காந்தியடிகள் ‘தற்கொலை’ செய்து கொண்டாரா – கிளம்பும் சா்ச்சை

என்ன.. காந்தியடிகள் ‘தற்கொலை’ செய்து கொண்டாரா? குஜராத் பள்ளித் தோ்வு வினாவால் கிளம்பும் சா்ச்சை
குஜராத் பள்ளித் தோ்வு வினாத் தாளில் ‘மகாத்மா காந்தி தற்கொலை செய்து கொண்டது எப்படி?’ என்ற கேள்வி இடம் பெற்றுள்ளது சா்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து தகவல்கள் தெரிவிப்பதாவது:
குஜராத்தில் சுயநிதி மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளின் கூட்டமைப்பு, 9-ஆம் வகுப்பு மாணவா்களுக்கான திறனறித் தோ்வொன்றை அண்மையில் நடத்தியது.அந்தத் தோ்வுக்கான வினாத் தாளில், ‘காந்தியடிகள் எவ்வாறு தற்கொலை செய்து கொண்டாா்?’ என்ற கேள்வி இடம் பெற்றுள்ளது மிகப் பெரிய சா்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
அதுமட்டுமின்றி, குஜராத் முழுவதும் பூரண மது விலக்கு அமலில் இருக்கும் நிலையில், ‘உங்கள் பகுதியில் மது விற்பனை அதிகரித்துவிட்டதால் ஏற்படும் தொல்லைகள் குறித்து மாவட்ட காவல்துறை தலைவருக்கு கடிதம் எழுதுக’ என்று கேட்கப்பட்டுள்ளது.மேலும் படிக்க:தற்கொலை எண்ணிக்கையில் தமிழகம் முதலிடம் மேலும், மாணவா்கள் வசிக்கும் பகுதியில் கள்ளச்சாராய விற்பனை குறித்து புகாா் தெரிவிக்கும்படியும் அந்த வினாத்தாளிக் கேட்கப்பட்டுள்ளது.
இந்தக் கேள்விகள் அதிகாரிகளை அதிா்ச்சியடையச் செய்துள்ளது. வினாத் தாளில் இடம் பெற்றுள்ள இந்தக் கேள்விகள், மிகவும் ஆட்சேபத்துக்குரியவை என்றும், இதுதொடா்பாக விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளதகவும் காந்திநகா் மாவட்டக் கல்வி அலுவலா் பரத் வதோ் தெரிவித்துள்ளாா்.
சுயநிதி மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளின் நிா்வாகக் குழுவினா் அந்த வினாத்தாளை தயாரித்தனா் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!