் சஞ்சலம் ஏற்படும். இன்று வேங்கடேச பெருமாளை வழிபடுவது நன்று.

ரிஷப ராசி அன்பர்களே!

வழக்கமான பணிகளில் மட்டுமே கூடுதல் கவனம் செலுத்தவும். சகோதர வகையில் எதிர்பார்த்த உதவி கிடைப்பது தாமதமாகும். கொடுத்த கடன் திரும்பக் கிடைப்பதற்கு வாய்ப்பு உள்ளது. எதிரிகளால் ஏற்பட்ட இடையூறுகள் நீங்கும். உறவினர்களால் சில சங்கடங்கள் ஏற்படக்கூடும். வியாபாரத்தில் லாபம் கூடுதலாக இருந்தாலும் வீண் செலவுகளும் ஏற்படும். விநாயகர் வழிபாடு நலம் சேர்க்கும்.

மிதுன ராசி அன்பர்களே!

உற்சாகமான நாள். காரியங்களில் அனுகூலம் உண்டாகும். குடும்பத்தில் பெரியவர்களின் ஆலோசனை பயனுள்ளதாக இருக்கும். எதிரிகளின் சூழ்ச்சிகளை முறியடிக்கும் திறன் அதிகரிக்கும். பிள்ளைகளின் பிடிவாதப் போக்கு மாறி உங்கள் விருப்பப்படி நடந்துகொள் வார்கள். வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் வழக்கம்போலவே இருக்கும். இன்று அம்பி கையை வழிபடுவது நன்று.

கடக ராசி அன்பர்களே!

மகிழ்ச்சி தரும் நாள். வாழ்க்கைத்துணையுடன் ஏற்பட்டிருந்த மனவருத்தம் நீங்கி அந்நியோன்யம் அதிகரிக்கும். பிள்ளைகளால் சில பிரச்னைகள் ஏற்பட்டு நீங்கும்.தந்தைவழி உறவினர்களால் வீண் செலவுகள் ஏற்படும். முக்கிய முடிவு ஒன்றை துணிச்சலுடன் எடுப்பீர்கள். குடும்பத்தில் உறவினர்களால் ஏற்பட்ட குழப்பங்கள் நீங்கும். வியாபாரத்தில் விற்பனையும் லாப மும் கூடுதலாக இருக்கும். சரபேஸ்வரர் வழிபாடு நன்று.

சிம்ம ராசி அன்பர்களே!

புதிய முயற்சி சாதகமாக முடியும். காரியங்களில் அனுகூலம் உண்டாகும். கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். ஆனால், உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனம் தேவைப்படுகிறது. வாழ்க்கைத்துணையின் ஆலோசனை பயனுள்ளதாக இருக்கும். தந்தையிடம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் எதிர் பார்த்ததைவிட கூடுதலாக இருக்கும். தட்சிணாமூர்த்தி வழிபாடு நன்று.

கன்னி ராசி அன்பர்களே!

சுறுசுறுப்பாகச் செயல்படும் நாள். இளைய சகோதர வகையில் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். தந்தையின் தேவையை நிறைவேற்றும் வகையில் சற்று அலைச்சலும் சோர்வும் ஏற்படும். அக்கம்பக்கத்தில் இருப்பவர்களால் ஏற்பட்ட பிரச்னைகள் நீங்கும். வியாபாரத்தில் விற் பனையும் லாபமும் கூடுதலாக இருப்பது மகிழ்ச்சி தரும். பணியாளர்கள் நல்லபடி ஒத்துழைப்பார் கள். இன்று ஆஞ்சநேயரை வழிபடுவது நன்று.

துலா ராசி அன்பர்களே!

மனதில் உற்சாகம் பெருக்கெடுக்கும். கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். பணப்புழக்கம் இருந்தாலும் திடீர் செலவுகளால் கையிருப்பு குறையக்கூடும். வாழ்க்கைத்துணைவழியில் எதிர்பார்த்த காரியம் இழுபறியாகி முடியும். வியா பாரத்தில் விற்பனை சற்று மந்தமாகத்தான் இருக்கும். பணியாளர்களால் செலவுகள் ஏற்படும். இன்று முருகப்பெருமானை வழிபட நன்மைகள் கூடும்.

