இன்றைய முக்கிய செய்திகள்

நாமக்கலில் முட்டை கொள்முதல் விலை 17 காசு சரிந்து ரூ.3.70 ஆக நிர்ணயம். நாமக்கலில் முட்டை கொள்முதல் விலை கடந்த 4 நாட்களில் 45 காசு சரிந்துள்ளது.

நாடு முழுவதும் இன்று வழக்கறிஞர்கள் சார்பில் போராட்டம் நடத்தப்பட்ட நிலையில், போராட்டத்தை கைவிட்டு நாளை முதல் பணிக்கு திரும்புமாறு இந்திய பார் கவுன்சில் கோரிக்கை விடுத்துள்ளது.


காவலர்கள் விடுப்பு எடுக்கத் தடை! வரும் 10ம் தேதி முதல் மறு உத்தரவு வரும் வரை, காவல் அதிகாரிகள் விடுப்பு எடுக்கக் கூடாது – டிஜிபி

மகாராஷ்டிரா மாநிலம், நாசிக்கிலிருந்து  வெங்காயத்தை  கொள்முதல்  செய்வதற்காக தமிழ்நாடு கூட்டுறவு விற்பனை இணைய அலுவலர்கள் நாசிக் சென்றுள்ளனர். நாசிக் பகுதியில் கொள்முதல் செய்யப்படும் வெங்காயத்தை தமிழக பண்ணை பசுமை கடைகள் மூலம் விற்பனை செய்யப்படும் – தமிழக அரசு

5, 8ம் வகுப்பு பொதுத்தேர்வுகளுக்கு, மாணவர்களை தயார்படுத்த தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தல். தேர்வு தேதிகள் மாவட்டத்தைப் பொறுத்து மாறுபடும் எனவும் பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.

ஈரோடு: கைத்தறி மற்றும் துணிநூல் துறை உதவி இயக்குனர் அலுவலகத்தில், இரண்டு நாட்கள் நடைபெற்ற லஞ்ச ஒழிப்பு சோதனையில், ரூ.31.80 லட்சம் பறிமுதல்.

மருத்துவ படிப்பு சேர்க்கையில் அடுத்த முறைகேடு அம்பலம். 5 தனியார் மருத்துவ கல்லூரிகளில், 5 மாணவர்கள் முறைகேடாக சேர்ந்தது கண்டுபிடிப்பு. எம்.ஜி.ஆர்., மருத்துவ பல்கலைக்கழகம் தீவிர விசாரணை.

தமிழகத்தில் கால்நடைகளுக்கான ஆம்புலன்ஸ் சேவையை விரிவுபடுத்தும் திட்டத்தை முதலமைச்சர் பழனிசாமி தொடங்கி வைத்தார்.

டெல்லி காவல்துறை தலைமையகத்தில் போலீசார் திடீர் போராட்டம்! நாட்டிலேயே முதன்முறையாக போலீசார் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு. டெல்லி காவல் ஆணையர் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் போராட்டத்தை கைவிட நேரில் வேண்டுகோள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!