விருச்சிக ராசி அன்பர்களே!

இன்று புதிய முயற்சிகளில் ஈடுபடவேண்டாம். வாழ்க்கைத்துணை யுடன் அனுசரித்துச் செல்வது நல்லது. குடும்பப் பொறுப்புகளின் காரணமாக அலைச்சல் ஏற்படும். தந்தையிடம் எதிர்பார்த்த பண உதவி கிடைக்கும். வழக்கமான பணிகளில் பொறுமையுடன் செயல்படவும். வியாபாரத்தில் போட்டிகள் குறைந்து விற்பனை அதிகரிப்பது உற்சாகப்படுத்தும். இன்று துர்கையை வழிபடுவது நன்று.

தனுசு ராசி அன்பர்களே!

எதிலும் பொறுமையைக் கடைப்பிடிக்கவேண்டிய நாள். புதிய முயற்சி களைத் தவிர்ப்பது நல்லது. மற்றவர்களுடன் பேசும்போது பொறுமையைக் கடைப்பிடிக்கவும். சிலருக்கு நண்பர்கள் மூலம் மகிழ்ச்சி தரும் செய்தி கிடைப்பதற்கு வாய்ப்பு உள்ளது. கணவன் – மனைவிக்கிடையே ஏற்பட்டிருந்த மனஸ்தாபம் நீங்கும். வியாபாரம் சுமாராகத்தான் இருக்கும். சிவவழிபாடு சிரமங்களைக் குறைக்கும்.

மகர ராசி அன்பர்களே!

பல வகைகளிலும் அனுகூலமான நாள். சகோதரர்கள் பண உதவி கேட்டு வருவார்கள். தந்தைவழியில் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். அரசாங்கக் காரியம் அனுகூலமாக முடியும். செலவுகள் அதிகரித்தாலும் சமாளித்துவிட முடியும். வாழ்க்கைத்துணைவழி உறவுகளால் சில சங்கடங்கள் ஏற்பட்டு நீங்கும். வியாபாரத்தில் விற்பனை வழக்கம்போல் இருந்தாலும், வாடிக்கையாளர்களால் சில பிரச்னைகள் ஏற்படும். விநாயகர் வழிபாடு நன்று.

கும்பராசி அன்பர்களே!

நீண்டநாள்களாக எதிர்பார்த்து ஏமாந்த பணம் இன்று கைக்கு வந்து மகிழ்ச்சி தரும். சிலருக்கு தந்தையுடன் மனக்கசப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளதால் அவருடன் அனுசரணையாக நடந்துகொள்ள முயற்சி செய்யவும். அக்கம்பக்கத்தில் இருப்பவர்களால் சில பிரச்னைகள் ஏற்பட்டாலும் பாதிப்பு எதுவும் இருக்காது. வியாபாரத்தில் பணியாளர்களின் ஒத்துழைப்பு நன்றாக இருக்கும். அம்பிகையை வழிபடுவது நன்று.

மீனராசி அன்பர்களே!

சிந்தித்துச் செயல்படவேண்டிய நாள். அடிக்கடி மனதில் சஞ்சலம் ஏற்பட்டு நீங்கும். தாயின் தேவையை நிறைவேற்ற சிறிது அலையவேண்டியிருக்கும். உடல்நலனில் கவனம் தேவை. வீட்டில் பொறுப்புகள் அதிகரிக்கும் என்பதால் சற்று சோர்வு உண்டாகும். பணியிடத்தி லும் சில சங்கடங்கள் ஏற்படக்கூடும். பொறுமை அவசியம். வியாபாரம் வழக்கம்போலவே இருக்கும். தட்சிணாமூர்த்தி வழிபாடு நலம் சேர்க்கும்.

சதீஸ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...